நாலு நாள் சூட்டிங்
மகாபலிபுரமே களைக்கட்டிவிட்டது
-சந்திரா லக்ஷ்மண்
ஜெயா டிவியில் சிவபக்த்தையாகவும், சன்டிவியில் குழந்தையை தொலைத்துவிட்டு தேடும் தாயாகவும் அந்தந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றிக்கொள்ளும் சந்திரா லக்ஷ்மனை மலையாள மணம் கமழும்அவரது இல்லத்தில் சந்தித்தோம். சூட்டிங் இல்லையா என்றதும் பள்ளிக் குழந்தைகளைப் போல் ரெண்டு நாள் பிரேக் என்று உற்சாகத்தோடு சொல்லிவிட்டு நம்மோடு ஜாலியாக பேசினார்…
முதல்ல உங்களைப் பற்றி செல்லுங்க? எப்படி இந்த பில்டுக்கு வந்தீங்க?
நான் ஒரு கேரளா பிரமணப்பெண். ஓட்டல் மேனேஜ்மண்ட் படிச்சிருக்கேன் திரைத்துறைக்கு வந்து பத்து வருடங்கள் ஆகிறது. ஆரம்பத்தில் மலையாள படங்கள் , தொடர்கள் நடித்துக்கொண்டிருந்தேன். ஒரு மூன்று வருடங்களாக தமிழ் இன்டஸ்ட்ரியில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.எங்க அப்பா இந்துஸ்தான் லீவரில் ஓர்க் பண்ணினார்,அம்மா பேங்க்ல ஓர்க் பண்றாங்க.என்னோட கூட பிறந்தவங்க யாரும் இல்லை நான் ஒரே பெண். பரதநாட்டியம் இரண்டரை வயதில் இருந்து கற்றுக்கொண்டடேன்.
எல்லாரும் சொல்லுவது மாதிரி தான் ஆக்ஸிடன்ட்டா நானும் வந்தேன். ஓட்டல் மெனேஜ்மண்ட் படிக்கும் போது ஆறு மாதம் ஏதாவது ஒரு ஓட்டல்ல டிரைனீங் போடுவாங்க. அந்த மாதிரி எனக்கு பார்க் ஷர்டன் ஓட்டல் போட்டாங்க. அங்கே நிறைய சினிமா ஆட்கள் வருவாங்க. அதில் யாரோ என்னை பார்த்து விட்டு சினிமாவுக்கு அழைத்தார்கள். அதற்கு முன்னாடியே ஒரு முறை நண்பர்களோட ஒய்.எம்.சி.ஏ போய் இருந்தோம் அங்கே “ஏப்ரல் மாதத்தில்” சூட்டிங் நடந்தது அப்போ அந்த இடத்தில் என்னை பார்த்துவிட்டு நடிக்க கேட்டாங்க எனக்கு டிரைனீங் போய்கிட்டு இருந்தால முடியாதுன்னு சொல்லிட்டேன். எல்லாரும் ரொம்ப கம்பல் பண்ணதால ரெண்டு ஷாட் ஸ்ரீகாந்த் காம்பினேஷன்ல நடித்தேன். அதுக்குபிறகு காண்டினியூ பண்ணல. ஸ்டேன்லி சார் இப்போ ரிசன்ட்டா பார்த்தப்போ கூட கேட்டார் சினிமாவுக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டு இப்போ பாருங்க அதே பீல்டுக்கு தான் வந்திருக்கேன்னு. “மனசெல்லாம்” படத்துக்கு கூப்பிட்டப்போ தான் நினைத்தேன் நமக்கு நடிகையாகனும் தான் தலையில் எழுதியிருக்கு போல என்று நினைத்து கொண்டு. எனக்கு பிலிம் பேக் ரவுண்ட் கிடையாது. யார்கிட்ட கேட்பதுனு தெரியல அதனால சாமி முன்னாடி சீட்டு குலுக்கிப் போட்டு பார்த்தோம். அதில் முன்று முறையும் நடிகைன்னு தான் வந்தது. பிறகு தான் இந்த பீல்டுக்கு வந்தேன்.
ஜெயா டிவியில் வருகிற “பூவும் பொட்டும்” தொடரில் என்ன மாதிரியான கேரக்டர்?
“பூவும் பொட்டும்” தொடரில் சிவபக்ததையாக பக்தசிரோன்மணியாக நடிக்கிறேன். அச்சாரமான தமிழ்ப் பெண்ணாக வருவேன். பெரிய பெரிய குங்குமப் பொட்டு வைத்துக்கொண்டு தழைய தழையே ஜடைப் போட்டுக் கொண்டு வருவது போல் இருக்கும்.
“வசந்தம்” தொடரில் குழந்தையை தொலைத்துவிட்டு தேடும்போது உங்கள் மனநிலை எப்படி யிருந்தது?
இது வரைதுறுதுறுவென்று வருவது போலவும் போல்டாக வருவது போலவும் யங் கேரக்டர் தான் நடித்துக்கொண்டிருந்தேன். “வசந்தம்” தான் என் முதல் மெச்சூரான ரோல்.எல்லாவிதமான தியாகமும் சகித்துக் கொள்ளும் கேரக்டர்.குழந்தையை தொலைத்துவிட்டு தேடும் அந்த காட்சிகளில் எல்லாம் ஒரு தாயின் வலியை உணர்ந்தேன். நிறைய பேர் எனக்கு போன் செய்து பாராட்டினாங்க. அந்த சீன் ரொம்ப நல்லா செய்திருந்தீங்கன்னு சொன்னாங்க.
“காதலிக்க நேரமில்லை” தொடர் ஏன் பாதியில் நின்றுவிட்டது? அதில் உங்கள் நடிப்பு பிரமாதமாக இருந்தே? சிங்கப்பூரில் நடந்த மறக்க முடியாத அனுபவம் என்ன?
பாதியில் நிற்கவில்லை. பிரஜனோட என்னோட டிராக் மட்டும் நின்றுவிட்டது. கதை மாறிபோனதுனால விரைவாக முடித்துவிட்டார்கள்.இப்போ கூட நிறைய பேர் என்னிடம் காதலிக்க நேரமில்லை தொடர் பற்றிதான் ரொம்ப விசாரிப்பார்கள். அந்த தொடரின் டைட்டில் சாங் பற்றி நிறைய சொல்வார்கள். அது ஒரு படத்தின் பாடலுக்கு இணையாக இருந்தது. இன்னமும் நிறைய பேர் அந்த டைட்டில் சாங்கை தான் செல்போன்னில் காலர் டியுன்னாக வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு தொடருக்காக சிங்கப்பூர் வரை போனதே மறக்க முடியாத அனுபவம் தான். அந்த தொடருக்காக என்சொந்த குரலில் டப் செய்ததும், முதன் முறையா என்குரலை ஸ்கீரின்ல கேட்டதும் மறக்கவே முடியாது.
நாங்கள் கேரளாவில் இருந்த தமிழ் பிராமின் என்பதால “மைக்கேல் மதன காமராஜன்” படத்தில் வருகிற கமல் போல தான் வீட்டில் தமிழில் பேசிக்கொள்வோம். எப்பவுமே ஆத்துக்கு போறேன், போய்ன்றிருக்கேன்.இப்படி தான் வரும் ஆனால் அந்த தொடரில் தேவர் பொண்ணு கேரக்டர். அந்த சாலங்கே வேற மாதிரி இருக்கனும். அடிக்கடி பேசும் போது என் தமிழ் வந்திடும். பிரஜன் மலையாளி ஆனா அவர் மலையாளத்தை விட தமிழ் தான் நல்லா பேசுவார். அதே மாதிரி அந்த தொடரின் டைரக்டரும் ஒரு மலையாளி நான் பேசும் போது தப்பு வந்தா க்ரைக்ட்டா கண்டு பிடிச்சிடுவார். இப்போஇந்தளவுக்கு தமிழ் பேசுறேன்னா அது அந்த தொடர் முலமா தான்.
மலையாளத்தில் சினிமாவில் நடித்துவிட்டு, இங்கே சீரியலில் நடிக்க வந்த போது எப்படி பீல் பண்ணிங்க? என்ன வித்தியாசம் உணர்ந்தீங்க?
மலையாளத்திலும் சீரியல் நிறைய நடித்திருக்கிறேன். அங்கே ஒரு படத்தோட செட்டப் எப்படியிருக்குமோ அந்த செட்டப் இங்கே சீரியலுக்கே இருக்கும். அங்கே படத்திற்கு இருக்கும் பிரமாண்டம் இங்கே சீரியல்ல இருக்கும்.
நிறைய வித்தியாசம் இருக்கு. ஓர்க்கிங் ஸ்டைல், பட்ஜட், ஓர்க்கிங் டைம் என எல்லாத்துலையும் வித்தியாசம் இருக்கும். மலையாள, கன்னட இண்டஸ்ட்ரி கொஞ்சம் சிறியது காம்பெக்ட்டா இருக்கும். அதே சமயத்தில் ரொம்ப நல்ல ஸ்டப்புள்ள படங்களை தயாரிப்பார்கள். தமிழ் இண்டஸ்ட்ரி பெரிய இன்டஸ்ட்ரி . இங்கே டெக்னீக்கல இருந்து எல்லாவற்றிலும் ரொம்ப அட்வான்ஸா இருக்கும். இங்கே நிறைய டைம் கிடைக்கும். அங்கே கால்ஷிட் எல்லாம் கிடையாது. இரவு ஒன்பதரை,பத்துவரைக்கும் ஓர்க் பண்ண வேண்டியிருக்கும். இங்கே கால்ஷிட் வைத்து ஓர்க் பண்றது ரொம்ப காம்பட்டபுளா இருக்கு.
“ஜோடி நம்பர் ஒன்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதியில் வெளியேறி விட்டீர்களே அப்போ என்ன நினைத்தீர்கள்?
பாதியில் வெளியேற வில்லை. அந்த நேரத்தில் எங்களுக்கு டைட் ஷெட்யூல் போய்கிட்டு இருந்ததால அதில் கலந்து கொள்ளவே ரொம்ப யோசித்தோம். இருந்தாலும் எல்லாரும் நிறைய நம்பிக்கை கொடுத்தார்கள். அப்போ நாங்கள் தான் ஹிட்ஜோடியாக இருந்ததால கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டிருந்தது. டான்ஸ்பிராக்டிஸ் பண்ண எங்களுக்கு நேரமே கிடையாது . முதல் ரவுண்டிலேயே எளிமினேட் ஆகிவிடுவோம் என்று நினைத்தோம். இருந்தாலும் டிரைப் பண்ணிப் பார்க்கலாம் என்று தான் கலந்து கொண்டோம். அந்த சமயத்தில் நான் கேரளாவில் தான் தங்கியிருந்தேன். கேரளாவுக்கும் சென்னைக்கும் போய்ட்டு போய்ட்டு வருவது ரொம்ப கஷ்டமாக இருந்தது. நாங்கள் எதிர்பார்த்த மாதிரி வெளியேறிவிட்டோம்.
பெரியத்திரையில் வாய்ப்புகள் வருகிறதா?
இப்போ ரிசண்ட்டா நிறைய படத்தில் இருந்து கூப்பிட்டார்கள். படங்கள் நிறைய நடிப்பதற்கு ஆசையிருக்கிறது. ஆனால் லீட் ரோல் தான் பண்ணுவேன் கிடையாது. ஒரு படத்தில் நடித்தால் அதில் என்னை ஆடியன்ஸ் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த மாதிரி ரோல்ஸ் பண்ணனும்.கிளமர் எல்லாம் ஒரளவுக்கு தான்பண்ணுவேன். சினேகா பண்றளவுக்கு தான் எனக்கு இன்ட்ரஸ்ட்.
இப்போ மூன்று படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஒண்ணு “தில்லாலங்கடி” அதில் மூவி ஓப்பனிங்கே நானும், சத்தியன் சார், தமன்னா தான் வருவோம்.”கிக்”ங்கிற தெலுங்கு படத்தோட ரீமேக் இது. ரொம்ப காமடியா மிக்ஸ்டாஇருக்கும். நாலைந்து நாள் சூட்டிங் மகாபலிபுரத்தில் இருந்தது மகாபலிபுரமே களைக்கட்டி விட்டது. ராஜா சார் தான் டைரக்டர் பண்றார். டைரக்டர், ஆர்ட்டிஸ்ட்ன்னு இல்லாம அந்த டீம்மே ரொம்ப ஜாலியா இருந்தது.
அடுத்தது சத்யஜோதி பிலிம்ஸோட “டூவன்ட்டி டூவன்ட்டி” நடிக்கிறேன். ஹீரோவோட அக்காவா பண்றேன். அதற்கு அடுத்து பி.வாசு சாரோட படம் அது பிப்ரவரி தான் ஸ்டார்ட் பண்றாங்க.
என்ன மாதிரி கேரக்டர்ஸ் பிடிக்கும்? நடிக்க விரும்புகிறீர்கள்?
ஆரம்பத்தில் இருந்தே ரொம்ப செல்க்டீவ்வான கேரக்டர்ஸ் தான் நான் பண்றேன். ஒரு எக்ஸ்பிரிமண்ட்டான கேரக்டரா இருக்கனும். அதே மாதிரி எல்லாவிதமான கேரக்டரும் பண்ணனும். அப்போ தான் ஒரு ஆர்டிஸ்ட்டா கம்ப்ளிட் ஆவதாக அர்த்தம்.மலையாளத்தில் என் முதல் படம் பிர்த்விராஜ் கூட பண்ணினேன், அதில் ரொம்ப மென்மையான நன் ரோல் பண்ணினேன். நான் பெஸிக்காவே ரொம்ப ஸ்ஃபட் என்பதால ரொம்ப கஷ்டமா தெரியவில்லை. அதை தொடர்ந்து உடனே ஒரு சீரியல்ல பக்கா நெகட்டீவ் ரோல் வந்தது. அதுக்கு முன்னாடி ரொம்ப மென்மையாபார்த்துவிட்டு உடனே அப்படி உதாரித்தனமான ரொம்ப ஹார்டான கேரக்டர்ல பார்க்கும் போது ரொம்ப ரீச் ஆச்சு. எல்லாரும் அப்ரிஷியேட் பண்ணாங்க.இன்னைக்கும் அந்த கேரக்டர் பேர்ல தான் கூப்பிடுறாங்க.
அதை தொடர்ந்து சைக்கோவா பண்ணினேன்.சினிமா சீரியல்ன்னு வித்ததியாசம் எதுவும் நான் பார்க்கவில்லை. என்ன கேரக்டர் பண்றேன் என்பது தான் முக்கியம். அதனால தான் “வசந்தம்” செலக்ட் பண்ணினேன். “காதலிக்க நேரமில்லை” தொடரில் ரொம்ப மார்டனான பொண்ணு. அப்படியே டோட்டல் டிபரண்ட் “வசந்தம்”.
டான்ஸ் பிராக்டிஸ் செய்ய நேரம் கிடைக்கிறதா?
நாட்டியம் எல்லாம் பத்தாவது படிக்கும் போதே நிறுத்திவிட்டேன். அரங்கேற்றம் பண்ணவில்லையேன்றாலும். அதை விட அதிகமமா கற்றக்கொண்டேன். என்னோட முதல் டான்ஸ் குரு. சாந்தி கிருஷ்ணா அவர்கள் தான் “மணல் கயிறு” படத்தில் எஸ்.வி.சேகருக்கு ஜோடியா நடித்தார்களே அவர்கள்தான்.
சினிமாத்துறையில் வேறு என்ன பீல்டு பிடிக்கும்?
டெக்னீக்கல் சைட் எனக்கு ரொம்ப பிடிக்கும். சின்ன வயதிலிருந்தே போட்டோ கிராபி ரொம்ப பிடிக்கும். அந்த பில்டில் வர தான் ஆசை.சினிமாட்டோகிராபி வரலாம். டைரக்ஷன் பிடிக்கும். அந்தளவிற்கு எனக்கு திறமை இருக்கான்னு தெரியாது. ஆசை, கனவெல்லாம் இருக்கு.