நித்தம் நித்தம் என் நினைவில் வந்து
யுத்தம் செய்தாய் என்உயிரே!
ஒராயிரம் முறை எனக்கு
நானேகேட்டு கொண்டேன்
நீ எனக்குள்இருப்பது நிஜம் தானா என்று!
எத்தனை முறை நீ சொல்ல கேட்டிருந்தாலும்
மறுபடியும் மறுபடியும் கேட்டு தூண்டுகிறது
உனக்குள் நான் வந்ததை பற்றி!
உரைந்து கிடக்கிறேன் உன்னுள் நான்
பிரித்து எடுப்பது உன்னால் சாத்தியமா?
அழகே என்றாய் நான்அழகில்லாத போதிலும்.
அன்பே என்றாய் நான்கோவப்பட்ட போதிலும்.
தொட்டும், தொடாமலும் நீ உரசிய போதெல்லாம்
எனக்குள் உயிர்த்து எழுந்தது காதல்!
உன் ஸ்பரிசம் நினைவில் வந்து
உரசிய போதெல்லாம் பட்டாம்பூச்சியாய்
சிறகடித்தது என்மனம்!.
No comments:
Post a Comment