'செல்லமே'- தொடரில் சம்பந்தமே இல்லாமல் சிரிச்சுக்கிட்டே இருக்கும் சோனியாவை அவரது வீட்டில் சந்தித்தோம்.
''என்னங்க இப்படித் திடீர்ன்னு சிரிப்பதை விட்டு விட்டு பழிவாங்குதில் இறங்கிட்டீங்க'' என்றவுடன் கலகலவெனச் சிரிக்கத் தொடங்கி விட்டவரை நிறுத்தி சற்று சீரியஸôகப் பேச வைத்தோம்:
'ஆமாம். இப்போது சிரிக்க முடியவில்லையே என்று கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. கதையோட களம் எல்லாம் மாறிப்போனதுனால இப்போது சிரிக்க முடியவில்லை. இருந்தாலும் சிரிப்பதற்கு முயற்சி செய்துகிட்டுத்தான் இருக்கிறேன். இந்தத் தொடரில் என் அம்மா இறந்துபோன பிறகு கதை கொஞ்சம் மாறி ரொம்ப சீரியஸôன சீன்ஸ் போய்க்கிட்டு இருக்கிறது. ராதிகா மேடமை எதிர்த்து யாராவது சண்டை போட வேண்டியிருப்பதினால், அது நாத்தனாராக இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் என்னால் சிரிக்க முடியாமல் போய்விட்டது. எவ்வளவு கஷ்டமான கதாபாத்திரமாக இருந்தாலும் செய்துவிடலாம். ஆனால், எல்லாரையும் சிரிக்க வைப்பதுதான் சிரமம்.
இந்தச் சிரிப்பு பாத்திரத்திற்காகவே வீட்டிற்குப் போய் கண்ணாடி முன்னால நின்று ஒரு மணிநேரம் சிரித்துப் பழகுவேன். என் கணவர் பார்த்துவிட்டு உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்று கேட்பார். கொஞ்ச நாள் அந்த மாதிரியேதான் திரிந்தேன். வெளியில் போகிறபோது சின்னச்சின்ன குழந்தைகள்கூட என்னைப் பார்த்ததும் சிரிக்கத் தொடங்கிவிடுவார்கள்.'
இப்பொழுது எத்தனை தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
'செல்லமே', 'மாதவி' என்று இரண்டு தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டுமே வேறுவேறு வித்தியாசமான கதாபாத்திரங்கள். 'செல்லமே'வில் எல்லாரும் திட்டுவது மாதிரி பாத்திரம். மாதவியில் எல்லாரும் பார்த்து பரிதாபப்படுகிற பாத்திரம். இப்படி ஒரே நேரத்தில் இரண்டு வித்தியாசமான பாத்திரங்கள் செய்வது நல்ல அனுபவமாக இருக்கிறது. அதோடு 'ராம ராவணன்','மூன்று முகம்' என சில மலையாள படங்களில் நடிச்சுக்கிட்டு இருக்கேன்.
உங்கள் கணவரை இப்பொழுது தொடர்களில் பார்க்க முடியலையே?
மூன்று வருடங்களாக அவர் தொடர்களில் நடிப்பதில்லை. இது வரை மூன்று தொடர்களில்தான் நடித்திருக்கிறார். பெரியதிரை வாய்ப்பு வந்ததால் அங்கு சென்று விட்டார். தற்போது 'ரசிக்கும் சீமானே', 'ஆறாவது வரம்' போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
உங்கள் கணவரும் நீங்களும் நடிப்பைப் பற்றி விவாதிப்பீர்களா?
நான் நடிக்கும் தொடரைப் பார்ப்பதற்கு அவருக்கு நேரம் இருக்காது. நான் சிறுவயதில் இருந்து நடிப்பதால் என்னிடம் ஆலோசனை கேட்பார். விமர்சனங்கள் எதுவும் சொல்ல மாட்டார். ஆனால் என் திறமைக்கேற்ற பாத்திரம் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் அவருக்கு உண்டு.
சின்னத்திரை அல்லது சினிமாத்துறை இப்பொழுது எப்படி இருக்கிறது என்று நினைக்கிறிர்கள்?
எல்லாத் துறையும் நன்றாக வளர்ந்திருக்கிறது. ஆரோக்கியமாகவும் இருக்கிறது. நான் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது பேபி அஞ்சு, மீனா, சாலினி என்று மூன்று நான்கு பேர் தான் இருப்போம். இப்போது ஏகப்பட்ட படங்கள் வருகின்றன. ஏகப்பட்ட பேர் நடிக்கிறார்கள். இது வளர்ந்திருப்பதைத்தானே காட்டுகிறது. இடையில் கொஞ்ச நாள்களுக்கு முன் கிளாமருக்குத்தான் வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலைமையும் மாறிவிட்டது. புதுமுகங்களும் திறமை காட்டுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதுபோல சினிமா என்றாலே ஒரு தப்பான துறை என்கிற மாதிரியான கருத்துகள் இருந்தன. அதுவும் இப்போது மாறிப் போய்விட்டது.
உங்கள் குழந்தைகள் பற்றி சொல்லுங்க?
என் மகன் தேஜஸ்வின்னுக்கு ஐந்து வயதாகிறது. என் மகள் பவதாரணிக்கு ஒரு வயது தான் ஆகிறது. என் அப்பா, அம்மாவும் என் சித்தியும்தான் பார்த்துக் கொள்கிறார்கள். பெரியவனாவது என்னோடு கொஞ்சம் நாள் இருந்தான். ஆனால் மகள் தான் எட்டு மாதத்தில் இருந்தே அம்மாவிடம் வளர்ந்து வருகிறாள்.
- ஸ்ரீதேவிகுமரேசன்
Tuesday, April 13, 2010
சிரிப்பை நிறுத்தலாமா சோனியா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment