Tuesday, April 13, 2010

சிரிப்பை நிறுத்தலாமா சோனியா?



'செல்லமே'- தொடரில் சம்பந்தமே இல்லாமல் சிரிச்சுக்கிட்டே இருக்கும் சோனியாவை அவரது வீட்டில் சந்தித்தோம்.​
''என்னங்க இப்படித் திடீர்ன்னு சிரிப்பதை விட்டு விட்டு பழிவாங்குதில் இறங்கிட்டீங்க'' என்றவுடன் கலகலவெனச் சிரிக்கத் தொடங்கி விட்டவரை நிறுத்தி சற்று சீரியஸôகப் பேச வைத்தோம்:​ ​
'ஆமாம்.​ இப்போது சிரிக்க முடியவில்லையே என்று கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.​ கதையோட களம் எல்லாம் மாறிப்போனதுனால இப்போது சிரிக்க முடியவில்லை.​ இருந்தாலும் சிரிப்பதற்கு முயற்சி செய்துகிட்டுத்தான் இருக்கிறேன்.​ இந்தத் தொடரில் என் அம்மா இறந்துபோன பிறகு கதை கொஞ்சம் மாறி ரொம்ப சீரியஸôன சீன்ஸ் போய்க்கிட்டு இருக்கிறது.​ ராதிகா மேடமை எதிர்த்து யாராவது சண்டை போட வேண்டியிருப்பதினால்,​​ அது நாத்தனாராக இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் என்னால் சிரிக்க முடியாமல் போய்விட்டது.​ எவ்வளவு கஷ்டமான கதாபாத்திரமாக இருந்தாலும் செய்துவிடலாம்.​ ஆனால்,​​ எல்லாரையும் சிரிக்க வைப்பதுதான் சிரமம்.​ ​ ​
இந்தச் சிரிப்பு பாத்திரத்திற்காகவே வீட்டிற்குப் போய் கண்ணாடி முன்னால நின்று ஒரு மணிநேரம் சிரித்துப் பழகுவேன்.​ என் கணவர் பார்த்துவிட்டு உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்று கேட்பார்.​ கொஞ்ச நாள் அந்த மாதிரியேதான் திரிந்தேன்.​ வெளியில் போகிறபோது சின்னச்சின்ன குழந்தைகள்கூட என்னைப் பார்த்ததும் சிரிக்கத் தொடங்கிவிடுவார்கள்.' ​
இப்பொழுது எத்தனை தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
'செல்லமே', ​ 'மாதவி' என்று இரண்டு தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.​ இரண்டுமே வேறுவேறு வித்தியாசமான கதாபாத்திரங்கள்.​ 'செல்லமே'வில் எல்லாரும் திட்டுவது மாதிரி பாத்திரம்.​ மாதவியில் எல்லாரும் பார்த்து பரிதாபப்படுகிற பாத்திரம்.​ இப்படி ஒரே நேரத்தில் இரண்டு வித்தியாசமான பாத்திரங்கள் செய்வது நல்ல அனுபவமாக இருக்கிறது.​ அதோடு 'ராம ராவணன்','மூன்று முகம்' என சில மலையாள படங்களில் நடிச்சுக்கிட்டு இருக்கேன்.​ ​
உங்கள் கணவரை இப்பொழுது தொடர்களில் பார்க்க முடியலையே?​ ​
மூன்று வருடங்களாக அவர் தொடர்களில் நடிப்பதில்லை.​ இது வரை மூன்று தொடர்களில்தான் நடித்திருக்கிறார்.​ பெரியதிரை வாய்ப்பு வந்ததால் அங்கு சென்று விட்டார்.​ தற்போது 'ரசிக்கும் சீமானே',​​ 'ஆறாவது வரம்' போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
உங்கள் கணவரும் நீங்களும் நடிப்பைப் பற்றி விவாதிப்பீர்களா?
நான் நடிக்கும் தொடரைப் பார்ப்பதற்கு அவருக்கு நேரம் இருக்காது.​ நான் சிறுவயதில் இருந்து நடிப்பதால் என்னிடம் ஆலோசனை கேட்பார்.​ விமர்சனங்கள் எதுவும் சொல்ல மாட்டார்.​ ஆனால் என் திறமைக்கேற்ற பாத்திரம் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் அவருக்கு உண்டு.​ ​
சின்னத்திரை அல்லது சினிமாத்துறை இப்பொழுது எப்படி இருக்கிறது என்று நினைக்கிறிர்கள்?
எல்லாத் துறையும் நன்றாக வளர்ந்திருக்கிறது.​ ஆரோக்கியமாகவும் இருக்கிறது.​ நான் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது பேபி அஞ்சு,​​ மீனா,​​ சாலினி என்று மூன்று நான்கு பேர் தான் இருப்போம்.​ இப்போது ஏகப்பட்ட படங்கள் வருகின்றன.​ ஏகப்பட்ட பேர் நடிக்கிறார்கள்.​ இது வளர்ந்திருப்பதைத்தானே காட்டுகிறது.​ இடையில் ​ கொஞ்ச நாள்களுக்கு முன் கிளாமருக்குத்தான் வாய்ப்பு அதிகமாக இருந்தது.​ ஆனால் இப்போது அந்த நிலைமையும் மாறிவிட்டது.​ புதுமுகங்களும் திறமை காட்டுவதற்கு ​ ​ நிறைய வாய்ப்பு இருக்கிறது.​ அதுபோல சினிமா என்றாலே ஒரு தப்பான துறை என்கிற மாதிரியான கருத்துகள் இருந்தன.​ அதுவும் இப்போது மாறிப்​ போய்விட்டது.
உங்கள் குழந்தைகள் பற்றி சொல்லுங்க?
என் மகன் தேஜஸ்வின்னுக்கு ஐந்து வயதாகிறது.​ என் மகள் பவதாரணிக்கு ஒரு வயது தான் ஆகிறது.​ என் அப்பா,​​ அம்மாவும் என் சித்தியும்தான் பார்த்துக் கொள்கிறார்கள்.​ பெரியவனாவது என்னோடு கொஞ்சம் நாள் இருந்தான்.​ ஆனால் மகள் தான் எட்டு மாதத்தில் இருந்தே அம்மாவிடம் வளர்ந்து வருகிறாள்.
-​ ஸ்ரீதேவிகுமரேசன்

லட்சிய நடிப்பு


"கோலங்​கள்" தீபா வெங்​கட் என்​றால் தெரி​யா​த​வர்​களே
"தங்கம்' தொடரில் வரும் வடிவு என்றாலே இளவஞ்சிக்கு வயிற்றில் புளிதான். வடிவைக் கொஞ்சம் நமது வாசகர்
களுக்காக சீண்டி பார்ப்போமே என்று சின்னத்திரை நடிகை வர்ஷாவை தொடர்பு கொண்டோம். இன்று
ஷூட்டிங் இல்லை ஜாலியா வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சுந்தர தெலுங்கு கலந்த தமிழில் கூறினார். அவரைச் சந்தித்தோம்.
உங்கள் குடும்பத்தினர் பற்றி சொல்லுங்கள்?
என் குடும்பத்தைச் சேர்ந்த எல்லாரும் ஹைதராபாதில் உள்ளார்கள். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் அங்குதான். நான் முஸ்லீம் மதத்தை சார்ந்தவள். இங்கே சென்னையில் என் அத்தை, மாமாவோடு தங்கியிருக்கேன்.
என்ன என்ன தொடர்கள் நடிச்சுகிட்டு இருக்கீங்க?
"தங்கம்', "இதயம்', "அம்மன்', "கஸ்தூரி' என நான்கு தொடர்கள் நடிக்கிறேன். இந்த நாலு தொடரிலுமே நான்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்துகிட்டு இருக்கேன். இப்படி வேற வேற டிபரண்ட்டா செய்வது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. "தங்கம்'ல கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறேன். "கஸ்தூரி'யில் மென்மையான கேரக்டர், "அம்மன்' தொடரில் போலீஸ் ஆபிசரா வருவேன். "இதயம்' தொடரில் இப்பொழுது தான் என் போர்ஷன் ஆரம்பமாகி இருக்கு அதுவும் நெகட்டீவ் ரோல் தான். அதற்கு எப்படி வரவேற்பு இருக்கும் என்று இனிமேதான் தெரியும்.
"தங்கம்' தொடரில் இளவஞ்சியை எதிர்த்து வெளுத்து வாங்குறீங்களே, எப்படி?
அந்த சீரியலில் காவேரி அக்காதான் எப்பவுமே எல்லாரையும் டாமினேட் செய்வாங்க. ஆனா நான் அவுங்களுக்கு டென்ஷன் கொடுக்கிற மாதிரி எதிர்த்து சண்டை போடுவேன். இது ஒரு வித்தியாசமான அனுபவமா இருக்கிறது. அதனாலயே என் கேரக்டர் மக்கள்கிட்ட நல்லா ரீச் ஆகியிருக்கிறது. வெளியே எங்கயாவது ஆடியன்ஸ் பார்த்தாகூட "எப்பங்க உங்களுக்கு கல்யாணம். நீங்க கல்யாணமாகி அங்கே போங்க அப்ப தான் நல்லா இருக்கும். நீங்க ரெண்டு பேரும் ஸ்கிரீன்ல வந்தாலே ரொம்ப இன்ட்ரஸ்ட்டா பார்ப்போம்'னு சொல்லுவாங்க.
நீங்கள் எப்படி சினிமாவைத் தேர்ந்தெடுத்தீங்க?
சின்னவயதில் எங்கள் வீட்டில் டிவி எல்லாம் பார்க்க கூடாது. ஒரே ஒரு ரேடியோ தான் இருக்கும் அது கூட எங்க அப்பாதான் வைத்திருப்பார். சின்ன வயதில் இருந்தே எனக்கு டிவியில் வருபவர்கள் போட்டிருக்கும் நகைகள்,டிரஸ் எல்லாம் பார்க்க ரொம்ப ஆசையாக இருக்கும்.
அதற்காகவே டி.வி. பார்ப்பேன். காலேஜ் முடிச்சதும் மாடலிங் துறையை தேர்ந்தெடுத்தேன். மாடலிங்கில் இருக்கும்போதுதான் "லட்சியம்' என்ற தொடரின் டைரக்டர் என்னைப் பார்த்துவிட்டு இந்தக் கேரக்டரை நான் செய்தால் நல்லா இருக்கும் என்று சொன்னார். அதுதான் என்னோட ப்ர்ஸ்ட் சீரியல். அதன் பிறகு பாலாஜி டெலி ஃபிலிம்ஸ் மூலமாக மற்ற தொடர்களில் நடிக்க ஆரம்பித்தேன்.
ஓய்வு நேரங்களில் என்ன செய்வீர்கள்?
நடனம் என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஏதாவது பாட்டுபோட்டுவிட்டு நானும் என் சிஸ்டரும் ஆடிக்கிட்டு இருப்போம். கலா மாஸ்டரோட சிஸ்டர் ஜெயந்தி அக்காவிடம் தான் நடிகர் சங்கத்துல போய் டான்ஸ் கற்றுக்கொண்டேன். நடிப்புக்கு அடுத்தபடியா எனக்கு டான்ஸ்தான் ரொம்ப பிடிக்கும்.
டான்ஸ் மீது இவ்வளவு ஆர்வமாக இருக்கும் நீங்கள் டிவியில் வரும் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லையே ஏன்?
தொடர் முடிந்ததும், டான்ஸ் பிராக்டிஸ் போகணும். ஏற்கனவே இத்தனை தொடர்கள் போய்கிட்டு இருக்கு. நேரம் கிடையாது. இதற்கு மேல டான்ஸ் எடுத்துகிட்டா ரொம்ப கஷ்டமாகிவிடும். நடிப்பில் சரியா கவனம் செலுத்த முடியாது. ஒர்க் லோட் அதிகமாகிவிடும். சின்னத்திரை நிகழ்ச்சி, நட்சத்திர விழா எல்லாம் வரும் போது டான்ஸ் நிகழ்ச்சிகள் செய்யணும்னு ஆசை இருக்கு. ஆனால் போட்டிகள்ல கலந்துக்க விருப்பமில்லை.
ரம்யாகிருஷ்ணோட நடிக்கும் அனுபவம் எப்படி?
நான் அவருடைய படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். அப்பவே எனக்கு அவரைப் ரொம்ப பிடிக்கும். ஆனால் படத்தில் பார்த்ததற்கும் இப்போது நேரில் பார்ப்பதற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. ஒரு சாதாரண குடும்ப பெண் எப்படி இருப்பாங்களோ, பழகுவாங்களோ
அப்படிதான் பழகுவாங்க. பெரிய ஹீரோயின் என்ற பந்தாஎல்லாம் அக்காவிடம் கிடையாது. யார் எந்த சீன் நல்லா நடித்தாலும் உடனே நீ நல்லா செய்த நல்லா இருந்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது என்று பாராட்டுவாங்க.
பொட்டு வைத்து பூ வைத்துக் கொண்டு தமிழ் பெண்ணாக நடிக்கும்பொழுது உங்கள் நடிப்பைப் பார்த்து வீட்டில் என்ன சொல்லுவார்கள்?
சொல்லப் போனால் எங்கள் குடும்பத்தில் பலருக்கு நான் நடிப்பதே தெரியாது. எனக்கு பொட்டு வைத்துக் கொள்வது, பூ வைத்து கொள்வது எல்லாம் ரொம்ப பிடிக்கும்.
சமீபத்தில் பெண்கள் தினம் வந்ததில்லையா அதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?
ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பெண்களுக்காக ஒரு தினம் வைத்து கொண்டாடுவது பெண்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் தானே? என்னை பொருத்தவரை பெண்கள் யாரும் அடிமையாக இருக்க கூடாது. சுதந்திரமா செயல்படணும். எப்பவும் தன்னம்பிக்கையோட இருக்கணும்,யாரையும் சார்ந்து வாழக் கூடாதுன்னு நினைப்பேன்.

திருமணம் திருப்பு முனையாக இருக்கும்!


"கோலங்​கள்" தீபா வெங்​கட் என்​றால் தெரி​யா​த​வர்​களே
கிடை​யாது.​ அந்த அள​வுக்கு இல்​லத்​த​ர​சி​க​ளின்
மனங் ​க​ளை​யும் கொள்ளை கொண்​ட​வர்.​ பெரி​ய ​தி​ரை​யில் பின்​ன​ணி​கு​ரல் கொடுப்​ப​வ​ரா​க​வும்,​​ ரேடி​யோ​வில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வரு​கி​றார் தீபா.​ இதோ அவ​ரது வசீ​க​ரக் குர​லில் ​ நமது கேள்​வி​க​ளுக்குப் பதி​ல​ளிக்​கி​றார்..​ ​ ​
* தொலைக்​காட்சி தொடர்​க​ளில் உங்​களை நிறைய பார்க்க முடி​ய​வில்​லையே,​​ ஏன்?​​
இது ​வரை நிறைய தொடர்​க​ளில் நல்ல நல்ல ரோல்ஸ் ​ நடித்​தி​ருக்​கி​றேன்.​ அதற்​காக ஆடி​யன்ஸ் ​ கிட்ட பாராட்​டு​க​ளும் வாங்​கி​யி​ருக்​கி​றேன்.​ இப்​போது என்​னு​டைய எதிர்​பார்ப்​புக்கு ​ ஏற்ற மாதிரி ரோல் அமை​ய​வில்லை.​ நிறைய தொடர்​கள் நடிக்​க​வேண்​டும் என்​ப​தில்லை.​ ஒரு சில தொடர்​கள் நடித்​தா​லும் அது மக்​கள் மன​தில் நிற்க வேண்​டும் என்று நினைக்​கி​றேன்.​
நான்கு மாதங்​கள் வரை தொடர்​கள் நடிக்க வேண்​டாம் என்று முடிவு செய்​தி​ருந்​தேன்.​ அந்த நேரத்​தில்​தான் டைரக்​டர் விஸ்​வ​நா​தன் "வாடகை வீடு' தொட​ரைப் பற்றி சொன்​னார்.​ அது இரண்டு நாய​கி​கள் கதை.​ இருந்​தா​லும் இரண்டு பேருக்​குமே முக்​கி​யத்​து​வம் உள்ள கதை.​ அந்த ஸ்கி​ரிப்ட் எனக்​குப் பிடித்​தி​ருந்​தது.​
சந்​தோ​ஷி​யும் நானும் நடிக்​கி​றோம்.​ வாடகை வீட்​டில் குடி​யி​ருப்​ப​வர்​க​ளின் சொந்த வீடு பற்​றிய கன​வு​ம் அதற்​காக அவர்​கள் சந்​திக்​கும் பிரச்​னை​யும்​தான் கதை.​ அது ஒரு காமெடி தொடர்.​ இதில் நான் ஒரு மிடில் கிளாஸ் குடும்​பத்தைச் சார்ந்த பெண்​ணாக நடிக்​கி​றேன்.​ என் கேரக்​டர் பெயர் பூஜா.​ ​
* இன்​றைய ​ சின்​னத்​தி​ரை​யில் நடிப்​ப​தற்கு நிறைய பெண்​கள் வந்​து​விட்​டார்​கள்.​ அது உங்​க​ளுக்​குப் போட்​டி​யாக இருக்​கும் என்று நினைக்​கி​றீர்​களா?​​
அப்​படி யாரை​யும் நான் போட்​டி​யாக ​ நினைப்​ப​தில்லை.​ இது ​ போன்று நிறைய புது​மு​கங்​கள் ​ வரும்பொழுது அது ஒரு ​ ஆராக்​கி​ய​மான போட்​டி​யாக ​ தான் இருக்​கும்.​ என் திறமை ​ மீது எனக்கு நிறைய ​ நம்​பிக்கை இருக்​கி​றது.​ இந்த மாதிரி ஆரோக்​கிய போட்​டி​கள் வரும்​போ​து​தான்,​திற​மை​கள் வெளியே தெரி​யும்.​ அதுவே தங்​களை இந்த பீல்​டில் தக்க வைத்​துக் கொள்ள ஒரு முயற்​சி​யாக இருக்​கும்.​ ​
* பெரி​ய ​தி​ரை​யில் ​ நடிப்​ப​தற்குச் சின்​னத்​திரை நடி​கை​கள் விரும்​பு​வ​தில்​லையே?​ ஏன் நீங்​க​ளும் சின்ன சின்ன கதா​பாத்​தி​ரத்​தில்​தான் வரு​கி​றீர்​கள் அதைப் பற்றி என்ன நினைக்​கி​றீர்​கள்?​ ​
பெரி​ய ​தி​ரை​யில் ​ நீடிக்க வேண்​டும் ​ என்​றால் கொஞ்​சம் கிளா​ம​ரா​க​வும் நடிக்க வேண்​டும்.​ கிளா​ம​ரா​க​வும் ரொமான்​ஸô​க​வும் நடித்​தால்​தான் மக்​கள் ஏற்​றுக்​கொள்​கி​றார்​கள்.​ இது தவிர்க்க முடி​யா​தது.​ ஒரு படத்​தில் இரண்​டா​வது நாய​கி​யாக நடித்​து​விட்​டால் அதற்குப் பிறகு சில வரை​மு​றை​களைக் கடை​ப்பி​டிக்க வேண்​டி​யி​ருக்​கி​றது.​ என்​னு​டைய லிமிட்டுக்​குள்ள வரு​கிற படங்​க​ளில் மட்​டுமே நான் நடிக்​கி​றேன்.​ அப்​படி என்​னு​டைய லிமிட்டைத் தாண்டி நடித்​தால் எனக்​கும் ​ நிறைய வாய்ப்​பு​கள் வரும்.​ இப்​போது தங்கை கேரக்​டர்​கள் நடித்​துக் கொண்​டி​ருக்​கி​றேன்.​ ​
* நீங்​கள் டைரக்ட் செய்ய ​ போகி​றீர்​க​ளாமே?​​
உண் ​மை​யைச் சொல்ல வேண்​டு​மென்​றால் ஒரு ​ நடி​கை​யாக ஜெயிப்​ப​தற்கே நிறைய போராட வேண்​டி​யி​ருக்​கி​றது.​ எத்​தனையோ பிரச்​னை​களைச் சந்​திக்க வேண்​டி​யி​ருக்​கி​றது.​ இதை​யெல்​லாம் தாண்டி வந்​தால் தான் ஜெயிக்க முடி​யும்.​ அதுபோல ஒரு டைரக்​டர் ஆவது சுல​ப​மல்ல.​ நிறைய பொறுப்​பு​களைச் சுமக்க வேண்​டி​யி​ருக்​கும்.​ அப்​படி நான் டைரக்​ஷ​னில் இறங்​கி​னால் எப்​படி நடி​கர், நடி​கை​களை வேலை வாங்​கு​வ​தில் இருந்து மற்ற எல்​லா​வற்​றை​யும் தெரிந்து கொண்டு,​​ கற்​றுக் கொண்​டு​தான் வரு​வேன்.​ ​
* உங்​கள் வருங்​கால திட்​டம் என்ன?​​
எந் ​தத் துறை​யாக இருந்​தா​லும் நல்ல பேர் வாங்​கு​வ​தற்​கும்,​​ ஒரு நல்ல இடத்​திற்கு வரு​வ​தற்​கும் ​ நிறைய உழைக்க வேண்​டி​யி​ருக்​கும்.​ ஆனால் சினி​மாவைப் பொருத்​த​வரை அது ரொம்ப ஈசி.​ இப்​போ​தைக்கு எனக்கு நல்ல நடிகை என்று பெயர் இருக்​கி​றது.​ அதை கடை​சி​வரை காப்​பாற்ற வேண்​டும் என்று நினைக்​கி​றேன்.​ மக்​கள் என்னை அவர்​கள் குடும்​பத்​தில் ஒருத்​தி​யாக நினைக்​கி​றார்​கள் அதை தக்கவைத்துக் கொள்​வ​து​தான் இப்​போ​தைய பிளான்.​ ​
* நடிப்பைத் ​ தவிர வேறு எந்த துறை​யில் ஆர்​வம் இருக்கு?​​
நடிப்பைத் ​ தவிர பெரி​ய ​தி​ரை​யில் நாய​கிக்கு ​ டப்​பிங் குரல் கொடுக்​கி​றேன்.​ ​ சினி​மா​வில் நடிக்க வந்​த​தில் இருந்து டப்​பிங் பேசிக் கொண்​டி​ருக்​கி​றேன்.​ இதை தவிர ஹலோ ஒன் எப் எம் ரேடி​யோ​வில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்​கி​றேன்.​ ரேடி​யோ​வி​லும் ​ நிறைய ரசி​கர்​கள் இருக்​கி​றார்​கள்.​ அது எனக்கு ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருக்​கி​றது.​ ​
* உங்​கள் ​ திரு​ம​ணம் எப்​போது?​ காதல் திரு​ம​ண​மாக ​ இருக்​குமா?​​
கல் ​யா​ணம் என் வாழ்க்​கை​யில் ஒரு திருப்​ப​மாக இருக்​கும்.​ நான் காத​லித்​தா​லும் இல்லை என்​றா​லும் அது என் பெற்​றோர்​கள் சம்​ம​தத்​து​டன் நடக்​கும்.​ காதல் திரு​ம​ணம் செய்து கொள்​ப​வர்​கள் சந்​திக்​கும் நிறைய பிரச்​னை​களை நான் பார்த்​தி​ருக்​கி​றேன்.​ பெற்​ற​வர்​கள் வாழ்த்​துக்​க​ளோட நடக்​கிற திரு​ம​ணம்​தான் சந்​தோ​ஷ​மா​ன​தாக இருக்​கும்.​ என் திரு​ம​ணம் என் அப்பா அம்​மா​வின் விருப்​ப​ப​டி​தான் இருக்​கும். அந்த பொறுப்பை அவர்​க​ளி​டமே ஒப்​ப​டைத்​து​விட்​டேன்.​ திரு​ம​ணத்​திற்குப் பிறகு நடிப்​ப​தில் எனக்கு விருப்​ப​மில்லை.​

நடிப்பதில் ஆர்வம் இல்லை! - ஷில்பா



விஜய் டிவி​யில் நிகழ்ச்சி தொகுப்​பா​ளி​னி​யாக கொஞ்​சும் தமி​ழில் பேசி மக்​கள் மன​தில் இடம் பிடித்​த​வர் ஷில்பா.​ "நம் வீட்டு கல்​யா​ணம்' நிகழ்ச்​சி​யின் படப்​பி​டிப்பு தளத்​தில் அவ​ரைச் சந்​தித்​தோம்.​ நம்​மி​ட​மும் கொஞ்​சும் தமி​ழில் பேசி​னார்.​ இனி அவ​ரு​டன்..​
* உங்​க​ளைப் பற்றி சொல்​லுங்​கள்?​​
எனக்கு பூர்​வீ​கம் கேரளா.​ நான் ஆங்​கில இலக்​கி​யம் படித்​தி​ருக்​கி​றேன்.​ ஐந்து வரு​ட​மாக இந்​துஸ்​தானி மியூ​சிக் கற்று வரு​கி​றேன்.​ என் தங்கை என்​ஜி​னீ​ய​ரிங் படிக்​கி​றாள்.​ எங்​க​ளு​டை​யது சிறிய அன்​பான குடும்​பம்.​ ​
* தற்​போது என்​னென்ன நிகழ்ச்​சி​கள் தொகுத்து வழங்​கு​கி​றீர்​கள்?​​
"நம் வீட்டு கல்​யா​ணம்' நிகழ்ச்​சியை ஒன்​றரை வரு​ட​மாக தொகுத்து வழங்​கிக் கொண்​டி​ருக்​கி​றேன்.​ அதைத்​த​விர டிவி நிகழ்ச்​சி​க​ளைத் தொகுத்து வழங்​கு​கி​றேன்.​ தற்​போது விஜய் டிவி​யில் புதி​ய​தாக தொடங்​கி​யி​ருக்​கும் "சினிமா சினிமா' நிகழ்ச்​சி​யின் தொகுப்​பா​ளி​னி​யா​க​வும் இருக்​கி​றேன்.​
* பிர​ப​லங்​க​ளின் திரு​ம​ணத்தை "நம் வீட்டு கல்​யா​ணம்' நிகழ்ச்சி மூலம் தொகுத்து வழங்​கும் அனு​ப​வம் பற்றி சொல்​லுங்​கள்?​​
புது ​மை​யான அனு​ப​வம்.​ பிர​ப​லங்​க​ளின் திரு​ம​ணத்தை நேரில் சென்று பார்க்க முடி​யா​த​வர்​கள் தங்​கள் வீட்​டில் இருந்தே அவர்​க​ளு​டைய சடங்​கு​கள்,​​ சம்​பி​ர​தா​யங்​க​ளைப் பார்ப்​பது ​ நன்​றாக இருக்​கி​றது.​ அதைத் தவிர திரு​ம​ணத்​தில் கலந்து கொள்​ளும் பிர​ப​லங்​க​ளைப் பார்க்​கும் வாய்ப்​பும் கிடைக்​கி​றது.​ இந்​தக் கான்​சப்ட்டே ரொம்ப புது​மை​யா​னது.​ மக்​க​ளி​டம் நிறைய வர​வேற்பு இருக்​கி​றது.​
* தொடர்​க​ளில் ஏன் நீங்​கள் நடிக்​க​வில்லை?​​
தொடர்​க​ளில் நடிக்க நிறைய வாய்ப்​பு​கள் வரு​கின்​றன.​ ஆனால் நடிப்​ப​தில் எனக்கு அவ்​வ​ளவு ஆர்​வம் இல்லை.​ ​
* நிகழ்ச்சி தொகுப்​பா​ளினி தவிர வேறு எதில் கவ​னம் செலுத்​து​கி​றீர்​கள்?​​
ஸ்டேஜ் ஷோக்​க​ளில் இந்​துஸ்​தானி இசை​யில் பாடல்​கள் பாடு​கி​றேன்.​ பாட்டு தான் ரொம்ப பிடித்​தி​ருக்​கி​றது.​ இப்​போ​தைக்கு முழுக்க முழுக்க இந்​துஸ்​தானி இசை பாடல்​க​ளில்​தான் கவ​னம் செலுத்​து​கி​றேன்.​ ​
* பின்​னணி பாடகி ஆவ​தற்கு ஏதும் முயற்சி செய்​கி​றீர்​களா?​​
கன் ​ன​டப் படம் ஒன்​றில் ஒரு பாடல் பாடி​யி​ருக்​கி​றேன்.​ தமி​ழில் பாடு​வ​தற்​கான முயற்​சி​கள் செய்து வரு​கி​றேன்.​ அதற்​காக இசை​ய​மைப்​பா​ளர்​க​ளி​டம் டெமோ சிடி​கள் கொடுத்து வரு​கி​றேன்.​ ​
* இந்​துஸ்​தானி இசை​யைத் தேர்​தெ​டுத்​தது ஏன்?​​
என் குர​லுக்கு இந்​துஸ்​தானி இசை பொருத்​த​மாக இருக்​கி​றது.​ சிறு​வ​ய​தில் கர்​நா​டக இசை கொஞ்​சம் கற்​றுக்​கொண்​டேன்.​ மேற்​கத்​திய மற்​றும் இந்​துஸ்​தானி இசை பிடித்​த​மா​னவை.​ எனவே அவற்றை விரும்பி கற்​றுக்​கொண்​டேன்.​ பொது​வா​கவே எனக்கு ​ மெலோ​டி​யான இசை​யைக் கேட்க ரொம்ப பிடிக்​கும்.​
* நிகழ்ச்​சி​க​ளின் மூலம் மக்​க​ளி​டம் நேர​டி​யாக தொடர்பு கொண்டு பேசும் அனு​ப​வம் ​ ​ பற்றி சொல்​லுங்​கள்?​​
மக் ​களை நேர​டி​யாக தொடர்பு கொண்டு பேசு​வ​தால்,​​ ​ நிதா​ன​மா​க​வும்,​​ கவ​ன​மா​க​வும் பேச​வேண்​டி​யுள்​ளது.​ ஏதா​வது தவ​றாகி போனா​லும் திருத்​திக் கொள்ள முடி​யாது.​ மக்​கள் நம்மை நேர​டி​யாக திட்​டி​வி​டு​வார்​கள்.​ அத​னால் மிக கவ​னத்​து​டன் பேச வேண்​டும்.​ சிர​மங்​க​ளுக்கு ஆண்,​பெண் என்ற வேறு​பாடு தெரி​யாது.​ பிற துறை​க​ளில் உள்ள சிர​மங்​கள் இத்​து​றை​யி​லும் இருக்​கின்​றன.​
* உங்​க​ளைப்​பற்றி ரசி​கர்​கள் என்ன சொல்​லு​கி​றார்​கள்?​​
நிகழ்ச் ​சி​யைத் தொகுத்து வழங்​கும்​போது என் உச்​ச​ரிப்பு நன்​றாக இருக்​கி​றது எனச் சொல்​லு​கி​றார்​கள்.​ மேலும்,​​ நளி​ன​மா​கப் பேசு​வ​தா​க​வும் சொல்​லு​கி​றார்​கள்.​ ​ இப்​படி மக்​கள் நம்​மி​டம் நேர​டி​யாக சொல்​லும்​போது ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருக்​கி​றது.​ ​ இதை எனக்கு கிடைக்​கும் பரி​சாக நினைக்​கி​றேன்.​

தங்கம் தந்த தங்கை!



சன் டிவியில் இரவு 8.30 மணிக்கு
பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும்
"தங்கம்' தொடரில் ரம்யாவின்
தங்கையாக வந்து எல்லோர் மனதிலும்
இடம் பிடித்த ஜோதியை அத் தொடரின்
படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தோம்.
சின்னத்திரையில் நடிக்க வந்தது எப்படி?
நான் ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு பெண். என்ஜினீயரிங் படித்துவிட்டு ஹைதராபாத்தில் உள்ள மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை பார்க்க வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது. ஆனால் விதி என்னை சினிமாவில் கொண்டு வந்து விட்டுவிட்டது.
ஒருமுறை ராதிகா மேடம் "தாலிபிரமா' என்கிற தெலுங்கு தொடருக்காக மேக் - அப் டெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்தார்கள் என்று கேள்விப்பட்டு என் பெற்றோர்கள் சம்மதத்துடன் போய் பார்த்தேன்.
அந்தத் தொடரில் எனக்கு நிரோஷாவோட மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ராடான் மீடியாவில்தான் நான் முதன் முதலில் நடித்தேன். இப்படி தான் என் சின்னத்திரை பயணம் தொடங்கியது. படிப்பை விட்டுவிட்டு நடிகையாக வருவேன் என்று நான் நினைத்து கூட பார்த்ததில்லை.
முதல் தொடரே எனக்கு ஆந்திராவில் நல்ல பெயரைக் கொடுத்தது. அதன் பிறகு ஹன்ஷா விஷன் தயாரித்த தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து ஏ.வி.எம்.மின் "சொர்க்கம்' தொடர் மூலமாக தான் முதன் முதலில் தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போழுது நிறைய தமிழ் தொடர்களில் நடித்து வருகிறேன்.
தற்போது என்ன தொடர்களில் நடித்து
வருகிறீர்கள்?
தங்கம் தொடரில் ரம்யாகிருஷ்ணன் தங்கையாக நடித்து வருகிறேன். அவங்களைப் போல பெரிய ஹீரோயின்கூட நடிப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதை அடுத்து கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஏ.வி.எம்.மின் "உறவுக்கு கை கொடுப்போம்' என்கிற தொடரில் நடித்து கொண்டிருக்கிறேன்.
ஒரே நேரத்தில் தமிழ்,தெலுங்கு இரண்டிலும் நடிப்பது கஷ்டமாக இல்லையா எப்படி நேரம் கிடைக்கிறது?
தெலுங்கு எனது தாய் மொழி என்பதால் அதில் நடிப்பதில் எனக்கு அவ்வளவு பெரிய சிரமம் ஒன்றும் தெரியவில்லை. தமிழில் நடிக்க வந்த புதிதில் எனக்குத் தமிழே தெரியாது. எங்கே எப்படி பேச வேண்டும் என்று தெரியாது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறேன். இப்போது நான் ரொம்ப நன்றாகவே தமிழ் பேசுவதாக எல்லோரும் சொல்கிறார்கள்.
எனக்கு தமிழ் இன்டஸ்ட்ரி ரொம்ப பிடித்திருக்கிறது. நிறைய தமிழ் தொடர்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. தமிழ் மக்கள் மரியாதையாகப் பழகுகிறார்கள். "தங்கம்' தொடருக்குப் பிறகு நிறைய தமிழ் மக்களிடம் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
தெலுங்கில் இரண்டு தொடர்கள் நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் முன்று தொடர்கள் நடிக்கிறேன். இரண்டு மொழிகளிலும் நடிப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
சென்னைக்கும், ஆந்திராவுக்கும் மாறி மாறி போய் வரும் போது சில நேரங்களில் நான் சென்னையில் இருக்கிறேனா அல்லது ஆந்திராவில் இருக்கிறேனா என்று குழப்பமாக இருக்கும். இரண்டு மொழியிலும் நடிப்பதில் என்ன கஷ்டம் வந்தாலும் அதை எதிர்த்து போராடி பெரிய இடத்துக்கு வர வேண்டும். சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் நிறைய இருக்கிறது.
பெரியதிரைக்குச் செல்லும் எண்ணம் உண்டா?
நல்ல கம்பெனி, பெரிய டைரக்டர், நல்ல ஹீரோ இந்த மாதிரி வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். பெரிய திரையில் இருந்து நிறைய வாய்ப்புகள் வருகின்றன. வருகிற வாய்ப்புகள் எல்லாம் கிளாமர் ரோலாகவே வருவதால் எனக்கு நடிக்க விருப்பமில்லை. கதையை ஒட்டி கிளாமராக இருந்தால் பரவாயில்லை.
ஒருமுறை கிளாமராக நடித்து விட்டால் அதை தொடர்ந்து அது போன்ற வாய்ப்புகள்தான் அமையும் என்பதால் நல்ல வாய்ப்பு வரும் போது நடிப்பேன். இப்போதைக்கு சின்னத்திரையில் மட்டும்தான் கவனம் செலுத்தி
வருகிறேன்.
உங்களுக்கு என்ன மாதிரி கேரக்டர்கள் நடிக்க பிடிக்கும்?
எனக்கு ஹோம்லியான கேரக்டர் நடிக்க ரொம்ப பிடிக்கும். கிராமத்துப் பொண்ணா நடிக்க பிடிக்கும். எந்த மாதிரி கேரக்டர் ஒத்து வருமோ அது மாதிரி நடிக்க வேண்டும். இப்பொழுது நடித்து கொண்டிருக்கிற தொடர்களும் என் எண்ணம் போலவே கிடைத்திருக்கின்றன. இப்படி ஒவ்வொரு தொடரில் வேறு வேறு மாதிரி நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நெகட்டீவ் ரோல்ஸ் நடிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது.
ரசிகர்களைச் சந்தித்தது உண்டா, என்ன சொல்லுவார்கள்?
ஆந்திராவில் உள்ள மக்களுக்கு என்னை நன்றாக அடையாளம் தெரியும். பொது இடங்களில் அல்லது ஷாப்பிங் போகும் போது எங்காவது பார்த்து விட்டால் என் பக்கத்தில் வந்து பேசுவார்கள், நலம் விசாரிப்பார்கள், என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள் நான் நடிக்கும் தொடர்களைப் பற்றி விமர்சிப்பார்கள்.
இப்படி அவர்கள் என் மீது அன்பு செலுத்தும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அதே போல் தங்கம் தொடரில் நடிக்க ஆரம்பித்த பிறகு தமிழ் மக்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு இருக்கிறது.