'செல்லமே'- தொடரில் சம்பந்தமே இல்லாமல் சிரிச்சுக்கிட்டே இருக்கும் சோனியாவை அவரது வீட்டில் சந்தித்தோம்.
''என்னங்க இப்படித் திடீர்ன்னு சிரிப்பதை விட்டு விட்டு பழிவாங்குதில் இறங்கிட்டீங்க'' என்றவுடன் கலகலவெனச் சிரிக்கத் தொடங்கி விட்டவரை நிறுத்தி சற்று சீரியஸôகப் பேச வைத்தோம்:
'ஆமாம். இப்போது சிரிக்க முடியவில்லையே என்று கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. கதையோட களம் எல்லாம் மாறிப்போனதுனால இப்போது சிரிக்க முடியவில்லை. இருந்தாலும் சிரிப்பதற்கு முயற்சி செய்துகிட்டுத்தான் இருக்கிறேன். இந்தத் தொடரில் என் அம்மா இறந்துபோன பிறகு கதை கொஞ்சம் மாறி ரொம்ப சீரியஸôன சீன்ஸ் போய்க்கிட்டு இருக்கிறது. ராதிகா மேடமை எதிர்த்து யாராவது சண்டை போட வேண்டியிருப்பதினால், அது நாத்தனாராக இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் என்னால் சிரிக்க முடியாமல் போய்விட்டது. எவ்வளவு கஷ்டமான கதாபாத்திரமாக இருந்தாலும் செய்துவிடலாம். ஆனால், எல்லாரையும் சிரிக்க வைப்பதுதான் சிரமம்.
இந்தச் சிரிப்பு பாத்திரத்திற்காகவே வீட்டிற்குப் போய் கண்ணாடி முன்னால நின்று ஒரு மணிநேரம் சிரித்துப் பழகுவேன். என் கணவர் பார்த்துவிட்டு உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்று கேட்பார். கொஞ்ச நாள் அந்த மாதிரியேதான் திரிந்தேன். வெளியில் போகிறபோது சின்னச்சின்ன குழந்தைகள்கூட என்னைப் பார்த்ததும் சிரிக்கத் தொடங்கிவிடுவார்கள்.'
இப்பொழுது எத்தனை தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
'செல்லமே', 'மாதவி' என்று இரண்டு தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டுமே வேறுவேறு வித்தியாசமான கதாபாத்திரங்கள். 'செல்லமே'வில் எல்லாரும் திட்டுவது மாதிரி பாத்திரம். மாதவியில் எல்லாரும் பார்த்து பரிதாபப்படுகிற பாத்திரம். இப்படி ஒரே நேரத்தில் இரண்டு வித்தியாசமான பாத்திரங்கள் செய்வது நல்ல அனுபவமாக இருக்கிறது. அதோடு 'ராம ராவணன்','மூன்று முகம்' என சில மலையாள படங்களில் நடிச்சுக்கிட்டு இருக்கேன்.
உங்கள் கணவரை இப்பொழுது தொடர்களில் பார்க்க முடியலையே?
மூன்று வருடங்களாக அவர் தொடர்களில் நடிப்பதில்லை. இது வரை மூன்று தொடர்களில்தான் நடித்திருக்கிறார். பெரியதிரை வாய்ப்பு வந்ததால் அங்கு சென்று விட்டார். தற்போது 'ரசிக்கும் சீமானே', 'ஆறாவது வரம்' போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
உங்கள் கணவரும் நீங்களும் நடிப்பைப் பற்றி விவாதிப்பீர்களா?
நான் நடிக்கும் தொடரைப் பார்ப்பதற்கு அவருக்கு நேரம் இருக்காது. நான் சிறுவயதில் இருந்து நடிப்பதால் என்னிடம் ஆலோசனை கேட்பார். விமர்சனங்கள் எதுவும் சொல்ல மாட்டார். ஆனால் என் திறமைக்கேற்ற பாத்திரம் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் அவருக்கு உண்டு.
சின்னத்திரை அல்லது சினிமாத்துறை இப்பொழுது எப்படி இருக்கிறது என்று நினைக்கிறிர்கள்?
எல்லாத் துறையும் நன்றாக வளர்ந்திருக்கிறது. ஆரோக்கியமாகவும் இருக்கிறது. நான் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது பேபி அஞ்சு, மீனா, சாலினி என்று மூன்று நான்கு பேர் தான் இருப்போம். இப்போது ஏகப்பட்ட படங்கள் வருகின்றன. ஏகப்பட்ட பேர் நடிக்கிறார்கள். இது வளர்ந்திருப்பதைத்தானே காட்டுகிறது. இடையில் கொஞ்ச நாள்களுக்கு முன் கிளாமருக்குத்தான் வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலைமையும் மாறிவிட்டது. புதுமுகங்களும் திறமை காட்டுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதுபோல சினிமா என்றாலே ஒரு தப்பான துறை என்கிற மாதிரியான கருத்துகள் இருந்தன. அதுவும் இப்போது மாறிப் போய்விட்டது.
உங்கள் குழந்தைகள் பற்றி சொல்லுங்க?
என் மகன் தேஜஸ்வின்னுக்கு ஐந்து வயதாகிறது. என் மகள் பவதாரணிக்கு ஒரு வயது தான் ஆகிறது. என் அப்பா, அம்மாவும் என் சித்தியும்தான் பார்த்துக் கொள்கிறார்கள். பெரியவனாவது என்னோடு கொஞ்சம் நாள் இருந்தான். ஆனால் மகள் தான் எட்டு மாதத்தில் இருந்தே அம்மாவிடம் வளர்ந்து வருகிறாள்.
- ஸ்ரீதேவிகுமரேசன்
Tuesday, April 13, 2010
சிரிப்பை நிறுத்தலாமா சோனியா?
லட்சிய நடிப்பு
"தங்கம்' தொடரில் வரும் வடிவு என்றாலே இளவஞ்சிக்கு வயிற்றில் புளிதான். வடிவைக் கொஞ்சம் நமது வாசகர்
களுக்காக சீண்டி பார்ப்போமே என்று சின்னத்திரை நடிகை வர்ஷாவை தொடர்பு கொண்டோம். இன்று
ஷூட்டிங் இல்லை ஜாலியா வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சுந்தர தெலுங்கு கலந்த தமிழில் கூறினார். அவரைச் சந்தித்தோம்.
உங்கள் குடும்பத்தினர் பற்றி சொல்லுங்கள்?
என் குடும்பத்தைச் சேர்ந்த எல்லாரும் ஹைதராபாதில் உள்ளார்கள். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் அங்குதான். நான் முஸ்லீம் மதத்தை சார்ந்தவள். இங்கே சென்னையில் என் அத்தை, மாமாவோடு தங்கியிருக்கேன்.
என்ன என்ன தொடர்கள் நடிச்சுகிட்டு இருக்கீங்க?
"தங்கம்', "இதயம்', "அம்மன்', "கஸ்தூரி' என நான்கு தொடர்கள் நடிக்கிறேன். இந்த நாலு தொடரிலுமே நான்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்துகிட்டு இருக்கேன். இப்படி வேற வேற டிபரண்ட்டா செய்வது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. "தங்கம்'ல கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறேன். "கஸ்தூரி'யில் மென்மையான கேரக்டர், "அம்மன்' தொடரில் போலீஸ் ஆபிசரா வருவேன். "இதயம்' தொடரில் இப்பொழுது தான் என் போர்ஷன் ஆரம்பமாகி இருக்கு அதுவும் நெகட்டீவ் ரோல் தான். அதற்கு எப்படி வரவேற்பு இருக்கும் என்று இனிமேதான் தெரியும்.
"தங்கம்' தொடரில் இளவஞ்சியை எதிர்த்து வெளுத்து வாங்குறீங்களே, எப்படி?
அந்த சீரியலில் காவேரி அக்காதான் எப்பவுமே எல்லாரையும் டாமினேட் செய்வாங்க. ஆனா நான் அவுங்களுக்கு டென்ஷன் கொடுக்கிற மாதிரி எதிர்த்து சண்டை போடுவேன். இது ஒரு வித்தியாசமான அனுபவமா இருக்கிறது. அதனாலயே என் கேரக்டர் மக்கள்கிட்ட நல்லா ரீச் ஆகியிருக்கிறது. வெளியே எங்கயாவது ஆடியன்ஸ் பார்த்தாகூட "எப்பங்க உங்களுக்கு கல்யாணம். நீங்க கல்யாணமாகி அங்கே போங்க அப்ப தான் நல்லா இருக்கும். நீங்க ரெண்டு பேரும் ஸ்கிரீன்ல வந்தாலே ரொம்ப இன்ட்ரஸ்ட்டா பார்ப்போம்'னு சொல்லுவாங்க.
நீங்கள் எப்படி சினிமாவைத் தேர்ந்தெடுத்தீங்க?
சின்னவயதில் எங்கள் வீட்டில் டிவி எல்லாம் பார்க்க கூடாது. ஒரே ஒரு ரேடியோ தான் இருக்கும் அது கூட எங்க அப்பாதான் வைத்திருப்பார். சின்ன வயதில் இருந்தே எனக்கு டிவியில் வருபவர்கள் போட்டிருக்கும் நகைகள்,டிரஸ் எல்லாம் பார்க்க ரொம்ப ஆசையாக இருக்கும்.
அதற்காகவே டி.வி. பார்ப்பேன். காலேஜ் முடிச்சதும் மாடலிங் துறையை தேர்ந்தெடுத்தேன். மாடலிங்கில் இருக்கும்போதுதான் "லட்சியம்' என்ற தொடரின் டைரக்டர் என்னைப் பார்த்துவிட்டு இந்தக் கேரக்டரை நான் செய்தால் நல்லா இருக்கும் என்று சொன்னார். அதுதான் என்னோட ப்ர்ஸ்ட் சீரியல். அதன் பிறகு பாலாஜி டெலி ஃபிலிம்ஸ் மூலமாக மற்ற தொடர்களில் நடிக்க ஆரம்பித்தேன்.
ஓய்வு நேரங்களில் என்ன செய்வீர்கள்?
நடனம் என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஏதாவது பாட்டுபோட்டுவிட்டு நானும் என் சிஸ்டரும் ஆடிக்கிட்டு இருப்போம். கலா மாஸ்டரோட சிஸ்டர் ஜெயந்தி அக்காவிடம் தான் நடிகர் சங்கத்துல போய் டான்ஸ் கற்றுக்கொண்டேன். நடிப்புக்கு அடுத்தபடியா எனக்கு டான்ஸ்தான் ரொம்ப பிடிக்கும்.
டான்ஸ் மீது இவ்வளவு ஆர்வமாக இருக்கும் நீங்கள் டிவியில் வரும் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லையே ஏன்?
தொடர் முடிந்ததும், டான்ஸ் பிராக்டிஸ் போகணும். ஏற்கனவே இத்தனை தொடர்கள் போய்கிட்டு இருக்கு. நேரம் கிடையாது. இதற்கு மேல டான்ஸ் எடுத்துகிட்டா ரொம்ப கஷ்டமாகிவிடும். நடிப்பில் சரியா கவனம் செலுத்த முடியாது. ஒர்க் லோட் அதிகமாகிவிடும். சின்னத்திரை நிகழ்ச்சி, நட்சத்திர விழா எல்லாம் வரும் போது டான்ஸ் நிகழ்ச்சிகள் செய்யணும்னு ஆசை இருக்கு. ஆனால் போட்டிகள்ல கலந்துக்க விருப்பமில்லை.
ரம்யாகிருஷ்ணோட நடிக்கும் அனுபவம் எப்படி?
நான் அவருடைய படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். அப்பவே எனக்கு அவரைப் ரொம்ப பிடிக்கும். ஆனால் படத்தில் பார்த்ததற்கும் இப்போது நேரில் பார்ப்பதற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. ஒரு சாதாரண குடும்ப பெண் எப்படி இருப்பாங்களோ, பழகுவாங்களோ
அப்படிதான் பழகுவாங்க. பெரிய ஹீரோயின் என்ற பந்தாஎல்லாம் அக்காவிடம் கிடையாது. யார் எந்த சீன் நல்லா நடித்தாலும் உடனே நீ நல்லா செய்த நல்லா இருந்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது என்று பாராட்டுவாங்க.
பொட்டு வைத்து பூ வைத்துக் கொண்டு தமிழ் பெண்ணாக நடிக்கும்பொழுது உங்கள் நடிப்பைப் பார்த்து வீட்டில் என்ன சொல்லுவார்கள்?
சொல்லப் போனால் எங்கள் குடும்பத்தில் பலருக்கு நான் நடிப்பதே தெரியாது. எனக்கு பொட்டு வைத்துக் கொள்வது, பூ வைத்து கொள்வது எல்லாம் ரொம்ப பிடிக்கும்.
சமீபத்தில் பெண்கள் தினம் வந்ததில்லையா அதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?
ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பெண்களுக்காக ஒரு தினம் வைத்து கொண்டாடுவது பெண்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் தானே? என்னை பொருத்தவரை பெண்கள் யாரும் அடிமையாக இருக்க கூடாது. சுதந்திரமா செயல்படணும். எப்பவும் தன்னம்பிக்கையோட இருக்கணும்,யாரையும் சார்ந்து வாழக் கூடாதுன்னு நினைப்பேன்.
திருமணம் திருப்பு முனையாக இருக்கும்!
"கோலங்கள்" தீபா வெங்கட் என்றால் தெரியாதவர்களே
கிடையாது. அந்த அளவுக்கு இல்லத்தரசிகளின்
மனங் களையும் கொள்ளை கொண்டவர். பெரிய திரையில் பின்னணிகுரல் கொடுப்பவராகவும், ரேடியோவில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வருகிறார் தீபா. இதோ அவரது வசீகரக் குரலில் நமது கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்..
* தொலைக்காட்சி தொடர்களில் உங்களை நிறைய பார்க்க முடியவில்லையே, ஏன்?
இது வரை நிறைய தொடர்களில் நல்ல நல்ல ரோல்ஸ் நடித்திருக்கிறேன். அதற்காக ஆடியன்ஸ் கிட்ட பாராட்டுகளும் வாங்கியிருக்கிறேன். இப்போது என்னுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி ரோல் அமையவில்லை. நிறைய தொடர்கள் நடிக்கவேண்டும் என்பதில்லை. ஒரு சில தொடர்கள் நடித்தாலும் அது மக்கள் மனதில் நிற்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
நான்கு மாதங்கள் வரை தொடர்கள் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். அந்த நேரத்தில்தான் டைரக்டர் விஸ்வநாதன் "வாடகை வீடு' தொடரைப் பற்றி சொன்னார். அது இரண்டு நாயகிகள் கதை. இருந்தாலும் இரண்டு பேருக்குமே முக்கியத்துவம் உள்ள கதை. அந்த ஸ்கிரிப்ட் எனக்குப் பிடித்திருந்தது.
சந்தோஷியும் நானும் நடிக்கிறோம். வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் சொந்த வீடு பற்றிய கனவும் அதற்காக அவர்கள் சந்திக்கும் பிரச்னையும்தான் கதை. அது ஒரு காமெடி தொடர். இதில் நான் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சார்ந்த பெண்ணாக நடிக்கிறேன். என் கேரக்டர் பெயர் பூஜா.
* இன்றைய சின்னத்திரையில் நடிப்பதற்கு நிறைய பெண்கள் வந்துவிட்டார்கள். அது உங்களுக்குப் போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
அப்படி யாரையும் நான் போட்டியாக நினைப்பதில்லை. இது போன்று நிறைய புதுமுகங்கள் வரும்பொழுது அது ஒரு ஆராக்கியமான போட்டியாக தான் இருக்கும். என் திறமை மீது எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. இந்த மாதிரி ஆரோக்கிய போட்டிகள் வரும்போதுதான்,திறமைகள் வெளியே தெரியும். அதுவே தங்களை இந்த பீல்டில் தக்க வைத்துக் கொள்ள ஒரு முயற்சியாக இருக்கும்.
* பெரிய திரையில் நடிப்பதற்குச் சின்னத்திரை நடிகைகள் விரும்புவதில்லையே? ஏன் நீங்களும் சின்ன சின்ன கதாபாத்திரத்தில்தான் வருகிறீர்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பெரிய திரையில் நீடிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் கிளாமராகவும் நடிக்க வேண்டும். கிளாமராகவும் ரொமான்ஸôகவும் நடித்தால்தான் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இது தவிர்க்க முடியாதது. ஒரு படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்துவிட்டால் அதற்குப் பிறகு சில வரைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. என்னுடைய லிமிட்டுக்குள்ள வருகிற படங்களில் மட்டுமே நான் நடிக்கிறேன். அப்படி என்னுடைய லிமிட்டைத் தாண்டி நடித்தால் எனக்கும் நிறைய வாய்ப்புகள் வரும். இப்போது தங்கை கேரக்டர்கள் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
* நீங்கள் டைரக்ட் செய்ய போகிறீர்களாமே?
உண் மையைச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு நடிகையாக ஜெயிப்பதற்கே நிறைய போராட வேண்டியிருக்கிறது. எத்தனையோ பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் தாண்டி வந்தால் தான் ஜெயிக்க முடியும். அதுபோல ஒரு டைரக்டர் ஆவது சுலபமல்ல. நிறைய பொறுப்புகளைச் சுமக்க வேண்டியிருக்கும். அப்படி நான் டைரக்ஷனில் இறங்கினால் எப்படி நடிகர், நடிகைகளை வேலை வாங்குவதில் இருந்து மற்ற எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு, கற்றுக் கொண்டுதான் வருவேன்.
* உங்கள் வருங்கால திட்டம் என்ன?
எந் தத் துறையாக இருந்தாலும் நல்ல பேர் வாங்குவதற்கும், ஒரு நல்ல இடத்திற்கு வருவதற்கும் நிறைய உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் சினிமாவைப் பொருத்தவரை அது ரொம்ப ஈசி. இப்போதைக்கு எனக்கு நல்ல நடிகை என்று பெயர் இருக்கிறது. அதை கடைசிவரை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். மக்கள் என்னை அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாக நினைக்கிறார்கள் அதை தக்கவைத்துக் கொள்வதுதான் இப்போதைய பிளான்.
* நடிப்பைத் தவிர வேறு எந்த துறையில் ஆர்வம் இருக்கு?
நடிப்பைத் தவிர பெரிய திரையில் நாயகிக்கு டப்பிங் குரல் கொடுக்கிறேன். சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து டப்பிங் பேசிக் கொண்டிருக்கிறேன். இதை தவிர ஹலோ ஒன் எப் எம் ரேடியோவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறேன். ரேடியோவிலும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
* உங்கள் திருமணம் எப்போது? காதல் திருமணமாக இருக்குமா?
கல் யாணம் என் வாழ்க்கையில் ஒரு திருப்பமாக இருக்கும். நான் காதலித்தாலும் இல்லை என்றாலும் அது என் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடக்கும். காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் சந்திக்கும் நிறைய பிரச்னைகளை நான் பார்த்திருக்கிறேன். பெற்றவர்கள் வாழ்த்துக்களோட நடக்கிற திருமணம்தான் சந்தோஷமானதாக இருக்கும். என் திருமணம் என் அப்பா அம்மாவின் விருப்பபடிதான் இருக்கும். அந்த பொறுப்பை அவர்களிடமே ஒப்படைத்துவிட்டேன். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை.
நடிப்பதில் ஆர்வம் இல்லை! - ஷில்பா
விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக கொஞ்சும் தமிழில் பேசி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷில்பா. "நம் வீட்டு கல்யாணம்' நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தளத்தில் அவரைச் சந்தித்தோம். நம்மிடமும் கொஞ்சும் தமிழில் பேசினார். இனி அவருடன்..
* உங்களைப் பற்றி சொல்லுங்கள்?
எனக்கு பூர்வீகம் கேரளா. நான் ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறேன். ஐந்து வருடமாக இந்துஸ்தானி மியூசிக் கற்று வருகிறேன். என் தங்கை என்ஜினீயரிங் படிக்கிறாள். எங்களுடையது சிறிய அன்பான குடும்பம்.
* தற்போது என்னென்ன நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குகிறீர்கள்?
"நம் வீட்டு கல்யாணம்' நிகழ்ச்சியை ஒன்றரை வருடமாக தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறேன். அதைத்தவிர டிவி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறேன். தற்போது விஜய் டிவியில் புதியதாக தொடங்கியிருக்கும் "சினிமா சினிமா' நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாகவும் இருக்கிறேன்.
* பிரபலங்களின் திருமணத்தை "நம் வீட்டு கல்யாணம்' நிகழ்ச்சி மூலம் தொகுத்து வழங்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
புது மையான அனுபவம். பிரபலங்களின் திருமணத்தை நேரில் சென்று பார்க்க முடியாதவர்கள் தங்கள் வீட்டில் இருந்தே அவர்களுடைய சடங்குகள், சம்பிரதாயங்களைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. அதைத் தவிர திருமணத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்களைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. இந்தக் கான்சப்ட்டே ரொம்ப புதுமையானது. மக்களிடம் நிறைய வரவேற்பு இருக்கிறது.
* தொடர்களில் ஏன் நீங்கள் நடிக்கவில்லை?
தொடர்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நடிப்பதில் எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை.
* நிகழ்ச்சி தொகுப்பாளினி தவிர வேறு எதில் கவனம் செலுத்துகிறீர்கள்?
ஸ்டேஜ் ஷோக்களில் இந்துஸ்தானி இசையில் பாடல்கள் பாடுகிறேன். பாட்டு தான் ரொம்ப பிடித்திருக்கிறது. இப்போதைக்கு முழுக்க முழுக்க இந்துஸ்தானி இசை பாடல்களில்தான் கவனம் செலுத்துகிறேன்.
* பின்னணி பாடகி ஆவதற்கு ஏதும் முயற்சி செய்கிறீர்களா?
கன் னடப் படம் ஒன்றில் ஒரு பாடல் பாடியிருக்கிறேன். தமிழில் பாடுவதற்கான முயற்சிகள் செய்து வருகிறேன். அதற்காக இசையமைப்பாளர்களிடம் டெமோ சிடிகள் கொடுத்து வருகிறேன்.
* இந்துஸ்தானி இசையைத் தேர்தெடுத்தது ஏன்?
என் குரலுக்கு இந்துஸ்தானி இசை பொருத்தமாக இருக்கிறது. சிறுவயதில் கர்நாடக இசை கொஞ்சம் கற்றுக்கொண்டேன். மேற்கத்திய மற்றும் இந்துஸ்தானி இசை பிடித்தமானவை. எனவே அவற்றை விரும்பி கற்றுக்கொண்டேன். பொதுவாகவே எனக்கு மெலோடியான இசையைக் கேட்க ரொம்ப பிடிக்கும்.
* நிகழ்ச்சிகளின் மூலம் மக்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு பேசும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
மக் களை நேரடியாக தொடர்பு கொண்டு பேசுவதால், நிதானமாகவும், கவனமாகவும் பேசவேண்டியுள்ளது. ஏதாவது தவறாகி போனாலும் திருத்திக் கொள்ள முடியாது. மக்கள் நம்மை நேரடியாக திட்டிவிடுவார்கள். அதனால் மிக கவனத்துடன் பேச வேண்டும். சிரமங்களுக்கு ஆண்,பெண் என்ற வேறுபாடு தெரியாது. பிற துறைகளில் உள்ள சிரமங்கள் இத்துறையிலும் இருக்கின்றன.
* உங்களைப்பற்றி ரசிகர்கள் என்ன சொல்லுகிறார்கள்?
நிகழ்ச் சியைத் தொகுத்து வழங்கும்போது என் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது எனச் சொல்லுகிறார்கள். மேலும், நளினமாகப் பேசுவதாகவும் சொல்லுகிறார்கள். இப்படி மக்கள் நம்மிடம் நேரடியாக சொல்லும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இதை எனக்கு கிடைக்கும் பரிசாக நினைக்கிறேன்.
தங்கம் தந்த தங்கை!
பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும்
"தங்கம்' தொடரில் ரம்யாவின்
தங்கையாக வந்து எல்லோர் மனதிலும்
இடம் பிடித்த ஜோதியை அத் தொடரின்
படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தோம்.
சின்னத்திரையில் நடிக்க வந்தது எப்படி?
நான் ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு பெண். என்ஜினீயரிங் படித்துவிட்டு ஹைதராபாத்தில் உள்ள மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை பார்க்க வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது. ஆனால் விதி என்னை சினிமாவில் கொண்டு வந்து விட்டுவிட்டது.
ஒருமுறை ராதிகா மேடம் "தாலிபிரமா' என்கிற தெலுங்கு தொடருக்காக மேக் - அப் டெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்தார்கள் என்று கேள்விப்பட்டு என் பெற்றோர்கள் சம்மதத்துடன் போய் பார்த்தேன்.
அந்தத் தொடரில் எனக்கு நிரோஷாவோட மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ராடான் மீடியாவில்தான் நான் முதன் முதலில் நடித்தேன். இப்படி தான் என் சின்னத்திரை பயணம் தொடங்கியது. படிப்பை விட்டுவிட்டு நடிகையாக வருவேன் என்று நான் நினைத்து கூட பார்த்ததில்லை.
முதல் தொடரே எனக்கு ஆந்திராவில் நல்ல பெயரைக் கொடுத்தது. அதன் பிறகு ஹன்ஷா விஷன் தயாரித்த தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து ஏ.வி.எம்.மின் "சொர்க்கம்' தொடர் மூலமாக தான் முதன் முதலில் தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போழுது நிறைய தமிழ் தொடர்களில் நடித்து வருகிறேன்.
தற்போது என்ன தொடர்களில் நடித்து
வருகிறீர்கள்?
தங்கம் தொடரில் ரம்யாகிருஷ்ணன் தங்கையாக நடித்து வருகிறேன். அவங்களைப் போல பெரிய ஹீரோயின்கூட நடிப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதை அடுத்து கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஏ.வி.எம்.மின் "உறவுக்கு கை கொடுப்போம்' என்கிற தொடரில் நடித்து கொண்டிருக்கிறேன்.
ஒரே நேரத்தில் தமிழ்,தெலுங்கு இரண்டிலும் நடிப்பது கஷ்டமாக இல்லையா எப்படி நேரம் கிடைக்கிறது?
தெலுங்கு எனது தாய் மொழி என்பதால் அதில் நடிப்பதில் எனக்கு அவ்வளவு பெரிய சிரமம் ஒன்றும் தெரியவில்லை. தமிழில் நடிக்க வந்த புதிதில் எனக்குத் தமிழே தெரியாது. எங்கே எப்படி பேச வேண்டும் என்று தெரியாது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறேன். இப்போது நான் ரொம்ப நன்றாகவே தமிழ் பேசுவதாக எல்லோரும் சொல்கிறார்கள்.
எனக்கு தமிழ் இன்டஸ்ட்ரி ரொம்ப பிடித்திருக்கிறது. நிறைய தமிழ் தொடர்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. தமிழ் மக்கள் மரியாதையாகப் பழகுகிறார்கள். "தங்கம்' தொடருக்குப் பிறகு நிறைய தமிழ் மக்களிடம் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
தெலுங்கில் இரண்டு தொடர்கள் நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் முன்று தொடர்கள் நடிக்கிறேன். இரண்டு மொழிகளிலும் நடிப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
சென்னைக்கும், ஆந்திராவுக்கும் மாறி மாறி போய் வரும் போது சில நேரங்களில் நான் சென்னையில் இருக்கிறேனா அல்லது ஆந்திராவில் இருக்கிறேனா என்று குழப்பமாக இருக்கும். இரண்டு மொழியிலும் நடிப்பதில் என்ன கஷ்டம் வந்தாலும் அதை எதிர்த்து போராடி பெரிய இடத்துக்கு வர வேண்டும். சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் நிறைய இருக்கிறது.
பெரியதிரைக்குச் செல்லும் எண்ணம் உண்டா?
நல்ல கம்பெனி, பெரிய டைரக்டர், நல்ல ஹீரோ இந்த மாதிரி வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். பெரிய திரையில் இருந்து நிறைய வாய்ப்புகள் வருகின்றன. வருகிற வாய்ப்புகள் எல்லாம் கிளாமர் ரோலாகவே வருவதால் எனக்கு நடிக்க விருப்பமில்லை. கதையை ஒட்டி கிளாமராக இருந்தால் பரவாயில்லை.
ஒருமுறை கிளாமராக நடித்து விட்டால் அதை தொடர்ந்து அது போன்ற வாய்ப்புகள்தான் அமையும் என்பதால் நல்ல வாய்ப்பு வரும் போது நடிப்பேன். இப்போதைக்கு சின்னத்திரையில் மட்டும்தான் கவனம் செலுத்தி
வருகிறேன்.
உங்களுக்கு என்ன மாதிரி கேரக்டர்கள் நடிக்க பிடிக்கும்?
எனக்கு ஹோம்லியான கேரக்டர் நடிக்க ரொம்ப பிடிக்கும். கிராமத்துப் பொண்ணா நடிக்க பிடிக்கும். எந்த மாதிரி கேரக்டர் ஒத்து வருமோ அது மாதிரி நடிக்க வேண்டும். இப்பொழுது நடித்து கொண்டிருக்கிற தொடர்களும் என் எண்ணம் போலவே கிடைத்திருக்கின்றன. இப்படி ஒவ்வொரு தொடரில் வேறு வேறு மாதிரி நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நெகட்டீவ் ரோல்ஸ் நடிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது.
ரசிகர்களைச் சந்தித்தது உண்டா, என்ன சொல்லுவார்கள்?
ஆந்திராவில் உள்ள மக்களுக்கு என்னை நன்றாக அடையாளம் தெரியும். பொது இடங்களில் அல்லது ஷாப்பிங் போகும் போது எங்காவது பார்த்து விட்டால் என் பக்கத்தில் வந்து பேசுவார்கள், நலம் விசாரிப்பார்கள், என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள் நான் நடிக்கும் தொடர்களைப் பற்றி விமர்சிப்பார்கள்.
இப்படி அவர்கள் என் மீது அன்பு செலுத்தும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அதே போல் தங்கம் தொடரில் நடிக்க ஆரம்பித்த பிறகு தமிழ் மக்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு இருக்கிறது.