Wednesday, December 2, 2009

காதல் தீ பற்றவில்லை! - ப்ரியாமணி


தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் முத்தழகி பாத்திரமாக பதிந்துப்போன ப்ரியாமணியை சந்திக்க சென்றபோது சென்னை சற்று மழையிலிருந்து ஒதுங்கியிருந்தது.

தமிழ் சினிமாவின் கருப்பு நாயகி, தேசிய விருது நடிகை என்ற புகழோடு தற்போது தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கிலும் தனது நடிப்பு முத்திரையைப் பதித்து வருகிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அவரை, பல மொழிப் படங்களும் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்பதில் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். சூடான காபியோடு நம்மை வரவேற்றவரிடம் உரையாடல் தொடங்கியது.

தெலுங்கில் தற்போது உங்களைப் பற்றித்தான் பேச்சாமே?

தமிழில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற படமான "நடோடிகள்' திரைப்படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் ரவிதேஜாவுடன் நடித்து வருகிறேன். இதையும் சமுத்திரக்கனிதான் இயக்குகிறார். அடுத்து ஜெகபதிபாபுவுடன் நடிக்கிறேன். இதை அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கவிருக்கிறார்.

அடுத்து கன்னடப் படம் ஒன்றிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். இது தமிழில் வெளிவந்த "குஷி' படத்தின் ரீ-மேக்தான். நிஜமாத்தான் சொல்றீங்களா? தெலுங்கில் என்னைப் பற்றியா பேசிக்கிறாங்க! கேட்கவே சந்தோஷமா இருக்கு.

ஜெகபதிபாபு கூட எந்த மாதிரியான பாத்திரத்தில் நடிக்கிறீங்க?

ஐய்யோ! மாட்டிவிடப் பார்க்கிறீங்களே. படத்தின் முக்கால் வாசி படப்பிடிப்பு முடிந்து, திரைக்கு வரத் தயாரா இருப்பதால இப்ப சொல்ல மாட்டேன். ஆனால், இதில் எனக்கு முக்கியமான பாத்திரம்னு மட்டும் சொல்லுவேன். படத்தில் துறு துறுன்னு இருக்கிற மாதிரியான பாத்திரம். இது போதுமா?

சரி! கதையாவது என்னன்னு சொல்லுங்க?

விட மாட்டீங்க போலிருக்கே! முழுக்க முழுக்க தெளிவான ஒரு காதல் கதைதான். ஒரு பெண்ணோட பார்வையில் மிகவும் உறுதியான காதலாக இருக்கிற விஷயம், காதலிக்கிற பையனோட பார்வையில அவங்களுக்குள்ளே இருக்கிறது வெறும் பழக்கம் மட்டும்தான். ஆனால் காதல் இல்லை! இதற்கு நேர்மாறாக படத்தோட இரண்டாவது பகுதி அமைக்கப்பட்டிருக்கும். தெலுங்கில் எனக்கு முக்கியமான படமாக இது இருக்கலாம்! (குழப்புறீங்களே முத்தழகி!)

உங்களுக்கு விளம்பரம் அதிகமாக கிடைக்கக் காரணமென்ன?

இதெற்கெல்லாம் காரணம் "பருத்திவீரன்' முத்தழகி பாத்திரம்தான்! தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மற்ற மாநில ரசிகர்களையும் மிகவும் கவர்ந்த படம் அது.

வெளியிடங்களில் மற்ற மாநில ரசிகர்கள் பார்த்தால், ""உங்க படம் பார்த்தோம் மேடம். ரொம்ப நல்லா பண்ணியிருந்தீங்க''ன்னு அவங்க சொல்லும்போது சந்தோஷமாக இருக்கும். இதற்கெல்லாம் காரணமான இயக்குனர் அமீர் ஸôருக்குத்தான் நன்றி சொல்லணும். அடுத்து மணிரத்னம் ஸôர் படத்தைத்தான் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கேன். அது வெளிவந்தா நடிப்பில் என்னோட அடுத்த பரிமாணத்தையும் பார்ப்பீங்க!

தமிழில் ஒரு இடைவெளி விழுகிற மாதிரி இருக்கே?

நிறைய கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நல்ல பாத்திரப் படைப்போட வருகிற கதைக்காகத்தான் காத்திருக்கிறேன். நல்ல கதை வரும்போது கண்டிப்பா நடிப்பேன். அப்போது இந்த இடைவெளி தெரியாது!

நகரத்து மைனா, கிராமத்து குயில் எந்த பாத்திரம் பிடிச்சிருக்கு?

இரண்டு பாத்திரங்களுமே எனக்குப் பிடித்தவைதான். இந்த பாத்திரம்தான் பண்ணனும், பண்ணக்கூடாது என்று எந்த வரைமுறையும் நான் வைத்துக் கொள்வதில்லை. எந்த மாதிரியான பாத்திரம் கிடைத்தாலும் நடிப்பேன். எல்லாவிதமான பாத்திரங்களில் நடித்தால்தான், நடிப்பில் ஒரு சமநிலை கிடைக்கும். ரசிகர்களும் இவங்க எந்தப் பாத்திரத்திலும் நடிப்பாங்க என்கிற முடிவுக்கு வருவாங்க. நமக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும். ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே என்னால சவாரி செய்ய முடியாது!

ஹிந்தி சினிமாவில் நடிப்பது எப்படியிருக்கு?

தமிழில் மணிரத்னம் ஸôர் இயக்குகிற "அசோகவனம்', அப்படியே ஹிந்தியில் "ராவணா' என்கிற பெயரில் தயாராகிறது. இதிலேயும் நான் நடித்திருக்கிறேன். இன்னும் இருபத்தைந்து நாள் படப்பிடிப்புதான் நடைபெற வேண்டியிருக்கு. முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமொன்றை எனக்கும் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய்ன்னு பெரிய நடிகர்களோட நடிக்கறது மனதிற்கு நிறைவாக இருக்கு!

பேச்சில் யதார்த்தம் தெரிகிறதே? படிப்பில் எப்படி?

உண்மையைச் சொல்லணும்னா படிப்பு மேல எனக்கு பெரிசா ஆர்வம் கிடையாது. எப்போதும் நடனம், விளையாட்டுன்னுதான் ஓடிட்டிருப்பேன். ஆனாலும் அடித்துப் பிடித்து எழுபது சதவீதத்திற்கு மேலே மதிப்பெண்களை வாங்கி விடுவேன். (அப்ப சமர்த்தான பொண்ணுதான்னு சொல்லுங்க!)

குறைக் கூறுபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

எல்லாருமே குறை கூறப்பட்டவர்கள்தான். குறைகளை சுட்டிக்காட்டுறது நல்லதுதான். ஆனால், எப்போதும் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டிக் கொண்டிருப்பவர்களை கண்டால்தான் எனக்கு எரிச்சலாக வரும். சில நேரங்களில் என்னிடம் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டுமே சொல்லும் ஆட்களைக்கூட எனக்குப் பிடிக்காது. ஏன்னா, அவங்க அதில் பொய் சொல்லவும் வாய்ப்பிருக்கு இல்லையா? அதனால், நிறையையும், குறையையும் சேர்த்து சொல்லும் ஆட்களைத்தான் எனக்குப் பிடிக்கும்!

பல மொழிகளில் நடிப்பதால், மொழி பிரச்சினை வந்திருக்கிறதா?

எனக்கு ஓரளவிற்கு எல்லா மொழிகளும் தெரியும். அதனால் பெரும்பாலும் மொழிப் பிரச்சினை வந்ததில்லை! எந்த மொழிக்குப் போனாலும், அங்கு பேச வேண்டிய வசனங்களை பேப்பரில் எழுதி மனப்பாடம் செய்து கொண்டு, பேசி விடுவேன். சந்தேகம் வந்தால், மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.

எதிர்பார்க்கும் பாத்திரம் எது?

தமிழில் "மூன்றாம் பிறை' படத்தில் ஸ்ரீதேவி நடித்த பாத்திரம், "படையப்பா'வில் ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கேரக்டர், ஹிந்தியில் ராணி முகர்ஜி "பிளாக்' படத்தில் நடித்த வேடம் போன்ற வித்தியாசமான பாத்திரங்கள் எல்லாவற்றிலும் நடிக்க வேண்டுமென்கிற ஆசை இருக்கிறது.

காதல் தீ உங்களையும் பற்றிக் கொண்டிருக்கிறதா?

இதுவரைக்கும் காதல் தீ பற்றிக் கொள்ளவில்லை. பத்திக்கிட்டா, கண்டிப்பா உங்ககிட்ட மட்டும் ரகசியமா சொல்றேன்.

காதலிக்கவே மாட்டேன் - பூர்ணா!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைகளாக விளங்குபவர்களில் பெரும்பாலானோர் கேரளத்தைச் சேர்ந்தவர்களே! அதற்கு மிகச் சிறந்த உதாரணங்களாக நிறைய பேரைச் சொல்லலாம். தற்போது அவர்களது வெற்றிக்கொடி பாலிவுட்டிலும் பறக்க ஆரம்பித்திருக்கிறது.அந்த வரிசையில் தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பிலும், நடனத்திலும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி நடித்து வருபவர் பூர்ணா. இவர் தற்போது தமிழில், நான்கு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். "துரோகி' படப்பிடிப்பில் இருந்தவரை சற்று ஓரம் ஒதுக்கிப் பேசினோம்.சினிமாவிற்குள் உங்களது பிரேவசம் எப்படி நிகழ்ந்தது? ""நான் கேரள - மலையாள முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த பொண்ணு. ஸ்கூலில் படிக்கும்போதே கிளாசிக்கல் டான்ஸ் முறைப்படி கற்றுக்கொண்டேன். கேரளாவில் ஒரு முறை "சூப்பர் டான்ஸர் ரியால்டி ஷோ' நடந்தது. அதில் கலந்துகிட்டு, நடனம் ஆடியபோது எனக்குத்தான் சிறந்த நடனத்திற்கான விருது கிடைத்தது. இதுதான் நான் சினிமாவிற்கு வருவதற்கான முதல் படி. காரணம், அதுவரைக்கும் தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்த்து, ரசிக்கிற சாதாரண பெண்ணாகத்தான் இருந்தேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வமெல்லாம் அதன் பிறகுதான் ஆரம்பித்தது. மலையாளத்தில் மோகன்லால் ஸôருக்கு மகளாக "அலிபாய்' என்ற படத்தில் நடித்தேன். அப்போ நான் ப்ளஸ்-ஒன் மாணவி. இந்தப் படத்தை ஷாஜி கைலாஸ் இயக்கியிருந்தார். பிறகு மோகன்லால் ஸôருக்கே இரண்டாவது நாயகியாக "பிளாஷ்' என்கிற படத்தில் நடித்தேன். இந்த சமயத்தில்தான் எனக்கு திருமுருகன் ஸôர், தன்னோட படத்துக்கான நாயகியை தேடிக் கொண்டிருக்கிறார்ன்னு தெரிந்தது. உடனே அவரைப் போய்ப் பார்த்தேன். ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்துப் பார்த்தார். அவருக்கு பிடித்துப்போகவே "முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்திற்கு என்னை தேர்வு செய்தார். இப்படித்தான் தமிழுக்கு நான் அறிமுகமானேன்."முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்தில் வைகைப் புயலுடன் கோடாங்கி பாட்டுக்கு சிறப்பாக ஆடினீர்களே எப்படி?இந்தப் பாட்டுக்கு வடிவேலு ஸôரும், சாந்தி மாஸ்டரும் கொடுத்த உற்சாகம்தான் நான் நல்லா நடனம் ஆட உதவியது. அதுவுமில்லாமல், அடிப்படையில் நடனத்தில் நான் ஃபோக், கதகளியெல்லாம் கற்று வைத்திருந்ததும் சிறப்பாக நடனமாட உதவியது. இங்கே உங்ககிட்ட ஒரு உண்மையைச் சொல்லியாகணும். பள்ளி படிப்பை முடித்தவுடனே என்னோட ஆசையெல்லாம் சென்னை வந்து ஷோபனா மேடத்தின் நடனப்பள்ளியில் சேர்ந்து நடனம் கற்றுக்கொண்டு, நடன ஆசிரியை ஆக வேண்டுமென்பதுதான்!மலையாளத்தில் வெளிவந்த "மணிசித்திரத்தாழ்' படத்தில் ஷோபனா மேடத்தின் நடனத்தைப் பார்த்து நான் மெய்மறந்து போய் விட்டேன். என்னோட சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத படங்களில் இந்தப் படமும் ஒன்று. அதனால்தான் நடனமென்றால் மிகுந்த சிரத்தையெடுத்து ஆடுகிறேன்!"முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்திற்குப் பிறகு பெரிய இடைவெளி ஏன்? இந்தப் படத்திற்குப் பிறகு, எனக்கு கன்னடத்திலும், மலையாளத்திலும் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அதனால் ஒரே நேரத்தில் இங்கேயும், அங்கேயும் நடிக்க முடியாது என்பதற்காக, பட வாய்ப்புகளை குறைத்துக் கொண்டேன். தற்போது "வித்தகன்', "துரோகி', "கந்தக்கோட்டை' போன்ற படங்களில் மாறுபட்ட வேடங்களை தேர்வு செய்து நடித்திருக்கிறேன். விரைவில் இந்தப் படங்களை நீங்கள் திரையில் பார்க்கலாம். "துரோகி' படத்தில் எல்லோரும் பெண்களாமே?ஆமாம். படத்தோட இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் என எல்லோருமே பெண்கள்தான். பொதுவாக படப்பிடிப்பில் ஆண்களுடைய குரல்தான் ஓங்கி ஒலிக்கும். ஆனால், இந்தப் படத்தை பொருத்தவரைக்கும் பெண்களின் குரல்தான் எந்தப் பக்கம் திரும்பினாலும் கேட்கும். இந்தப் படத்தை மணிரத்னத்தின் உதவியாளரான சுதா மேடம் இயக்க, இந்திரா மேடம் தயாரிக்கிறாங்க. படத்தில் விஷ்ணு, ஸ்ரீகாந்த் என இரண்டு கதாநாயகர்கள். நான் விஷ்ணுவிற்கு தங்கையாகவும், ஸ்ரீகாந்திற்கு நாயகியாகவும் நடிக்கிறேன். முழுக்க முழுக்க பெண்களால் நிரம்பியிருக்கும் "துரோகி' படத்தில் வேறுபாட்டை ஏதேனும் உணர்ந்தீர்களா?பெண்களோடு சேர்ந்து வேலைப் பார்க்கும்போது கொஞ்சம் ரிலாக்ஸôக இருப்பதாக உணர்ந்தேன். படப்பிடிப்பிற்கு போய்விட்டால் எல்லாரிடமும் எளிதாக பழகலாம், பேசலாம், அரட்டை அடிக்கலாம். ஆனால் மற்ற படப்பிடிப்புகளில் அப்படி செய்ய முடியாது, அவ்வளவுதான். மற்றபடி எனக்கு பெரியதாக வேறுபாடுகள் எதுவும் தெரியவில்லை."வித்தகன்' படத்தில் சண்டையெல்லாம் போடுகிறீர்களாமே?இது ஒரு ஆக்ஷன் படம். இதுவரை கிராமத்து பெண்ணாகத்தான் நடித்து வந்திருக்கிறேன். ஆனால், முதன் முறையாக இந்தப் படத்தில் நகரத்தில் வாழும் நவநாகரீக பெண்ணாக நடிக்கிறேன். கிருஸ்துவ மதத்தில் பிறந்த மெர்சி பாத்திரத்தில் நடிக்கிறேன். இதில் நாயகன், நாயகி என்று இல்லாமல், வேறு ஒரு கோணத்தில் பார்த்திபன் ஸôர் படத்தை எடுத்திருக்கிறார். துப்பாக்கி எடுத்தெல்லாம் இதில் நான் சண்டை போட்டிருக்கிறேன். என்னுடைய ஆக்ஷன் பிடித்திருக்கிறதா? என்று படத்தைப் பார்த்துட்டு சொல்லுங்கள்!தற்போது நடித்து வரும் "கந்தக்கோட்டை' மற்றும் "அர்ஜுனன் காதலி' படங்களைப் பற்றி?"கந்தக்கோட்டை' சிறப்பம்சம் நிறைந்த ஒரு படம். இதை சக்தி ஸôர் இயக்க, ராஜா ஸôர் தயாரிக்கிறார். வழக்கமாக நாயகனுக்கும், வில்லனுக்கும்தான் போட்டி வரும். ஆனால், இந்தப் படத்தில் நாயகிக்கும், வில்லனுக்கும் இடையில்தான் போட்டி நடக்கும். வில்லனாக சம்பத் ஸôர் நடிக்க, நாயகன் நகுலுக்கு, நாயகியாக நான் நடிக்கிறேன். இந்தப் படத்தில் என்னோட அறிமுகமே ஒரு நாயகனுக்குரிய அறிமுகத்தோடதான் ஆரம்பமாகும். இந்தப் படத்தில் நகுலுக்கு காதலென்றாலே பிடிக்காது. ஆனால் நானோ காதலுக்கு ஆதரவா செயல்படுவேன். எங்களுக்குள்ளே நடக்கிற மோதல்தான் கதையே!"அர்ஜுனன் காதலி' படம் அப்படியே தலைகீழ்! இந்தப் படத்தில் எனக்கு காதல் என்றாலே பத்தடி தூரத்தில் இருப்பேன். என்னை காதலிக்க வைக்கிறதுதான் நாயகனோட வேலையே! நாயகனாக ஜெய் நடிக்கிறார். இந்தப் படத்தை பார்த்தி பாஸ்கர் இயக்க, சேகர் வி.ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார். காதலிக்கவே மாட்டேன்னு பிடிவாதம இருக்கிறவங்க, இந்தப் படத்தைப் பார்த்தால் நிச்சயம் காதலிக்க ஆரம்பிச்சுடுவாங்க. அந்தளவிற்கு யதார்த்தமான காதல் கதையா இயக்குனர் உருவாக்கிஇருக்கிறார்'' என்றவாறு அடுத்த ஷாட்டுக்கு ரெடியானார் பூர்ணா.

சினிமாதான் என் உலகம்!


சன் டிவி​யில் ஒளி​ப​ரப்​பா​கிக் கொண்​டி​ருக்​கும் "தங்​கம்' தொட​ரின் ​படப்​பி​டிப்பு. கங்​காவை ​(ரம்யா கிருஷ்​ணன்)​ பழி​வாங்க சதி செய்து கொண்​டி​ருந்த இள​வஞ்சி​ (காவேரி)​யைச் சந்​தித்​தோம். அங்கு சுப்​பு​லட்​சமி,​ நாச்​சியா,​ மங்கா அக்கா என அனை​வ​ரி​ட​மும் சிரித்து விளை​யா​டிக்​கொண்டே பிஸி​யாக இருந்​தார் நடிகை காவேரி. படப்​பி​டிப்பு இடை​வே​ளை​யில் வந்து,​ நம்​மு​டைய கேள்​வி​க​ளுக்கு அவர் சொன்ன பதில்​களி​லி​ருந்து...​

"தங்​கம்' தொட​ரில் உங்​கள் கேரக்​டர் இந்​த​ளவு பேசப்​ப​டும் என்று நினைத்​தீர்​களா?​​

கதையை முதன் முத​லில் கேட்​கும் பொழுது இந்​த​ள​வுக்கு ரீச் ஆகும்ன்னு எதிர்​பார்க்​க​வில்லை. ஐயா​வுக்கு மரு​ ம​க​ளாக வரு​கிற கேரக்​டர் கொஞ்​சம் பவர் ஃபுல்​லான ரோல் என்று சொன்​னார்​கள். நான் இது​வரை நெகட்​டீவ் ரோலில் நடித்​தது கிடை​யாது. எனக்கே இது ஒரு புது​மை​யான அனு​ப​வம் தான். ஐயா​வின் சொத்து ​ வேறு யாருக்​கும் போகக் கூடாது என்​ப​தற்​குத்​தான் அவ்​வ​ளவு வில்​லத்​த​னம் செய்ய வேண்டி இருந்​தது.​

பார்ப் ​ப​தற்கு ரொம்ப வெகு​ளியா இருக்​கீங்க. ஆனால் தொட​ரில் பயங்​கர வில்​லி​யாக கலக்​கு​றீங்​களே மக்​கள்​கிட்ட உங்​கள் இமேஜ் பாதிக்​காதா?​​

பொது ​வாக வில்லி கேரக்​ட​ரில் நடிப்​ப​வர்​கள் என்​றால் பார்க்​கும் பொழுதே பய​மு​றுத்​தும்​படி இருப்​பார்​கள். ஆனால் பார்​வைக்கு மென்​மை​யாக இருக்​கிற ஒரு பெண் செய்​கிற வேலை​யெல்​லாம் பயங்​கர வில்​லத்​த​ன​மாக இருந்​தால் பார்க்​கி​ற​வர்​க​ளுக்கு வித்​தி​யா​ச​மாக இருக்​கும் என்று எதிர்​பார்த்​தேன். என்​னு​டைய இந்த நினைப்பு வீண்​ போ​க​வில்லை. என்​னு​டைய நடிப்​பிற்கு மக்​க​ளி​டம் நல்ல வர​வேற்பு இருக்​கி​றது. இது இமேஜை பாதிக்​கும் என்று எனக்​குத் தோன்​ற​வில்லை.​

தொட​ரில் உங்​க​ளின் வில்​லத்​த​ன​மான நடிப்​பைப் பார்த்​து​விட்டு உங்​கள் வீட்​டில் உள்​ள​வர்​கள் என்ன சொன்​னார்​கள்?​​

நான் முதன் முறை​யாக நெகட்​டீவ் ரோல் செய்​வ​தால்,​ "ஏன் இப்​படி?​ இந்த மாதிரி நடித்​தால் ​ மக்​கள் உன்னை உதைக்க மாட்​டார்​களா?​ இவ்​வ​ளவு அநி​யா​யம் செய்​வது போல் இருக்​கி​றதே...?' என்று சொல்​லு​வார்​கள். அம்​மா​தான் தின​மும் தவ​றா​மல் ​ டிவி​யில் தொடரை பார்ப்​பார்​கள். நான் ஏதா​வது தப்பு செய்​தி​ருந்​தால் கூட அதைச் சுட்​டிக்​காட்​டித் திருத்​து​வார்​கள்.

பெரும் பகுதி படப்​பி​டிப்​பில்​தான் இருக்​கி​றீர்​கள். உங்​கள் நண்​பர்​கள் பற்றி சொல்​லுங்​கள்?​​

என் ​னு​டைய ஃபேமிலி என்று சொன்​னால் அது இந்த ஷூட்​டிங் ஸ்பாட்​டில் உள்​ள​வர்​கள்​தான். நான் வீட்​டில் இருக்​கும் நேரத்​தை​விட இங்​கே​தான் அதிக நேரம் செல​ வி​டு​கி​றேன். என்​னு​டைய சொந்​தம்,​ பந்​தம் ,​அத்தை,​ மாமா என்று எல்​லாமே இங்கே உள்​ள​வர்​கள் தான்.

எனக்கு வேற உல​கமே இல்ல. வேற உல​கத்தை பற்றி நான் நினைப்​பது கூட இல்லை.​

இந்த கேரக்​ட​ருக்​காக உங்​களை எப்​படி தயார் செய்து கொள்​கி​றீர்​கள்?​​

ஹோம் ஒர்க் செய்​கி​றேன். ஒவ்​வொரு சீன் முடிஞ்​சப்​ பு​றம் என்ன என்ன தவறு செய்​தி​ருக்​கேன் என்று பார்ப்​பேன். மறு​ப​டி​யும் அதை செய்​யக்​ கூ​டா​தல்​லவா?​!​ வீட்​டில் நடித்து பார்ப்​பேன். மற்​ற​படி அடுத்து ​ சீன் என்ன என்​ப​தெல்​லாம் எங்​க​ளுக்கு தெரி​யாது. முன்​னா​டியே சொல்​ல​மாட்​டாங்க. ஸ்பாட்​டுக்கு வந்த பிற​கு​தான் சொல்​வார்​கள். வீட்​டுக்கு வந்த பிறகு படப்​பி​டிப்​பின் போது ஏதா​வது தவறு செய்​தி​ருக்​கேன் என்று தோன்​றி​னால்,​ எங்​க​ளின் கிரி​யேட்​டீவ் ஹெட்​கிட்ட போன் செய்து அவுங்​க​ளோட கருத்​துக்​களை கேட்​போம் அவ்​வ​ளவு தான்.​

வேறு என்ன ​ தொடர் பண்​றீங்க?​ சினி​மா​வில் நெகட்​டீவ் ரோல் வாய்ப்பு வந்​தால் நடிப்​பீர்​களா?​​

கலை ​ஞர் டிவி​யில் வரு​கிற "தாயம்' தொட​ரி​லும் பண்​ணிக்​கிட்டு இருக்​கேன். அடுத்தபடியா "சுழல்'ன்னு ஒரு தமிழ் படம் பண்​றேன். அதில் ஹீரோ,​ ஹீரோ​யின்ஸ் எல்​லாம் புதுசு. டைரக்​ட​ரும் மலை​யாள டைரக்​டர். பிர​தாப் போத்​த​னுக்கு ஜோடி​யாக நடிக்​கி​றேன். ஒரு சீனி​ய​ரு​டன் நடிப்​பது ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருக்​கி​றது. ரொம்​ப​வும் நட்​போடு நடிப்​பைச் சொல்​லித் தரு​வார். அவர் இரு​பது வரு​ஷத்​திற்​குப் ​ பிறகு சினி​மா​வில் மறு​ப​டி​யும் ரீஎண்ட்ரி ஆவது மன​திற்கு ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருந்​தது. சினி​மா​வில் நெகட்​டீவ் ரோல் வந்​தால் பண்​ணி​த்தான் பார்ப்​போமே!​​

வைகா ​சி​பொ​றந்​தாச்சு படத்​தில் அறி​மு​க​மான காவே​ரிக்​கும். இப்​போது இள​வஞ்​சியா நடிக்​கும் காவே​ரிக்​கும் வித்​தி​யா​சம் எப்​படி இருக்கு?​

​சினிமா, ​ சீரி​யல்ன்னு நான் பிரித்து பார்த்​த​தில்லை. என்னை பொருத்​த​வரை கேமிரா லைட்​டிங் மட்​டும் தான் வித்​தி​யா​ச​மாக இருக்​குமே தவிர மற்ற எல்​லாமே ஒரே மாதி​ரி​தான் இருக்​கும். ​ எனக்கு எங்கு போனா​லும் சந்​தோ​ஷமா இருக்​க​ணும். எல்​லோ​ரை​யும் சிரிக்க வைக்​க​ணும். "வைகாசி பொறந்​தாச்சு' முதல் படம்ங்​கி​ற​து​னால அப்போ எது​வுமே தெரி​யா​தில்​லையா அத​னால் பயம் இருந்​தது. இப்​பொ​ழுது பழ​கி​டுச்சு. இரு​பது வரு​டமா இது மட்​டும் தான் தெரி​யும். சினி​மாவை தவிர வேற உல​கமே எனக்குத் தெரி​யாது.​

ரம்யா கிருஷ்​ண​னோட நடிப்​பது பற்றி சொல்​லுங்​கள்?​​

அவர் ஒரு ஜெம் ஆஃப் பெர்​சன். ரொம்​ப​வும் ஃபி​ரண்ட்​லியா பழ​கு​வாங்க. புரோ​டி​யூ​சர்ங்​கிற மாதிரி நடந்​துக்க மாட்​டாங்க. ஒரு ஃபேமிலி மாதி​ரி​தான் எல்​லோ​ரி​ட​மும் பழ​கு​வாங்க. ​

உங்​கள் ஃபேமிலி பற்றி சொல்​லுங்​கள்?​​

எனக்கு நாலு அண்​ணன்​கள்,​ நான் ஒரே பெண் தான்,​ இப்​பொ​ழுது அம்​மா​வோட தான் இருக்​கேன். என் கல்​யாண வாழ்க்​கை​யைப் பற்றி நான் எதை​யும் சொல்ல விரும்​ப​வில்லை. ஒரு ஆர்ட்​டிஸ்ட்​டாக இல்​லா​மல் ஒரு பெண்​ணாக இருந்து என் பிரச்​ச​னை​க​ளு​டன் போரா​டிக்​கிட்டு இருக்​கேன்.

டாக்​டர் ஆன​தும்​தான் டைரக்​ஷன்!


"அலை​பா​யுதே', "மொழி' படங்​க​ளுக்​குப் பிறகு கலை​ஞர் டிவி​யில் ஒளி​ப​ரப்​பாகி கொண்​டி​ருக்​கும் "தெக்​கத்​திப்​பொண்ணு' தொட​ரி​லும் கடந்த திங்​கள்​கி​ழமை முதல் புதி​ய​தாக துவங்​கி​யி​ருக்​கும் தொடர் "யாது​மாகி நின்​றாய்' என்ற தொட​ரில் நடிக்​கும் சொர்​ண​மால்​யாவை அவ​ரது இல்​லத்​தில் உள்ள நாட்​டி​யக் கூடத்​தில் சந்​தித்​தோம். ​நுழை​வாயி​லி​லேயே ஒரு சின்ன அம்​மன் சிலை​யைத் தரி​சித்​து​விட்டு உள்ளே சென்​றோம். நட​ரா​ஜர் சிலை​யின் முன் அமர்ந்து அங்கே அபி​ந​யம் பிடிக்​கும் பிள்​ளை​க​ளுக்கு ஜதி சொல்​லிக்​கொண்டே ​ நமக்கு பதி​ல​ளித்​தார். ​


"யாது​மாகி நின்​றாய்' தொட​ரில் என்ன கதா​பாத்​தி​ரத்​தில் நடிக்​கி​றீர்​கள்? வேறு என்ன தொடர்​க​ளில் நடிக்​கி​றீர்​கள்?​

​ "யாது​மாகி நின்​றாய்' மூன்று பெண்​களை பற்​றிய கதை. அதில் முக்​கிய கதா​பாத்​தி​ரம் ​ சாரதா. அந்த கேரக்​டர்​தான் நான் பண்​றேன். அது ஒரு தனித்​து​வம் வாய்ந்த,​ வாழ்க்​கை​யில் நிறைய பிரச்​னை​களை சந்​திக்​கும் அதே சம​யத்​தில் உடைந்து போகா​மல் எதிர்​கொள்​ளும் அழுத்​த​மான ரோல். இந்த "யாது​மாகி நின்​றாய்' தொடர் ஒரு நண்​பர் கொடுத்த கருவை வைத்து ரேவதி மேடம்,​ ரோகிணி மேடம் ரெண்டு பேரும் சேர்ந்து விரி​வாக்​கம் செய்து உரு​வாக்​கியிருக்​கி​றார்​கள். பெண்​க​ளுக்​காக நிறைய விஷ​யங்​களை யோசிக்க கூடிய சிறந்த நடி​கை​க​ளான அவர்​க​ளோடு சேர்ந்து பங்கு எடுத்​துக் கொள்​வது எனக்கு மகிழ்ச்​சி​யாக இருக்​கி​றது. மற்​ற​படி "தெக்​கத்​திப் பொண்ணு' தொட​ரில் கிரா​மத்து பெண்​ணாக நடித்​துக் கொண்​டி​ருக்​கி​றேன். ​

​"மொழி' படத்​தில் சிறப்​பாக நடித்து இருந்​தீர்​கள். அதன் பிறகு படங்​க​ளில் நடிக்​க​வில்​லையே ஏன்?​

​"மொழி' ​ படம் போல ஒரு ​ நல்ல படத்தில் நடித்​தால் பத்து சுமா​ரான படங்​களில் நடிக்க வேண்​டி​யி​ருக்​கி​றது. அது போல் வராத பட்​சத்​தில் பத்து சுமா​ரான படங்​கள் நடிக்க எனக்கு நேரமோ,​ விருப்​பமோ இல்லை. ​

​சின்​னத்​திரை,​பெரி​ய தி​ரை​யில் நீங்​கள் உணர்ந்​தது?​

சினி ​மா​வுக்​கும்,​ சின்​னத்​தி​ரைக்​கும் இருந்த வித்​தி​யா​சங்​கள் இப்​போது போய்​விட்​டது. அதெல்​லாம் ஒரு கால​கட்​டத்​தில் தான் இருந்​தது. இவர்​கள் சினிமா ஆர்ட்​டிஸ்ட்,​ இவர்​கள் சின்​னத்​திரை ஆர்ட்​டிஸ்ட் என்​ப​தெல்​லாம் ​ இப்​போ​ழுது கிடை​யாது. இன்û​றய சூழ்​நி​லை​யில் சினி​மா​விற்கு பல​மாக இருப்​பது சின்​னத்​திரை தான். சினி​மாவையே கூட டிவி​யில் அடிக்​கடி டிரைய்​லர் போட்டு காட்​டும் போது தான் நிறை​ய​பே​ருக்கு இந்​தப் படம் புதி​தாக வரு​கி​றது என்று தெரி​கி​றது. ஒரு மீடி​யா​வுக்​கும்,​இன்​னொரு ​ மீடி​யா​வுக்​கும் நாம போட்டி வைக்க முடி​யாது. ஒரு நடிகை என்​றால் அவுங்க நடிகை தான். நிஜ​வாழ்​கை​யில் நடிக்​காத வரை நாம நடி​கர்​கள் தான்.

​​நீங்​கள் ​ இருந்​த​வரை சன் டிவியில் தொகுத்து வழங்​கிய "இளமை புதுமை' ​ நிகழ்ச்சி அரு​மை​யாக இருந்​தது. அதன்​ பி​றகு காணா​மல் போய்​விட்​டதே. அது உங்​க​ளுக்கு வெற்​றியா?​

​கண்​டிப்​பாக. சொர்ணமால்யா என்​றால் யார் என்று என்னை அறி​மு​கப்​ப​டுத்​தி​யது இளமை புதுமை நிகழ்ச்சி தான் மிகப் பெரிய கார​ணம். நான் அந்த நிகழ்ச்​சியை தொடர்ந்து ஏழு வரு​டங்​கள் பண்​ணி​னேன். என்​னு​டைய பதி​னாறு வய​தில் தொடங்​கி​னேன் என்​னு​டைய வளர்ச்​சி​யோட சேர்ந்து அந்த நிகழ்ச்​சி​யும் வளர்ந்​தது. அந்​நி​கழ்ச்சி துவங்​கும் போது ​ தான் சன் டிவிக்​கும் துவக்க காலம் ​ எங்​க​ளது வளர்ச்​சி போல் சன் டிவி​யும் சேர்ந்து வளர்ந்​தது. நிறைய நல்ல நல்ல விஷ​யங்​கள் எல்​லாம் நடந்​தது. ஒரு விஷ​யம் நன்​றாக நடக்​கும் பொழுது சில நேரங்​க​ளில் அதை விட்டு கொடுக்க வேண்டி வரும் அப்​படி தான் அந்த நிகழ்ச்​சியை ​ ரொம்ப சந்​தோ​ஷ​மான சூழ்​நி​லை​யில் தான் முடித்​தோம். ​ ​

​தொடர்​கள் இயக்​கும் எண்​ணம் உண்டா?​

​தொடர் இயக்​கு​வ​தற்கு நிறைய ​ நேரம் வேண்​டும்.

ஆனால் ​ சினிமா டைர​க்ஷன் பண்​ண​வேண்​டும் என்று ஆசை​யி​ருக்​கி​றது. ஆனால் இப்​போது அந்த எண்​ணம் இல்லை. ​ பிஎச்.டி.முடித்​து​விட்​டு​தான் பண்​ண​வேண்​டும் என்று வைராக்​கி​யத்​தில் இருக்​கி​றேன். டாக்​டர் சொர்​ண​மால்யா ஆகி​விட்​டுத்​தான் டைரக்​டர் சொர்​ண​மால்யா ஆவேன். ​

​படிப்பு,​ நாட்​டி​யம்,​ சினிமா இப்​படி வெவ்​வேறு துறை​யில் இருக்​கிறீர்கள். இதற்​காக எப்​படி நேரம் செல​வி​டு​கிறீர்கள்?​

​ஒரு நாளில் இரு​பத்​தி​நாலு மணி நேரம் இருக்​கி​றது. அதை வைத்​துக் கொண்டு எத்​த​னையோ நிறைய நல்ல விஷ​யங்​களைச் செய்​ய​லாம். அப்​ப​டி​யில்​லா​மல் ஒரு நாள் முழு​வ​தும் ஒரே ஒரு வேலை மட்​டும் தான் ​ செய்ய முடி​யும் என்​றால் அது முயற்​சி​யில்லா தன்​மை​யைக் காட்​டு​கி​றது என்று சொல்​வார்​கள். படிப்​புக்​காக டான்ûஸ விட்​ட​தில்லை,​ டான்ஸ்​காக நடிப்பை விட்​ட​தில்லை,​ ​ ஒவ்​வொன்​றுக்​கும் என் நேரத்​தைப் பிரித்து செயல்படு​கி​றேன். ​

​நாட்​டி​யத் துறை​யில் ​ உங்​கள் பங்​க​ளிப்பு என்ன?​

​ இது​தான் என் பங்​க​ளிப்​புன்னு சொல்லி முற்​றுப்​புள்ளி வைக்க முடி​யாது. இப்​போ​து தான் ஆரம்​பித்​தி​ருக்​கி​றேன். நிறைய விஷ​யங்​கள் செய்​ய​ணும்னு ஆர்​வம் இருக்கு. அதற்​கான முயற்​சி​க​ளில் ஒன்று தான் என் பிஎச்.டி. பட்​டம் வாங்க வேண்​டும் என்​பது. என் மூல​மாக சில விஷ​யங்​க​ளைக் கலை உல​கத்​துக்​குக் கொடுக்க வேண்​டும் என்​பது என் ஆசை. இதை தவிர நாட்​டிய பள்ளி வைத்து நடத்​திக் கொண்​டி​ருக்​கி​றேன். சென்​னை​யி​லும்,​ காஞ்​சி​பு​ரத்​தி​லும். ​

​உங்​கள் ​ திற​மையை திரை​யு​ல​கம் சரி​யாக பயன்​ப​டுத்​த​வில்லை ​ என்ற குறை ​ இருக்​கி​றதா?​

​அப்​படிச் ​ சொல்ல முடி​யாது. எந்த ஒரு சினி​மா​வும்

ஒரு ​வ​ரு​டைய திற​மையை வெளிப்​ப​டு​வ​தற்​காக எடுக்க கூடிய விஷ​யம் இல்லை. ஐநூ​று​பேர்,​அறு​நூறு பேர் சேர்ந்து உழைக்க கூடி​யது. ஒரு ​ தனி​பட்​ட​வ​ரு​டைய திற​மையை ​ வெளிப்​ப​டுத்​து​வ​தற்​காக ஒரு சினிமா எடுப்​பாங்​கன்னா அது நடக்க முடி​யாத ஒரு விஷ​யம். அப்​படி பார்த்தா நானே என்னை வைத்து ஒரு படம் எடுத்​தா​லும் அதில் என்​னு​டைய எல்லா பரி​மா​ணங்​க​ளை​யும் ​ ஒரு மூன்று மணி நேரத்​தில் காண்​பிக்க முடி​யாது. அத​னால் அந்த மாதிரி எதிர்​பார்ப்​பதே ​ என்னை பொருத்​த​வரை முட்​டாள்தனம். அவர்​கள் கொடுக்க கூடிய கதா​பாத்​

தி​ரத்​தில் என்​னு​டைய திற​மையை வெளிப்​ப​டுத்த தெரிந்​தால் நான் புத்​திசாலி. அதை வாங்​கிக் கொண்​டால் அவர்​கள் புத்​திசாலி. ​

​சினி​மா​வில் நெகட்​டிவ் ​ ரோல் வந்​தால் நடிப்​பீர்​களா?​

​ இயல்​பான நெகட்​டீவ் ரோலாக இருந்​தால் பர​வா​யில்லை. நெகட்​டீவா ​ பண்​ணி​னா​லும் அதில் ஒரு அர்த்​தம் இருக்க வேண்​டும். கத்தி எடுத்து ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ குத்​து​வது மாதிரி எல்​லாம் நான் செய்ய முடி​யாது. ​ ஏன் என்​றால் என்​னி​டம் நாட்​டி​யம் கற்​றுக்​கொள்ள நிறைய பிள்​ளை​கள் வரு​கி​றார்​கள். அது ​ மட்​டு​மல்​லா​மல் நான் நிறைய சோஷி​யல் ஒர்க்​கி​லும் ஈடு​பட்​டுக் ​ கொண்​டி​ருக்​கி​றேன். அது நிஜ​வாழ்க்​கை​யில் எந்த பாதிப்​பை​யும் ஏற்​ப​டுத்​தக் கூடாது என்​ப​தால் எனக்கு இஷ்​டம் இல்லை. ​ ​ரொம்ப பெரிய கம்​பெ​னி​யில் இருந்து ​ வில்​லி​யாக நடிப்​ப​தற்கு கேட்​டார்​கள். என்னை பார்த்​தால் உங்​க​ளுக்கு எப்​படி அந்த மாதிரி கேட்க தோன்​று​கி​றது என்று கேட்​டேன். வேற யாருமே அந்த மாதிரி நினைத்து பார்த்​தி​ருக்க மாட்​டார்​கள்.வித்​தி​யா​ச​மாக இருக்​கும் என்​றார்​கள். ஒரு மாதம் வரை காத்​தி​ருந்​தார்​கள் நான் ​ ​ ​ வேண்​டா​மென்று சொல்​லி​விட்​டேன். நல்ல கம்​பெனி,​ நல்ல டைரக்​டர்,​ ரொம்ப நல்ல கதை இருந்​தா​லும் அவர்​க​ளோடு ஒர்க் பண்ண முடி​ய​வில்​லையே என்று வருத்​தப்​பட்​டேன். ​​