"அலைபாயுதே', "மொழி' படங்களுக்குப் பிறகு கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் "தெக்கத்திப்பொண்ணு' தொடரிலும் கடந்த திங்கள்கிழமை முதல் புதியதாக துவங்கியிருக்கும் தொடர் "யாதுமாகி நின்றாய்' என்ற தொடரில் நடிக்கும் சொர்ணமால்யாவை அவரது இல்லத்தில் உள்ள நாட்டியக் கூடத்தில் சந்தித்தோம். நுழைவாயிலிலேயே ஒரு சின்ன அம்மன் சிலையைத் தரிசித்துவிட்டு உள்ளே சென்றோம். நடராஜர் சிலையின் முன் அமர்ந்து அங்கே அபிநயம் பிடிக்கும் பிள்ளைகளுக்கு ஜதி சொல்லிக்கொண்டே நமக்கு பதிலளித்தார்.
"யாதுமாகி நின்றாய்' தொடரில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள்? வேறு என்ன தொடர்களில் நடிக்கிறீர்கள்?
"யாதுமாகி நின்றாய்' மூன்று பெண்களை பற்றிய கதை. அதில் முக்கிய கதாபாத்திரம் சாரதா. அந்த கேரக்டர்தான் நான் பண்றேன். அது ஒரு தனித்துவம் வாய்ந்த, வாழ்க்கையில் நிறைய பிரச்னைகளை சந்திக்கும் அதே சமயத்தில் உடைந்து போகாமல் எதிர்கொள்ளும் அழுத்தமான ரோல். இந்த "யாதுமாகி நின்றாய்' தொடர் ஒரு நண்பர் கொடுத்த கருவை வைத்து ரேவதி மேடம், ரோகிணி மேடம் ரெண்டு பேரும் சேர்ந்து விரிவாக்கம் செய்து உருவாக்கியிருக்கிறார்கள். பெண்களுக்காக நிறைய விஷயங்களை யோசிக்க கூடிய சிறந்த நடிகைகளான அவர்களோடு சேர்ந்து பங்கு எடுத்துக் கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மற்றபடி "தெக்கத்திப் பொண்ணு' தொடரில் கிராமத்து பெண்ணாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.
"மொழி' படத்தில் சிறப்பாக நடித்து இருந்தீர்கள். அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லையே ஏன்?
"மொழி' படம் போல ஒரு நல்ல படத்தில் நடித்தால் பத்து சுமாரான படங்களில் நடிக்க வேண்டியிருக்கிறது. அது போல் வராத பட்சத்தில் பத்து சுமாரான படங்கள் நடிக்க எனக்கு நேரமோ, விருப்பமோ இல்லை.
சின்னத்திரை,பெரிய திரையில் நீங்கள் உணர்ந்தது?
சினி மாவுக்கும், சின்னத்திரைக்கும் இருந்த வித்தியாசங்கள் இப்போது போய்விட்டது. அதெல்லாம் ஒரு காலகட்டத்தில் தான் இருந்தது. இவர்கள் சினிமா ஆர்ட்டிஸ்ட், இவர்கள் சின்னத்திரை ஆர்ட்டிஸ்ட் என்பதெல்லாம் இப்போழுது கிடையாது. இன்ûறய சூழ்நிலையில் சினிமாவிற்கு பலமாக இருப்பது சின்னத்திரை தான். சினிமாவையே கூட டிவியில் அடிக்கடி டிரைய்லர் போட்டு காட்டும் போது தான் நிறையபேருக்கு இந்தப் படம் புதிதாக வருகிறது என்று தெரிகிறது. ஒரு மீடியாவுக்கும்,இன்னொரு மீடியாவுக்கும் நாம போட்டி வைக்க முடியாது. ஒரு நடிகை என்றால் அவுங்க நடிகை தான். நிஜவாழ்கையில் நடிக்காத வரை நாம நடிகர்கள் தான்.
நீங்கள் இருந்தவரை சன் டிவியில் தொகுத்து வழங்கிய "இளமை புதுமை' நிகழ்ச்சி அருமையாக இருந்தது. அதன் பிறகு காணாமல் போய்விட்டதே. அது உங்களுக்கு வெற்றியா?
கண்டிப்பாக. சொர்ணமால்யா என்றால் யார் என்று என்னை அறிமுகப்படுத்தியது இளமை புதுமை நிகழ்ச்சி தான் மிகப் பெரிய காரணம். நான் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஏழு வருடங்கள் பண்ணினேன். என்னுடைய பதினாறு வயதில் தொடங்கினேன் என்னுடைய வளர்ச்சியோட சேர்ந்து அந்த நிகழ்ச்சியும் வளர்ந்தது. அந்நிகழ்ச்சி துவங்கும் போது தான் சன் டிவிக்கும் துவக்க காலம் எங்களது வளர்ச்சி போல் சன் டிவியும் சேர்ந்து வளர்ந்தது. நிறைய நல்ல நல்ல விஷயங்கள் எல்லாம் நடந்தது. ஒரு விஷயம் நன்றாக நடக்கும் பொழுது சில நேரங்களில் அதை விட்டு கொடுக்க வேண்டி வரும் அப்படி தான் அந்த நிகழ்ச்சியை ரொம்ப சந்தோஷமான சூழ்நிலையில் தான் முடித்தோம்.
தொடர்கள் இயக்கும் எண்ணம் உண்டா?
தொடர் இயக்குவதற்கு நிறைய நேரம் வேண்டும்.
ஆனால் சினிமா டைரக்ஷன் பண்ணவேண்டும் என்று ஆசையிருக்கிறது. ஆனால் இப்போது அந்த எண்ணம் இல்லை. பிஎச்.டி.முடித்துவிட்டுதான் பண்ணவேண்டும் என்று வைராக்கியத்தில் இருக்கிறேன். டாக்டர் சொர்ணமால்யா ஆகிவிட்டுத்தான் டைரக்டர் சொர்ணமால்யா ஆவேன்.
படிப்பு, நாட்டியம், சினிமா இப்படி வெவ்வேறு துறையில் இருக்கிறீர்கள். இதற்காக எப்படி நேரம் செலவிடுகிறீர்கள்?
ஒரு நாளில் இருபத்திநாலு மணி நேரம் இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு எத்தனையோ நிறைய நல்ல விஷயங்களைச் செய்யலாம். அப்படியில்லாமல் ஒரு நாள் முழுவதும் ஒரே ஒரு வேலை மட்டும் தான் செய்ய முடியும் என்றால் அது முயற்சியில்லா தன்மையைக் காட்டுகிறது என்று சொல்வார்கள். படிப்புக்காக டான்ûஸ விட்டதில்லை, டான்ஸ்காக நடிப்பை விட்டதில்லை, ஒவ்வொன்றுக்கும் என் நேரத்தைப் பிரித்து செயல்படுகிறேன்.
நாட்டியத் துறையில் உங்கள் பங்களிப்பு என்ன?
இதுதான் என் பங்களிப்புன்னு சொல்லி முற்றுப்புள்ளி வைக்க முடியாது. இப்போது தான் ஆரம்பித்திருக்கிறேன். நிறைய விஷயங்கள் செய்யணும்னு ஆர்வம் இருக்கு. அதற்கான முயற்சிகளில் ஒன்று தான் என் பிஎச்.டி. பட்டம் வாங்க வேண்டும் என்பது. என் மூலமாக சில விஷயங்களைக் கலை உலகத்துக்குக் கொடுக்க வேண்டும் என்பது என் ஆசை. இதை தவிர நாட்டிய பள்ளி வைத்து நடத்திக் கொண்டிருக்கிறேன். சென்னையிலும், காஞ்சிபுரத்திலும்.
உங்கள் திறமையை திரையுலகம் சரியாக பயன்படுத்தவில்லை என்ற குறை இருக்கிறதா?
அப்படிச் சொல்ல முடியாது. எந்த ஒரு சினிமாவும்
ஒரு வருடைய திறமையை வெளிப்படுவதற்காக எடுக்க கூடிய விஷயம் இல்லை. ஐநூறுபேர்,அறுநூறு பேர் சேர்ந்து உழைக்க கூடியது. ஒரு தனிபட்டவருடைய திறமையை வெளிப்படுத்துவதற்காக ஒரு சினிமா எடுப்பாங்கன்னா அது நடக்க முடியாத ஒரு விஷயம். அப்படி பார்த்தா நானே என்னை வைத்து ஒரு படம் எடுத்தாலும் அதில் என்னுடைய எல்லா பரிமாணங்களையும் ஒரு மூன்று மணி நேரத்தில் காண்பிக்க முடியாது. அதனால் அந்த மாதிரி எதிர்பார்ப்பதே என்னை பொருத்தவரை முட்டாள்தனம். அவர்கள் கொடுக்க கூடிய கதாபாத்
திரத்தில் என்னுடைய திறமையை வெளிப்படுத்த தெரிந்தால் நான் புத்திசாலி. அதை வாங்கிக் கொண்டால் அவர்கள் புத்திசாலி.
சினிமாவில் நெகட்டிவ் ரோல் வந்தால் நடிப்பீர்களா?
இயல்பான நெகட்டீவ் ரோலாக இருந்தால் பரவாயில்லை. நெகட்டீவா பண்ணினாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். கத்தி எடுத்து குத்துவது மாதிரி எல்லாம் நான் செய்ய முடியாது. ஏன் என்றால் என்னிடம் நாட்டியம் கற்றுக்கொள்ள நிறைய பிள்ளைகள் வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் நான் நிறைய சோஷியல் ஒர்க்கிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அது நிஜவாழ்க்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது என்பதால் எனக்கு இஷ்டம் இல்லை. ரொம்ப பெரிய கம்பெனியில் இருந்து வில்லியாக நடிப்பதற்கு கேட்டார்கள். என்னை பார்த்தால் உங்களுக்கு எப்படி அந்த மாதிரி கேட்க தோன்றுகிறது என்று கேட்டேன். வேற யாருமே அந்த மாதிரி நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.வித்தியாசமாக இருக்கும் என்றார்கள். ஒரு மாதம் வரை காத்திருந்தார்கள் நான் வேண்டாமென்று சொல்லிவிட்டேன். நல்ல கம்பெனி, நல்ல டைரக்டர், ரொம்ப நல்ல கதை இருந்தாலும் அவர்களோடு ஒர்க் பண்ண முடியவில்லையே என்று வருத்தப்பட்டேன்.
"யாதுமாகி நின்றாய்' தொடரில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள்? வேறு என்ன தொடர்களில் நடிக்கிறீர்கள்?
"யாதுமாகி நின்றாய்' மூன்று பெண்களை பற்றிய கதை. அதில் முக்கிய கதாபாத்திரம் சாரதா. அந்த கேரக்டர்தான் நான் பண்றேன். அது ஒரு தனித்துவம் வாய்ந்த, வாழ்க்கையில் நிறைய பிரச்னைகளை சந்திக்கும் அதே சமயத்தில் உடைந்து போகாமல் எதிர்கொள்ளும் அழுத்தமான ரோல். இந்த "யாதுமாகி நின்றாய்' தொடர் ஒரு நண்பர் கொடுத்த கருவை வைத்து ரேவதி மேடம், ரோகிணி மேடம் ரெண்டு பேரும் சேர்ந்து விரிவாக்கம் செய்து உருவாக்கியிருக்கிறார்கள். பெண்களுக்காக நிறைய விஷயங்களை யோசிக்க கூடிய சிறந்த நடிகைகளான அவர்களோடு சேர்ந்து பங்கு எடுத்துக் கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மற்றபடி "தெக்கத்திப் பொண்ணு' தொடரில் கிராமத்து பெண்ணாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.
"மொழி' படத்தில் சிறப்பாக நடித்து இருந்தீர்கள். அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லையே ஏன்?
"மொழி' படம் போல ஒரு நல்ல படத்தில் நடித்தால் பத்து சுமாரான படங்களில் நடிக்க வேண்டியிருக்கிறது. அது போல் வராத பட்சத்தில் பத்து சுமாரான படங்கள் நடிக்க எனக்கு நேரமோ, விருப்பமோ இல்லை.
சின்னத்திரை,பெரிய திரையில் நீங்கள் உணர்ந்தது?
சினி மாவுக்கும், சின்னத்திரைக்கும் இருந்த வித்தியாசங்கள் இப்போது போய்விட்டது. அதெல்லாம் ஒரு காலகட்டத்தில் தான் இருந்தது. இவர்கள் சினிமா ஆர்ட்டிஸ்ட், இவர்கள் சின்னத்திரை ஆர்ட்டிஸ்ட் என்பதெல்லாம் இப்போழுது கிடையாது. இன்ûறய சூழ்நிலையில் சினிமாவிற்கு பலமாக இருப்பது சின்னத்திரை தான். சினிமாவையே கூட டிவியில் அடிக்கடி டிரைய்லர் போட்டு காட்டும் போது தான் நிறையபேருக்கு இந்தப் படம் புதிதாக வருகிறது என்று தெரிகிறது. ஒரு மீடியாவுக்கும்,இன்னொரு மீடியாவுக்கும் நாம போட்டி வைக்க முடியாது. ஒரு நடிகை என்றால் அவுங்க நடிகை தான். நிஜவாழ்கையில் நடிக்காத வரை நாம நடிகர்கள் தான்.
நீங்கள் இருந்தவரை சன் டிவியில் தொகுத்து வழங்கிய "இளமை புதுமை' நிகழ்ச்சி அருமையாக இருந்தது. அதன் பிறகு காணாமல் போய்விட்டதே. அது உங்களுக்கு வெற்றியா?
கண்டிப்பாக. சொர்ணமால்யா என்றால் யார் என்று என்னை அறிமுகப்படுத்தியது இளமை புதுமை நிகழ்ச்சி தான் மிகப் பெரிய காரணம். நான் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஏழு வருடங்கள் பண்ணினேன். என்னுடைய பதினாறு வயதில் தொடங்கினேன் என்னுடைய வளர்ச்சியோட சேர்ந்து அந்த நிகழ்ச்சியும் வளர்ந்தது. அந்நிகழ்ச்சி துவங்கும் போது தான் சன் டிவிக்கும் துவக்க காலம் எங்களது வளர்ச்சி போல் சன் டிவியும் சேர்ந்து வளர்ந்தது. நிறைய நல்ல நல்ல விஷயங்கள் எல்லாம் நடந்தது. ஒரு விஷயம் நன்றாக நடக்கும் பொழுது சில நேரங்களில் அதை விட்டு கொடுக்க வேண்டி வரும் அப்படி தான் அந்த நிகழ்ச்சியை ரொம்ப சந்தோஷமான சூழ்நிலையில் தான் முடித்தோம்.
தொடர்கள் இயக்கும் எண்ணம் உண்டா?
தொடர் இயக்குவதற்கு நிறைய நேரம் வேண்டும்.
ஆனால் சினிமா டைரக்ஷன் பண்ணவேண்டும் என்று ஆசையிருக்கிறது. ஆனால் இப்போது அந்த எண்ணம் இல்லை. பிஎச்.டி.முடித்துவிட்டுதான் பண்ணவேண்டும் என்று வைராக்கியத்தில் இருக்கிறேன். டாக்டர் சொர்ணமால்யா ஆகிவிட்டுத்தான் டைரக்டர் சொர்ணமால்யா ஆவேன்.
படிப்பு, நாட்டியம், சினிமா இப்படி வெவ்வேறு துறையில் இருக்கிறீர்கள். இதற்காக எப்படி நேரம் செலவிடுகிறீர்கள்?
ஒரு நாளில் இருபத்திநாலு மணி நேரம் இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு எத்தனையோ நிறைய நல்ல விஷயங்களைச் செய்யலாம். அப்படியில்லாமல் ஒரு நாள் முழுவதும் ஒரே ஒரு வேலை மட்டும் தான் செய்ய முடியும் என்றால் அது முயற்சியில்லா தன்மையைக் காட்டுகிறது என்று சொல்வார்கள். படிப்புக்காக டான்ûஸ விட்டதில்லை, டான்ஸ்காக நடிப்பை விட்டதில்லை, ஒவ்வொன்றுக்கும் என் நேரத்தைப் பிரித்து செயல்படுகிறேன்.
நாட்டியத் துறையில் உங்கள் பங்களிப்பு என்ன?
இதுதான் என் பங்களிப்புன்னு சொல்லி முற்றுப்புள்ளி வைக்க முடியாது. இப்போது தான் ஆரம்பித்திருக்கிறேன். நிறைய விஷயங்கள் செய்யணும்னு ஆர்வம் இருக்கு. அதற்கான முயற்சிகளில் ஒன்று தான் என் பிஎச்.டி. பட்டம் வாங்க வேண்டும் என்பது. என் மூலமாக சில விஷயங்களைக் கலை உலகத்துக்குக் கொடுக்க வேண்டும் என்பது என் ஆசை. இதை தவிர நாட்டிய பள்ளி வைத்து நடத்திக் கொண்டிருக்கிறேன். சென்னையிலும், காஞ்சிபுரத்திலும்.
உங்கள் திறமையை திரையுலகம் சரியாக பயன்படுத்தவில்லை என்ற குறை இருக்கிறதா?
அப்படிச் சொல்ல முடியாது. எந்த ஒரு சினிமாவும்
ஒரு வருடைய திறமையை வெளிப்படுவதற்காக எடுக்க கூடிய விஷயம் இல்லை. ஐநூறுபேர்,அறுநூறு பேர் சேர்ந்து உழைக்க கூடியது. ஒரு தனிபட்டவருடைய திறமையை வெளிப்படுத்துவதற்காக ஒரு சினிமா எடுப்பாங்கன்னா அது நடக்க முடியாத ஒரு விஷயம். அப்படி பார்த்தா நானே என்னை வைத்து ஒரு படம் எடுத்தாலும் அதில் என்னுடைய எல்லா பரிமாணங்களையும் ஒரு மூன்று மணி நேரத்தில் காண்பிக்க முடியாது. அதனால் அந்த மாதிரி எதிர்பார்ப்பதே என்னை பொருத்தவரை முட்டாள்தனம். அவர்கள் கொடுக்க கூடிய கதாபாத்
திரத்தில் என்னுடைய திறமையை வெளிப்படுத்த தெரிந்தால் நான் புத்திசாலி. அதை வாங்கிக் கொண்டால் அவர்கள் புத்திசாலி.
சினிமாவில் நெகட்டிவ் ரோல் வந்தால் நடிப்பீர்களா?
இயல்பான நெகட்டீவ் ரோலாக இருந்தால் பரவாயில்லை. நெகட்டீவா பண்ணினாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். கத்தி எடுத்து குத்துவது மாதிரி எல்லாம் நான் செய்ய முடியாது. ஏன் என்றால் என்னிடம் நாட்டியம் கற்றுக்கொள்ள நிறைய பிள்ளைகள் வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் நான் நிறைய சோஷியல் ஒர்க்கிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அது நிஜவாழ்க்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது என்பதால் எனக்கு இஷ்டம் இல்லை. ரொம்ப பெரிய கம்பெனியில் இருந்து வில்லியாக நடிப்பதற்கு கேட்டார்கள். என்னை பார்த்தால் உங்களுக்கு எப்படி அந்த மாதிரி கேட்க தோன்றுகிறது என்று கேட்டேன். வேற யாருமே அந்த மாதிரி நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.வித்தியாசமாக இருக்கும் என்றார்கள். ஒரு மாதம் வரை காத்திருந்தார்கள் நான் வேண்டாமென்று சொல்லிவிட்டேன். நல்ல கம்பெனி, நல்ல டைரக்டர், ரொம்ப நல்ல கதை இருந்தாலும் அவர்களோடு ஒர்க் பண்ண முடியவில்லையே என்று வருத்தப்பட்டேன்.
No comments:
Post a Comment