சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் "தங்கம்' தொடரின் படப்பிடிப்பு. கங்காவை (ரம்யா கிருஷ்ணன்) பழிவாங்க சதி செய்து கொண்டிருந்த இளவஞ்சி (காவேரி)யைச் சந்தித்தோம். அங்கு சுப்புலட்சமி, நாச்சியா, மங்கா அக்கா என அனைவரிடமும் சிரித்து விளையாடிக்கொண்டே பிஸியாக இருந்தார் நடிகை காவேரி. படப்பிடிப்பு இடைவேளையில் வந்து, நம்முடைய கேள்விகளுக்கு அவர் சொன்ன பதில்களிலிருந்து...
"தங்கம்' தொடரில் உங்கள் கேரக்டர் இந்தளவு பேசப்படும் என்று நினைத்தீர்களா?
கதையை முதன் முதலில் கேட்கும் பொழுது இந்தளவுக்கு ரீச் ஆகும்ன்னு எதிர்பார்க்கவில்லை. ஐயாவுக்கு மரு மகளாக வருகிற கேரக்டர் கொஞ்சம் பவர் ஃபுல்லான ரோல் என்று சொன்னார்கள். நான் இதுவரை நெகட்டீவ் ரோலில் நடித்தது கிடையாது. எனக்கே இது ஒரு புதுமையான அனுபவம் தான். ஐயாவின் சொத்து வேறு யாருக்கும் போகக் கூடாது என்பதற்குத்தான் அவ்வளவு வில்லத்தனம் செய்ய வேண்டி இருந்தது.
பார்ப் பதற்கு ரொம்ப வெகுளியா இருக்கீங்க. ஆனால் தொடரில் பயங்கர வில்லியாக கலக்குறீங்களே மக்கள்கிட்ட உங்கள் இமேஜ் பாதிக்காதா?
பொது வாக வில்லி கேரக்டரில் நடிப்பவர்கள் என்றால் பார்க்கும் பொழுதே பயமுறுத்தும்படி இருப்பார்கள். ஆனால் பார்வைக்கு மென்மையாக இருக்கிற ஒரு பெண் செய்கிற வேலையெல்லாம் பயங்கர வில்லத்தனமாக இருந்தால் பார்க்கிறவர்களுக்கு வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். என்னுடைய இந்த நினைப்பு வீண் போகவில்லை. என்னுடைய நடிப்பிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இது இமேஜை பாதிக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.
தொடரில் உங்களின் வில்லத்தனமான நடிப்பைப் பார்த்துவிட்டு உங்கள் வீட்டில் உள்ளவர்கள் என்ன சொன்னார்கள்?
நான் முதன் முறையாக நெகட்டீவ் ரோல் செய்வதால், "ஏன் இப்படி? இந்த மாதிரி நடித்தால் மக்கள் உன்னை உதைக்க மாட்டார்களா? இவ்வளவு அநியாயம் செய்வது போல் இருக்கிறதே...?' என்று சொல்லுவார்கள். அம்மாதான் தினமும் தவறாமல் டிவியில் தொடரை பார்ப்பார்கள். நான் ஏதாவது தப்பு செய்திருந்தால் கூட அதைச் சுட்டிக்காட்டித் திருத்துவார்கள்.
பெரும் பகுதி படப்பிடிப்பில்தான் இருக்கிறீர்கள். உங்கள் நண்பர்கள் பற்றி சொல்லுங்கள்?
என் னுடைய ஃபேமிலி என்று சொன்னால் அது இந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ளவர்கள்தான். நான் வீட்டில் இருக்கும் நேரத்தைவிட இங்கேதான் அதிக நேரம் செல விடுகிறேன். என்னுடைய சொந்தம், பந்தம் ,அத்தை, மாமா என்று எல்லாமே இங்கே உள்ளவர்கள் தான்.
எனக்கு வேற உலகமே இல்ல. வேற உலகத்தை பற்றி நான் நினைப்பது கூட இல்லை.
இந்த கேரக்டருக்காக உங்களை எப்படி தயார் செய்து கொள்கிறீர்கள்?
ஹோம் ஒர்க் செய்கிறேன். ஒவ்வொரு சீன் முடிஞ்சப் புறம் என்ன என்ன தவறு செய்திருக்கேன் என்று பார்ப்பேன். மறுபடியும் அதை செய்யக் கூடாதல்லவா?! வீட்டில் நடித்து பார்ப்பேன். மற்றபடி அடுத்து சீன் என்ன என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. முன்னாடியே சொல்லமாட்டாங்க. ஸ்பாட்டுக்கு வந்த பிறகுதான் சொல்வார்கள். வீட்டுக்கு வந்த பிறகு படப்பிடிப்பின் போது ஏதாவது தவறு செய்திருக்கேன் என்று தோன்றினால், எங்களின் கிரியேட்டீவ் ஹெட்கிட்ட போன் செய்து அவுங்களோட கருத்துக்களை கேட்போம் அவ்வளவு தான்.
வேறு என்ன தொடர் பண்றீங்க? சினிமாவில் நெகட்டீவ் ரோல் வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா?
கலை ஞர் டிவியில் வருகிற "தாயம்' தொடரிலும் பண்ணிக்கிட்டு இருக்கேன். அடுத்தபடியா "சுழல்'ன்னு ஒரு தமிழ் படம் பண்றேன். அதில் ஹீரோ, ஹீரோயின்ஸ் எல்லாம் புதுசு. டைரக்டரும் மலையாள டைரக்டர். பிரதாப் போத்தனுக்கு ஜோடியாக நடிக்கிறேன். ஒரு சீனியருடன் நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ரொம்பவும் நட்போடு நடிப்பைச் சொல்லித் தருவார். அவர் இருபது வருஷத்திற்குப் பிறகு சினிமாவில் மறுபடியும் ரீஎண்ட்ரி ஆவது மனதிற்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சினிமாவில் நெகட்டீவ் ரோல் வந்தால் பண்ணித்தான் பார்ப்போமே!
வைகா சிபொறந்தாச்சு படத்தில் அறிமுகமான காவேரிக்கும். இப்போது இளவஞ்சியா நடிக்கும் காவேரிக்கும் வித்தியாசம் எப்படி இருக்கு?
சினிமா, சீரியல்ன்னு நான் பிரித்து பார்த்ததில்லை. என்னை பொருத்தவரை கேமிரா லைட்டிங் மட்டும் தான் வித்தியாசமாக இருக்குமே தவிர மற்ற எல்லாமே ஒரே மாதிரிதான் இருக்கும். எனக்கு எங்கு போனாலும் சந்தோஷமா இருக்கணும். எல்லோரையும் சிரிக்க வைக்கணும். "வைகாசி பொறந்தாச்சு' முதல் படம்ங்கிறதுனால அப்போ எதுவுமே தெரியாதில்லையா அதனால் பயம் இருந்தது. இப்பொழுது பழகிடுச்சு. இருபது வருடமா இது மட்டும் தான் தெரியும். சினிமாவை தவிர வேற உலகமே எனக்குத் தெரியாது.
ரம்யா கிருஷ்ணனோட நடிப்பது பற்றி சொல்லுங்கள்?
அவர் ஒரு ஜெம் ஆஃப் பெர்சன். ரொம்பவும் ஃபிரண்ட்லியா பழகுவாங்க. புரோடியூசர்ங்கிற மாதிரி நடந்துக்க மாட்டாங்க. ஒரு ஃபேமிலி மாதிரிதான் எல்லோரிடமும் பழகுவாங்க.
உங்கள் ஃபேமிலி பற்றி சொல்லுங்கள்?
எனக்கு நாலு அண்ணன்கள், நான் ஒரே பெண் தான், இப்பொழுது அம்மாவோட தான் இருக்கேன். என் கல்யாண வாழ்க்கையைப் பற்றி நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. ஒரு ஆர்ட்டிஸ்ட்டாக இல்லாமல் ஒரு பெண்ணாக இருந்து என் பிரச்சனைகளுடன் போராடிக்கிட்டு இருக்கேன்.
"தங்கம்' தொடரில் உங்கள் கேரக்டர் இந்தளவு பேசப்படும் என்று நினைத்தீர்களா?
கதையை முதன் முதலில் கேட்கும் பொழுது இந்தளவுக்கு ரீச் ஆகும்ன்னு எதிர்பார்க்கவில்லை. ஐயாவுக்கு மரு மகளாக வருகிற கேரக்டர் கொஞ்சம் பவர் ஃபுல்லான ரோல் என்று சொன்னார்கள். நான் இதுவரை நெகட்டீவ் ரோலில் நடித்தது கிடையாது. எனக்கே இது ஒரு புதுமையான அனுபவம் தான். ஐயாவின் சொத்து வேறு யாருக்கும் போகக் கூடாது என்பதற்குத்தான் அவ்வளவு வில்லத்தனம் செய்ய வேண்டி இருந்தது.
பார்ப் பதற்கு ரொம்ப வெகுளியா இருக்கீங்க. ஆனால் தொடரில் பயங்கர வில்லியாக கலக்குறீங்களே மக்கள்கிட்ட உங்கள் இமேஜ் பாதிக்காதா?
பொது வாக வில்லி கேரக்டரில் நடிப்பவர்கள் என்றால் பார்க்கும் பொழுதே பயமுறுத்தும்படி இருப்பார்கள். ஆனால் பார்வைக்கு மென்மையாக இருக்கிற ஒரு பெண் செய்கிற வேலையெல்லாம் பயங்கர வில்லத்தனமாக இருந்தால் பார்க்கிறவர்களுக்கு வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். என்னுடைய இந்த நினைப்பு வீண் போகவில்லை. என்னுடைய நடிப்பிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இது இமேஜை பாதிக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.
தொடரில் உங்களின் வில்லத்தனமான நடிப்பைப் பார்த்துவிட்டு உங்கள் வீட்டில் உள்ளவர்கள் என்ன சொன்னார்கள்?
நான் முதன் முறையாக நெகட்டீவ் ரோல் செய்வதால், "ஏன் இப்படி? இந்த மாதிரி நடித்தால் மக்கள் உன்னை உதைக்க மாட்டார்களா? இவ்வளவு அநியாயம் செய்வது போல் இருக்கிறதே...?' என்று சொல்லுவார்கள். அம்மாதான் தினமும் தவறாமல் டிவியில் தொடரை பார்ப்பார்கள். நான் ஏதாவது தப்பு செய்திருந்தால் கூட அதைச் சுட்டிக்காட்டித் திருத்துவார்கள்.
பெரும் பகுதி படப்பிடிப்பில்தான் இருக்கிறீர்கள். உங்கள் நண்பர்கள் பற்றி சொல்லுங்கள்?
என் னுடைய ஃபேமிலி என்று சொன்னால் அது இந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ளவர்கள்தான். நான் வீட்டில் இருக்கும் நேரத்தைவிட இங்கேதான் அதிக நேரம் செல விடுகிறேன். என்னுடைய சொந்தம், பந்தம் ,அத்தை, மாமா என்று எல்லாமே இங்கே உள்ளவர்கள் தான்.
எனக்கு வேற உலகமே இல்ல. வேற உலகத்தை பற்றி நான் நினைப்பது கூட இல்லை.
இந்த கேரக்டருக்காக உங்களை எப்படி தயார் செய்து கொள்கிறீர்கள்?
ஹோம் ஒர்க் செய்கிறேன். ஒவ்வொரு சீன் முடிஞ்சப் புறம் என்ன என்ன தவறு செய்திருக்கேன் என்று பார்ப்பேன். மறுபடியும் அதை செய்யக் கூடாதல்லவா?! வீட்டில் நடித்து பார்ப்பேன். மற்றபடி அடுத்து சீன் என்ன என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. முன்னாடியே சொல்லமாட்டாங்க. ஸ்பாட்டுக்கு வந்த பிறகுதான் சொல்வார்கள். வீட்டுக்கு வந்த பிறகு படப்பிடிப்பின் போது ஏதாவது தவறு செய்திருக்கேன் என்று தோன்றினால், எங்களின் கிரியேட்டீவ் ஹெட்கிட்ட போன் செய்து அவுங்களோட கருத்துக்களை கேட்போம் அவ்வளவு தான்.
வேறு என்ன தொடர் பண்றீங்க? சினிமாவில் நெகட்டீவ் ரோல் வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா?
கலை ஞர் டிவியில் வருகிற "தாயம்' தொடரிலும் பண்ணிக்கிட்டு இருக்கேன். அடுத்தபடியா "சுழல்'ன்னு ஒரு தமிழ் படம் பண்றேன். அதில் ஹீரோ, ஹீரோயின்ஸ் எல்லாம் புதுசு. டைரக்டரும் மலையாள டைரக்டர். பிரதாப் போத்தனுக்கு ஜோடியாக நடிக்கிறேன். ஒரு சீனியருடன் நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ரொம்பவும் நட்போடு நடிப்பைச் சொல்லித் தருவார். அவர் இருபது வருஷத்திற்குப் பிறகு சினிமாவில் மறுபடியும் ரீஎண்ட்ரி ஆவது மனதிற்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சினிமாவில் நெகட்டீவ் ரோல் வந்தால் பண்ணித்தான் பார்ப்போமே!
வைகா சிபொறந்தாச்சு படத்தில் அறிமுகமான காவேரிக்கும். இப்போது இளவஞ்சியா நடிக்கும் காவேரிக்கும் வித்தியாசம் எப்படி இருக்கு?
சினிமா, சீரியல்ன்னு நான் பிரித்து பார்த்ததில்லை. என்னை பொருத்தவரை கேமிரா லைட்டிங் மட்டும் தான் வித்தியாசமாக இருக்குமே தவிர மற்ற எல்லாமே ஒரே மாதிரிதான் இருக்கும். எனக்கு எங்கு போனாலும் சந்தோஷமா இருக்கணும். எல்லோரையும் சிரிக்க வைக்கணும். "வைகாசி பொறந்தாச்சு' முதல் படம்ங்கிறதுனால அப்போ எதுவுமே தெரியாதில்லையா அதனால் பயம் இருந்தது. இப்பொழுது பழகிடுச்சு. இருபது வருடமா இது மட்டும் தான் தெரியும். சினிமாவை தவிர வேற உலகமே எனக்குத் தெரியாது.
ரம்யா கிருஷ்ணனோட நடிப்பது பற்றி சொல்லுங்கள்?
அவர் ஒரு ஜெம் ஆஃப் பெர்சன். ரொம்பவும் ஃபிரண்ட்லியா பழகுவாங்க. புரோடியூசர்ங்கிற மாதிரி நடந்துக்க மாட்டாங்க. ஒரு ஃபேமிலி மாதிரிதான் எல்லோரிடமும் பழகுவாங்க.
உங்கள் ஃபேமிலி பற்றி சொல்லுங்கள்?
எனக்கு நாலு அண்ணன்கள், நான் ஒரே பெண் தான், இப்பொழுது அம்மாவோட தான் இருக்கேன். என் கல்யாண வாழ்க்கையைப் பற்றி நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. ஒரு ஆர்ட்டிஸ்ட்டாக இல்லாமல் ஒரு பெண்ணாக இருந்து என் பிரச்சனைகளுடன் போராடிக்கிட்டு இருக்கேன்.
No comments:
Post a Comment