தீபாவளி அன்று ரிலீஸ் ஆன "பேராண்மை' படத்தில் ஐந்து கதாநாயகிகளில் ஒருவராக "ஜெயம்' ரவியின் ஜோடியாக நடித்த "காதல்' சரண்யாவை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஒரு மாலை வேளையில் சந்தித்தோம். துள்ளலும், துடிப்புமாக இருக்கும் சரண்யா சந்தோஷத்தில் திளைத்திருக்கிறார்.
"நாம் கேள்விக்கு போகலாமா?' என்றதும். எனக்கு டிவியில் குரோர்பதி பார்ப்பது போல் இருக்கிறது என்று கிண்டலடித்தபடி, நமக்கு பதிலளிக்க தொடங்கினார்.
காதல் படத்திற்கு பிறகு பேராண்மையில் தான் உங்களை பார்க்க முடிஞ்சது இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
காதல் படம் தெலுங்குல ரீமேக் பண்ணாங்க. அதில் எனக்கு அங்கே நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. அதனால் தெலுங்கு பக்கம் போயிட்டேன். அங்கே டென்த் கிளாஸ்ன்னு ஒரு படம் பண்ணினேன். மக்கள்கிட்ட நல்ல ரீச்கிடைச்சது.
அப்போ தான் ஜனா சார் ஒரு படத்துக்கு ஐந்து ஹிரோயின்ஸ் செலக்ட் பண்ணிகிட்டு இருக்காருன்னு கேள்விப்பட்டு மேனேஜர் சைடுல இருந்து ஜனா சாரை காண்டாக்ட் பண்ணினோம். அவரு என்னை பார்த்துட்டு நீங்கள் ரொம்ப ஹோம்லியா இருக்கீங்க. நான் ரொம்ப பவர்புல்லா தேடிக்கிட்டு இருக்கேன்னு சொன்னாரு. இல்ல சார் நான் டிரை பண்ணிபார்க்கிறேன்னு சொன்னேன். சரின்னு வீடியோ டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு ஓ.கே. சொன்னார்.
பேராண்மையில ஐந்து கதாநாயகிகள் இருக்கும் போது உங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கிடைக்கும்ன்னு எதிர்பார்த்தீங்களா?
நான் எதிர்பார்க்கவேயில்லை. முதலில் ஜனா சார் இந்த படத்துல மொத்தம் ஐந்து ஹீரோயின்ஸ் இருக்கு. எந்த ரோல்ன்னு இன்னும் செலக்கட் பண்ணல. யாருக்கு எது கொடுத்தாலும் பண்ணனும் எந்த ஈகோவும் இருக்க கூடாதுன்னு சொன்னார். நான் ரவியோட ஜோடியா பண்ணபோறேன்னு எதிர்பார்க்கவேயில்ல. ரெண்டுநாள் ஷுட் பண்ணினோம். மூணாவது நாள் ஷுட்
அன்னைக்கு தான் ஜனா சார் சொன்னார்... இன்று லவ் சீன்ஸ் ஒரு ஹீரோயினுக்கு இருக்கு. இன்னும் யாருன்னு தெரியல. ஒரு டிரûஸ காட்டி இந்த டிரஸ் யாருக்கு வருதோ அவுங்களுக்கு தான் இன்னைக்கு நைட் ஷுட் இருக்குன்னு சொல்லிட்டாங்க. நான் மாலை ஆறு மணி ஆனதும் நம்மள எப்படியும் கூப்பிடபோறதில்லன்னு நெனைச்சி கார்ல ஏறி உட்கார்ந்துட்டேன்.
அப்புறம் கோ-டைரக்டர் வந்து சொன்னார்.
உங்களுக்கு தான் நைட் ஷுட் இருக்குன்னு.
எனக்கு ஒரே ஷாக். ரொம்ப எக்ûஸட்டிங்கா இருந்தது. ரொம்ப சந்தோஷமா இருந்தது. ரவியோட ஜோடியாக நடிப்பது கண்டிப்பா ஒரு பிரேக் கிடைக்கும்ன்னு நினைத்தேன்.
காட்டுக்குள் படப்பிடிப்பு நடக்கும் போது ஒரு பெண்ணா உங்களுக்கு நிறைய கஷ்டங்கள் இருந்திருக்குமே எப்படி சமாளித்தீர்கள்?
நிஜம் தான். ஆம்பளைங்க எங்கே வேணாலும் டிரஸ் சேஞ்ச் பண்ணிடுவாங்க. மற்ற விஷயங்களையும் சமாளிச்சுடுவாங்க. ஆனால் பெண்கள் எல்லாருக்கும் ரொம்ப கஷ்டம். எங்களுக்கு முன்னாடியே டிரஸ் எல்லாம் கொடுத்துடுவாங்க. நாங்க ரூம்லேயே மாத்திக்கிட்டு வந்திடுவோம். திடீர்ன்னு சாங்குக்கு டிரஸ் சேஞ்ச்
பண்ணணும்ன்னா கஷ்டம். எங்க ஆர்ட் டைரக்டர் செல்வம்ன்னு அவர் எங்களோட கஷ்டங்களை எல்லாம் புரிஞ்சுக்கிட்டு. உடனே ஒரு டென்ட் கட்டிக் கொடுத்திடுவாரு. அதே மாதிரி காட்டில் டைமுக்கு சாப்பாடு எல்லாம் கிடைக்காது. அட்டை பூச்சித் தொல்லை அதிகம். அது கடித்து என்னோட அஸிடெண்ட் கால் எல்லாம் ரத்தம் வந்திடுச்சு. எல்லாரும் அட்டைபூச்சியிடம் மாட்டிக்கிட்டாங்க. நான் மட்டும்தான் தப்பித்தேன். எல்லாரும் கேட்டாங்க நீ மட்டும் எப்படி தப்பிச்சன்னு நான் கீழே பார்த்துக்கிட்டு இருப்பேன். பேசிக்கிட்டே இருப்பேன். திடீர்ன்னு காலை தூக்கி மேலே வைத்துக் கொள்வேன்.
நீங்கள் மட்டும் தனியாக போவது போல படத்தில் காட்சிகள் இருந்தது. உண்மையிலேயே உங்களை அந்தக் காட்டில் தனியாகப் போக சொன்னால் எப்படி இருக்கும்
முத்துப்பேட்டையில சூட்டிங் நடக்கும் போது முதல்ல ரவி வரல. மூணு நாள் கழிச்சு தான் வந்தார். அதுவரையில் என்னோட காட்சிகள் மட்டும் தனியாக எடுத்தாங்க. சில நேரங்களல தனியா இருக்கிற மாதிரியே இருக்கும். ரொம்ப பயமா இருக்கும். சூட்டிங் ரெண்டு நாள் போனதுக்குப்புறம் காட்டுவாசி மாதிரி நானே தனியா போவேன். வருவேன். அப்படியே பழகிப்போச்சு. சில நேரங்களில் காட்டுவாசி மாதிரி ரூட் எல்லாம் சொல்லுவேன். அப்படி போகாதீங்க. இந்த பக்கம் போங்கன்னு. எல்லாரும் சிரிச்சுகிட்டு இருப்பாங்க. அதில் தனியா போவதா அய்யய்யோ ஏங்க உங்களுக்கு இப்படி ஒரு ஆசை. அதையெல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாது.
ஆற்றை கடக்கும் போதும் சேற்றில் மாட்டி இறக்கும் போதும் எங்களுக்கே பரிதாபமாக இருந்தது அந்த காட்சியை எங்கு எடுத்தார்கள் அதற்காக நீங்கள் பட்ட கஷ்டம் என்ன?
ஜனா சார் சொன்னார் ரெண்டு பேரை கயிற்றில் கட்டி இறக்கப் போறேன். ரெடியா இருங்க அது யார்ன்னு சொல்லமாட்டேன்னு சொன்னார். எனக்கு ஒரே பயம் சாமியை எல்லாம் வேண்டிகிட்டே இருப்பேன். என்னை கூப்பிடக் கூடாதுன்னு. திடீர்ன்னு என்னை கூப்பிட்டதும் எனக்கு ஒரே அழுகையா வந்துடுச்சு. அதுக்குப்புறம் ஒரு தைரியம் வந்துடுச்சு நம்ம எந்தளவு கஷ்ட படுறோமா அந்தளவு கண்டிப்பா மக்கள்கிட்ட ஒரு ரீச் கிடைக்கும்னு தோணுச்சு. உடனே எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் பரவாயில்லைன்னு இறங்கிட்டேன். மைக்கல் மாஸ்டர் தான் ரொம்ப உதவி பண்ணினார் அவர் தான் இந்த படத்துக்கு பைட் மாஸ்டர். என்னைவிட அவருக்கு தான் ரொம்ப இஷ்டம். வருஷ கணக்குல அந்த சேறு அப்படியே இருந்ததால அதெல்லாம் களிமண் ஆகிபோயிருந்தது. கால் வெச்சதும் கொஞ்சநேரத்துக்கெல்லாம் அப்படியே இழுக்க ஆரம்பிச்சிடும். அது காய காய ஒரு மாதிரி
இருக்கும். முகத்துல பேஸ் பேக் போட்ட மாதிரி இருக்கும். மாஸ்டர் சொல்லுவார் இந்த மாதிரி பேஸ் பேக்கெல்லாம் நீங்க நினைச்சு கூட கிடைக்காதுன்னு. இயற்கையா இருக்க இது எவ்வளவு நல்லது தெரியுமான்னு சொல்லுவார். அதே போல தண்ணீருக்குள்ள மூழ்கிட்டே ரைபல்ல சூட் பண்ணனும். ரொம்ப கஷ்டமா இருக்கும். எனக்கு ரெடியானதும் ரெடி சொன்னதும் எனக்கு முன்னாடி மைக்கேல் மாஸ்டர் தண்ணீருக்குள் மூழ்கிடுவாரு. திடீர்ன்னு பார்த்தீங்கன்னா கால் விரல்லெல்லாம் பிடிச்சுக்கும். மைக்கேல் மாஸ்டர்தான் கொஞ்சம்கூட ஈகோவே இல்லாம தேய்த்துவிடுவாரு. ஓர் அப்பா குழந்தையைப் பார்த்துக்குறா மாதிரி எங்களை பார்த்துகிட்டாரு.
என்.சி.சி மாணவிகள் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா அவர்களோட பேசிய அனுபவம் உண்டா?
குயின்மேரிஸ் கல்லூரி சீனியர் என்.சி.சி ஸ்டுடண்ட்ஸ் தான் எங்களுக்கு டிரைனீங் கொடுத்தாங்க. ஜனா சார் எங்களை கூப்பிட்டு நீங்க எல்லாரும் அந்த ஸ்டுடண்ட்ஸ்கிட்ட போய் பேசி பழகி எப்படி பண்ணனும், என்ன என்ன பண்ணனும் தெரிஞ்சுக்கோங்க. அவுங்க எப்படி யெல்லாம் பண்றாங்கன்னு அப்சர்வ் பண்ணிக்கோங்ன்னு சொன்னார். அதுக்கு பிறகு அவுங்ககிட்ட பதினைந்து நாள் பிராக்டிஸ் எடுத்துகிட்டோம். சூட் பண்ணும் போது அவுங்களும் எங்க கூடவே இருந்தாங்க. அந்தக் காட்டுக்குள்ள எல்லாம் வந்தாங்க. எப்படி ரைபிளை பிடிக்கணும்ன்றது எல்லாம் அவுங்க தான் சொல்லி கொடுத்தாங்க. அந்த சீன் எல்லாம் சினிமாவுல பார்க்க நல்லா வந்திருக்குன்னா அதுக்கு அவுங்களும் ஒரு காரணம்.