Tuesday, November 3, 2009

சரண்‌யா‌ பே‌ட்‌டி‌


தீபா​வளி அன்று ரிலீஸ் ஆன "பேராண்மை' படத்​தில் ஐந்து கதா​நா​ய​கி​க​ளில் ஒரு​வ​ராக "ஜெயம்' ரவி​யின் ஜோடி​யாக நடித்த "காதல்' சரண்​யாவை கோடம்​பாக்​கத்​தில் உள்ள அவ​ரது இல்​லத்​தில் ஒரு மாலை வேளை​யில் சந்​தித்​தோம். துள்​ள​லும்,​ துடிப்​பு​மாக இருக்​கும் சரண்யா சந்​தோ​ஷத்​தில் திளைத்​தி​ருக்​கி​றார்.
​"நாம் கேள்​விக்கு போக​லாமா?​' என்​ற​தும். எனக்கு டிவி​யில் குரோர்​பதி பார்ப்​பது போல் இருக்​கி​றது என்று கிண்​ட​ல​டித்​த​படி,​ நமக்கு பதி​ல​ளிக்க தொடங்​கி​னார்.
​காதல் படத்​திற்கு பிறகு பேராண்​மை​யில் தான் உங்​களை பார்க்க முடிஞ்​சது இவ்​வ​ளவு நாள் என்ன செய்து கொண்​டி​ருந்​தீர்​கள்?​
​காதல் படம் தெலுங்​குல ரீமேக் பண்​ணாங்க. அதில் எனக்கு அங்கே நல்ல ரெஸ்​பான்ஸ் இருந்​தது. அத​னால் தெலுங்கு பக்​கம் போயிட்​டேன். அங்கே டென்த் கிளாஸ்ன்னு ஒரு படம் பண்​ணி​னேன். மக்​கள்​கிட்ட நல்ல ரீச்​கி​டைச்​சது. ​
​அப்போ தான் ஜனா சார் ஒரு படத்​துக்கு ஐந்து ஹிரோ​யின்ஸ் செலக்ட் பண்​ணி​கிட்டு இருக்​கா​ருன்னு கேள்​விப்​பட்டு மேனே​ஜர் சைடுல ​ இருந்து ஜனா சாரை காண்​டாக்ட் பண்​ணி​னோம். அவரு என்னை பார்த்​துட்டு நீங்​கள் ரொம்ப ஹோம்​லியா இருக்​​கீங்க. நான் ரொம்ப பவர்​புல்லா தேடிக்​கிட்டு இருக்​கேன்னு சொன்​னாரு. இல்ல சார் நான் டிரை பண்​ணி​பார்க்​கி​றேன்னு சொன்​னேன். சரின்னு ​ வீடியோ டெஸ்ட் எல்​லாம் எடுத்​துட்டு ஓ.கே. சொன்​னார்.
​பேராண்​மை​யில ஐந்து கதா​நா​ய​கி​கள் இருக்​கும் போது உங்​க​ளுக்கு மட்​டும் முக்​கி​யத்​து​வம் கிடைக்​கும்ன்னு எதிர்​பார்த்​தீங்​களா?​
நான் எதிர்​பார்க்​க​வே​யில்லை. முத​லில் ஜனா சார் இந்த படத்​துல மொத்​தம் ஐந்து ஹீரோ​யின்ஸ் இருக்கு. எந்த ரோல்ன்னு இன்​னும் செலக்​கட் பண்​ணல. யாருக்கு எது கொடுத்​தா​லும் பண்​ண​னும் எந்த ஈகோ​வும் இருக்க கூடா​துன்னு சொன்​னார். நான் ரவி​யோட ஜோடியா பண்​ண​போ​றேன்னு எதிர்​பார்க்​க​வே​யில்ல. ரெண்​டு​நாள் ஷுட் பண்​ணி​னோம். மூணா​வது நாள் ஷுட்
அன்​னைக்கு தான் ஜனா சார் சொன்​னார்... இன்று லவ் சீன்ஸ் ​ ஒரு ​ ஹீரோ​யி​னுக்கு இருக்கு. இன்​னும் யாருன்னு தெரி​யல. ஒரு டிரûஸ காட்டி இந்த டிரஸ் யாருக்கு வருதோ அவுங்​க​ளுக்கு தான் ​ இன்​னைக்கு ​ நைட் ஷுட் இருக்​குன்னு சொல்​லிட்​டாங்க. நான் மாலை ஆறு மணி ஆன​தும் நம்​மள எப்​ப​டி​யும் கூப்​பி​ட​போ​ற​தில்​லன்னு நெனைச்சி கார்ல ஏறி உட்​கார்ந்​துட்​டேன்.
அப்​பு​றம் கோ-​டைரக்​டர் வந்து சொன்​னார். ​
உங்​க​ளுக்கு தான் நைட் ஷுட் இருக்​குன்னு.
எனக்கு ஒரே ஷாக். ரொம்ப ​ எக்​ûஸட்​டிங்கா இருந்​தது. ரொம்ப சந்​தோஷமா இருந்​தது. ரவி​யோட ஜோடியாக நடிப்பது கண்​டிப்பா ஒரு பிரேக் கிடைக்​கும்​ன்னு நினைத்​தேன்.
​காட்​டுக்​குள் படப்​பி​டிப்பு நடக்​கும் போது ஒரு பெண்ணா உங்​க​ளுக்கு நிறைய கஷ்டங்​கள் இருந்​தி​ருக்​குமே எப்​படி சமா​ளித்​தீர்​கள்?​ ​
​நிஜம் தான். ஆம்​ப​ளைங்க எங்கே வேணா​லும் டிரஸ் சேஞ்ச் பண்​ணி​டு​வாங்க. மற்ற விஷயங்​க​ளை​யும் சமா​ளிச்​சு​டு​வாங்க. ஆனால் ​​ பெண்​கள் எல்​லா​ருக்​கும் ரொம்ப கஷ்​டம். எங்​க​ளுக்கு முன்​னா​டியே டிரஸ் எல்​லாம் கொடுத்​து​டு​வாங்க. நாங்க ரூம்​லேயே மாத்​திக்​கிட்டு வந்​தி​டு​வோம். திடீர்ன்னு சாங்​குக்கு டிரஸ் சேஞ்ச்
பண்​ண​ணும்ன்னா ​ கஷ்​டம். எங்க ஆர்ட் டைரக்​டர் செல்​வம்ன்னு ​ அவர் எங்​க​ளோட கஷ்டங்​களை எல்​லாம் புரிஞ்​சுக்​கிட்டு. உடனே ஒரு டென்ட் கட்டிக் கொடுத்​தி​டு​வாரு. அதே மாதிரி காட்​டில் டைமுக்கு சாப்​பாடு எல்​லாம் கிடைக்​காது. ​ அட்டை பூச்சித் தொல்லை அதி​கம். அது கடித்து என்​னோட ​ அஸி​டெண்ட் கால் எல்​லாம் ரத்​தம் வந்​தி​டுச்சு. எல்​லா​ரும் அட்​டை​பூச்​சி​யி​டம் மாட்​டிக்​கிட்​டாங்க. நான் மட்​டும்​தான் தப்​பித்​தேன். எல்​லா​ரும் கேட்​டாங்க நீ மட்​டும் எப்​படி தப்​பிச்​சன்னு ​ ​ நான் கீழே பார்த்​துக்​கிட்டு இருப்​பேன். பேசிக்​கிட்டே இருப்​பேன். ​ ​ திடீர்ன்னு காலை தூக்கி மேலே வைத்​துக் ​கொள்​வேன்.
​நீங்​கள் மட்​டும் தனி​யாக போவது போல படத்​தில் காட்​சி​கள் இருந்​தது. உண்​மை​யி​லேயே உங்​களை அந்​தக் காட்​டில் தனி​யா​கப் போக சொன்​னால் எப்​படி இருக்​கும்
​முத்​துப்​பேட்​டை​யில சூட்​டிங் நடக்​கும் போது முதல்ல ரவி வரல. மூணு நாள் கழிச்சு தான் வந்​தார். அது​வ​ரை​யில் என்​னோட காட்​சி​கள் மட்​டும் தனி​யாக எடுத்​தாங்க. சில நேரங்​க​ளல தனியா இருக்​கிற மாதி​ரியே இருக்​கும். ரொம்ப பயமா இருக்​கும். சூட்​டிங் ரெண்டு நாள் போன​துக்​குப்​பு​றம் காட்​டு​வாசி மாதிரி நானே தனியா போவேன். வரு​வேன். அப்​ப​டியே பழ​கிப்​போச்சு. சில நேரங்​க​ளில் காட்​டு​வாசி மாதிரி ரூட் எல்​லாம் சொல்​லு​வேன். அப்​படி போகா​தீங்க. இந்த பக்​கம் போங்​கன்னு. எல்​லா​ரும் சிரிச்​சு​கிட்டு இருப்​பாங்க. அதில் தனியா போவதா அய்​யய்யோ ஏங்க உங்​க​ளுக்கு இப்​படி ஒரு ஆசை. அதை​யெல்​லாம் நினைத்து கூட பார்க்க முடி​யாது. ​ ​
​ஆற்றை கடக்​கும் போதும் சேற்​றில் மாட்டி இறக்​கும் போதும் எங்​க​ளுக்கே பரி​தா​ப​மாக இருந்​தது அந்த காட்​சியை எங்கு எடுத்​தார்​கள் அதற்​காக ​ நீங்​கள் பட்ட கஷ்டம் என்ன?
ஜனா சார் சொன்​னார் ரெண்டு பேரை கயிற்​றில் கட்டி இறக்கப் போறேன். ​ ரெடியா இருங்க அது யார்ன்னு சொல்​ல​மாட்​டேன்னு சொன்​னார். எனக்கு ஒரே பயம் சாமியை எல்​லாம் வேண்​டி​கிட்டே இருப்​பேன். என்னை கூப்​பிடக் கூடா​துன்னு. திடீர்ன்னு என்னை கூப்​பிட்​ட​தும் எனக்கு ஒரே ​ அழு​கையா வந்​து​டுச்சு. அதுக்​குப்​பு​றம் ஒரு தைரி​யம் வந்​து​டுச்சு நம்ம எந்​த​ளவு கஷ்ட படு​றோமா அந்​த​ளவு கண்​டிப்பா மக்​கள்​கிட்ட ஒரு ரீச் கிடைக்​கும்னு ​ தோணுச்சு. உடனே எவ்​வ​ளவு கஷ்டம் இருந்​தா​லும் பர​வா​யில்​லைன்னு இறங்​கிட்​டேன். மைக்​கல் மாஸ்​டர் தான் ரொம்ப உதவி பண்​ணி​னார் அவர் தான் இந்த படத்​துக்கு பைட் மாஸ்​டர். என்​னை​விட அவ​ருக்கு தான் ரொம்ப இஷ்டம். வருஷ கணக்​குல அந்த சேறு அப்​ப​டியே இருந்​த​தால அதெல்​லாம் களி​மண் ஆகி​போ​யிருந்​தது. கால் வெச்​ச​தும் கொஞ்​ச​நே​ரத்​துக்​கெல்​லாம் அப்​ப​டியே இழுக்க ஆரம்​பிச்​சி​டும். அது காய காய ஒரு மாதிரி
இருக்​கும். முகத்​துல பேஸ் பேக் ​போட்​ட ​மா​திரி இருக்​கும். மாஸ்​டர் சொல்​லு​வார் இந்த மாதிரி பேஸ் பேக்​கெல்​லாம் நீங்க நினைச்சு கூட கிடைக்​கா​துன்னு. இயற்​கையா இருக்க இது எவ்​வ​ளவு நல்​லது தெரி​யு​மான்னு சொல்​லு​வார். அதே போல தண்​ணீ​ருக்​குள்ள மூழ்​கிட்டே ரைபல்ல சூட் பண்​ண​னும். ரொம்ப கஷ்​டமா இருக்​கும். எனக்கு ரெ​டி​யா​ன​தும் ரெடி சொன்​ன​தும் எனக்கு முன்​னாடி மைக்​கேல் மாஸ்​டர் தண்​ணீருக்​குள் ​மூழ்​கி​டு​வாரு. திடீர்ன்னு பார்த்​தீங்​கன்னா கால் விரல்​லெல்​லாம் பிடிச்​சுக்​கும். மைக்​கேல் மாஸ்​டர்​தான் கொஞ்​சம்​கூட ஈகோவே இல்​லாம தேய்த்​து​வி​டு​வாரு. ஓர் அப்பா குழந்​தையைப் பார்த்​துக்​குறா மாதிரி எங்​களை பார்த்​து​கிட்​டாரு.
​என்.சி.சி மாண​வி​கள் பற்றி கேள்வி பட்​டி​ருக்​கி​றீர்​களா அவர்​க​ளோட பேசிய அனு​ப​வம் உண்டா?​
​குயின்​மே​ரிஸ் கல்​லூரி சீனி​யர் என்.சி.சி ஸ்டு​டண்ட்ஸ் தான் எங்​க​ளுக்கு ​ டிரை​னீங் கொடுத்​தாங்க. ஜனா சார் எங்​களை கூப்​பிட்டு நீங்க எல்​லா​ரும் அந்த ஸ்டு​டண்ட்ஸ்​கிட்ட போய் பேசி பழகி ​ எப்​படி பண்​ண​னும்,​ என்ன என்ன பண்​ண​னும் தெரிஞ்​சுக்​கோங்க. அவுங்க ​ எப்​படி யெல்​லாம் பண்​றாங்​கன்னு அப்​சர்வ் பண்​ணிக்​கோங்ன்னு சொன்​னார். அதுக்கு பிறகு அவுங்​க​கிட்ட பதி​னைந்து நாள் பிராக்​டிஸ் எடுத்​து​கிட்​டோம். சூட் பண்​ணும் போது அவுங்​க​ளும் எங்க கூடவே இருந்​தாங்க. அந்​தக் காட்​டுக்​குள்ள எல்​லாம் வந்​தாங்க. எப்​படி ரைபிளை பிடிக்​க​ணும்ன்​றது எல்​லாம் அவுங்க தான் சொல்லி கொடுத்​தாங்க. அந்த சீன் எல்​லாம் சினி​மா​வுல பார்க்க நல்லா வந்​தி​ருக்​குன்னா அதுக்கு அவுங்​க​ளும் ஒரு கார​ணம். ​​​