விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக கொஞ்சும் தமிழில் பேசி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷில்பா. "நம் வீட்டு கல்யாணம்' நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தளத்தில் அவரைச் சந்தித்தோம். நம்மிடமும் கொஞ்சும் தமிழில் பேசினார். இனி அவருடன்..
* உங்களைப் பற்றி சொல்லுங்கள்?
எனக்கு பூர்வீகம் கேரளா. நான் ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறேன். ஐந்து வருடமாக இந்துஸ்தானி மியூசிக் கற்று வருகிறேன். என் தங்கை என்ஜினீயரிங் படிக்கிறாள். எங்களுடையது சிறிய அன்பான குடும்பம்.
* தற்போது என்னென்ன நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குகிறீர்கள்?
"நம் வீட்டு கல்யாணம்' நிகழ்ச்சியை ஒன்றரை வருடமாக தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறேன். அதைத்தவிர டிவி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறேன். தற்போது விஜய் டிவியில் புதியதாக தொடங்கியிருக்கும் "சினிமா சினிமா' நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாகவும் இருக்கிறேன்.
* பிரபலங்களின் திருமணத்தை "நம் வீட்டு கல்யாணம்' நிகழ்ச்சி மூலம் தொகுத்து வழங்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
புது மையான அனுபவம். பிரபலங்களின் திருமணத்தை நேரில் சென்று பார்க்க முடியாதவர்கள் தங்கள் வீட்டில் இருந்தே அவர்களுடைய சடங்குகள், சம்பிரதாயங்களைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. அதைத் தவிர திருமணத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்களைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. இந்தக் கான்சப்ட்டே ரொம்ப புதுமையானது. மக்களிடம் நிறைய வரவேற்பு இருக்கிறது.
* தொடர்களில் ஏன் நீங்கள் நடிக்கவில்லை?
தொடர்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நடிப்பதில் எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை.
* நிகழ்ச்சி தொகுப்பாளினி தவிர வேறு எதில் கவனம் செலுத்துகிறீர்கள்?
ஸ்டேஜ் ஷோக்களில் இந்துஸ்தானி இசையில் பாடல்கள் பாடுகிறேன். பாட்டு தான் ரொம்ப பிடித்திருக்கிறது. இப்போதைக்கு முழுக்க முழுக்க இந்துஸ்தானி இசை பாடல்களில்தான் கவனம் செலுத்துகிறேன்.
* பின்னணி பாடகி ஆவதற்கு ஏதும் முயற்சி செய்கிறீர்களா?
கன் னடப் படம் ஒன்றில் ஒரு பாடல் பாடியிருக்கிறேன். தமிழில் பாடுவதற்கான முயற்சிகள் செய்து வருகிறேன். அதற்காக இசையமைப்பாளர்களிடம் டெமோ சிடிகள் கொடுத்து வருகிறேன்.
* இந்துஸ்தானி இசையைத் தேர்தெடுத்தது ஏன்?
என் குரலுக்கு இந்துஸ்தானி இசை பொருத்தமாக இருக்கிறது. சிறுவயதில் கர்நாடக இசை கொஞ்சம் கற்றுக்கொண்டேன். மேற்கத்திய மற்றும் இந்துஸ்தானி இசை பிடித்தமானவை. எனவே அவற்றை விரும்பி கற்றுக்கொண்டேன். பொதுவாகவே எனக்கு மெலோடியான இசையைக் கேட்க ரொம்ப பிடிக்கும்.
* நிகழ்ச்சிகளின் மூலம் மக்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு பேசும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
மக் களை நேரடியாக தொடர்பு கொண்டு பேசுவதால், நிதானமாகவும், கவனமாகவும் பேசவேண்டியுள்ளது. ஏதாவது தவறாகி போனாலும் திருத்திக் கொள்ள முடியாது. மக்கள் நம்மை நேரடியாக திட்டிவிடுவார்கள். அதனால் மிக கவனத்துடன் பேச வேண்டும். சிரமங்களுக்கு ஆண்,பெண் என்ற வேறுபாடு தெரியாது. பிற துறைகளில் உள்ள சிரமங்கள் இத்துறையிலும் இருக்கின்றன.
* உங்களைப்பற்றி ரசிகர்கள் என்ன சொல்லுகிறார்கள்?
நிகழ்ச் சியைத் தொகுத்து வழங்கும்போது என் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது எனச் சொல்லுகிறார்கள். மேலும், நளினமாகப் பேசுவதாகவும் சொல்லுகிறார்கள். இப்படி மக்கள் நம்மிடம் நேரடியாக சொல்லும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இதை எனக்கு கிடைக்கும் பரிசாக நினைக்கிறேன்.
Tuesday, April 13, 2010
நடிப்பதில் ஆர்வம் இல்லை! - ஷில்பா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment