பங்குச் சந்தை விவரங்கள் என்றாலே பெரும்பாலானோருக்கு எட்டிக்காய் கசப்பாக இருக்கும். அதை அழகுத் தமிழில் விவரித்து அசத்தி வருகிறார் அருள்செல்வி. மக்கள் தொலைக்காட்சியில் தினமும் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை 'வளாகம்' நிகழ்ச்சியின் மூலம் எடுத்துச் சொல்லும் அவரைச் சந்தித்தோம்.
நிகழ்ச்சி தொகுப்பாளினியானது எப்படி?
நான் கல்லூரி முடித்துவிட்டு பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். திருமணமானதால் ஆசிரியை வேலையைத் தொடர முடியாமல் வீட்டில் இருந்தேன். அந்த நேரத்தில் மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தேவை என்று விளம்பரப் படுத்தியிருந்தார்கள். எனக்குத் தமிழ் மீது இருந்த ஆர்வத்தினால் அதற்கு விண்ணப்பித்தேன். ஆடிஷனுக்குக் கூப்பிட்டார்கள். சென்று வந்த இரண்டு நாளில் நான் தேர்வாகி என்னுடைய நிகழச்சியைத் தொகுத்து வழங்க ஆரம்பித்துவிட்டேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
தற்போது என்னென்ன நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்?
காலை 8.30 முதல் 9.30 வரையில் ஒளிபரப்பாகும் பங்குச் சந்தை தொடர்புடைய 'வளாகம்' நிகழ்ச்சியும், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'கை மணம்' என்ற நிகழ்ச்சியும் வழங்கிக் கொண்டிருக்கிறேன். ஒரு சில நேரங்களில் வழக்கமான தொகுப்பாளர்கள் வரவில்லை என்றால் வேளாண் சந்தை, ஏற்றுமதி இறக்குமதி, வேலைவாய்ப்பு தகவல் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவேன்.
பொதுமக்களிடம் நேரடித் தொடர்பு கொண்டு உரையாடும்போது என்ன உணர்வு ஏற்படும்?
சந்தோஷமாக இருந்தாலும் சரி, கோபமாக இருந்தாலும் சரி கேமிரா முன் வந்து நின்று விட்டால் எல்லாவற்றையும் மறந்து நிகழ்ச்சியில் மட்டுமே கவனம் இருக்கும். சில சமயங்களில் ஊர் பக்கத்தில் இருந்து மக்கள் பேசும் போது அவர்கள் தமிழைக் கேட்டதும், முகம் தெரியாத நபராக இருந்தாலும் ஓர் இனம் புரியாத சந்தோஷம் ஏற்படும். நம்ம சொந்த ஊரில் இருந்து தொடர்பு கொண்டு பேசுகிறார்கள் என்று ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கும். அதே சமயத்தில் கிராமத்து மக்களிடம் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியையும், விழிப்புணர்வையும் தெரிந்துகொள்ள முடியும்.
தொடர்களில் உங்களைப் பார்க்க முடியவில்லையே?
தொடர்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் எனக்கு நடிப்பதில் அவ்வளவாக விருப்பமோ, ஆர்வமோ இல்லை என்பதால் வாய்ப்புகளை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் எனக்கு சிறு வயது முதலே விளம்பரப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு இது வரை சரியான வாய்ப்பு அமையவில்லை.
மக்கள் தொலைக்காட்சியைப் பொருத்தவரை தமிழுக்கு முன் உரிமை அதிகமாக இருக்குமே எப்படிச் சமாளீக்கிறீர்கள்?
ஆங்கிலம் கலக்காமல் நல்ல தமிழில் பேசி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. நிகழ்ச்சி வழங்கும் ஒரு மணி நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் ஆங்கிலம் கலந்து பேசுவதை நினைத்தால் சில நேரம் வெட்கமாக இருக்கும். பொதுவாக நிறைய பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள் எப்படி ஆங்கிலம் கலக்காமல் உங்களால் தமிழில் மட்டுமே பேச முடிகிறது என்று. எனது குடும்பம் தமிழ் பாரம்பாரிய மிக்க குடும்பம். என் வீட்டில் உள்ளவர்கள் எல்லாருமே தமிழ் எம்.ஏ. படித்தவர்கள். அதனால் பொழுதுபோக்குக்காக அமர்ந்து பேசும்போது கூட சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றைப் பற்றிப் பேசுவார்கள். அதுதான் எனக்கு தமிழ் மீது பற்று ஏற்பட ஒரு காரணம் என்று நினைக்கிறேன். இப்படி ஒரு மணி நேரம் தமிழிலேயே பேசுவதை எனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாக நினைக்கிறேன்.
உங்களுடைய பொழுதுபோக்கு என்ன?
எனக்கு கைவினைப் பொருட்கள் செய்வதில், ஓவியம் வரைவதில், தஞ்சாவூர் ஓவியங்கள் வரைதல் போன்ற கலைநயம் மிக்க வேலைகள் மீது ஈடுபாடு அதிகம். அதற்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறேன். யோகா முறைப்படி கற்றுக்கொண்டிருக்கிறேன். அதனால் யோகா பயிற்சியும் அளித்து வருகிறேன்.
உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?
ஒரு தயாரிப்பாளராக நிகழ்ச்சிகளைத் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்கிற ஆசை நிறைய இருக்கிறது.
-ஸ்ரீதேவிகுமரேசன்
நிகழ்ச்சி தொகுப்பாளினியானது எப்படி?
நான் கல்லூரி முடித்துவிட்டு பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். திருமணமானதால் ஆசிரியை வேலையைத் தொடர முடியாமல் வீட்டில் இருந்தேன். அந்த நேரத்தில் மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தேவை என்று விளம்பரப் படுத்தியிருந்தார்கள். எனக்குத் தமிழ் மீது இருந்த ஆர்வத்தினால் அதற்கு விண்ணப்பித்தேன். ஆடிஷனுக்குக் கூப்பிட்டார்கள். சென்று வந்த இரண்டு நாளில் நான் தேர்வாகி என்னுடைய நிகழச்சியைத் தொகுத்து வழங்க ஆரம்பித்துவிட்டேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
தற்போது என்னென்ன நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்?
காலை 8.30 முதல் 9.30 வரையில் ஒளிபரப்பாகும் பங்குச் சந்தை தொடர்புடைய 'வளாகம்' நிகழ்ச்சியும், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'கை மணம்' என்ற நிகழ்ச்சியும் வழங்கிக் கொண்டிருக்கிறேன். ஒரு சில நேரங்களில் வழக்கமான தொகுப்பாளர்கள் வரவில்லை என்றால் வேளாண் சந்தை, ஏற்றுமதி இறக்குமதி, வேலைவாய்ப்பு தகவல் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவேன்.
பொதுமக்களிடம் நேரடித் தொடர்பு கொண்டு உரையாடும்போது என்ன உணர்வு ஏற்படும்?
சந்தோஷமாக இருந்தாலும் சரி, கோபமாக இருந்தாலும் சரி கேமிரா முன் வந்து நின்று விட்டால் எல்லாவற்றையும் மறந்து நிகழ்ச்சியில் மட்டுமே கவனம் இருக்கும். சில சமயங்களில் ஊர் பக்கத்தில் இருந்து மக்கள் பேசும் போது அவர்கள் தமிழைக் கேட்டதும், முகம் தெரியாத நபராக இருந்தாலும் ஓர் இனம் புரியாத சந்தோஷம் ஏற்படும். நம்ம சொந்த ஊரில் இருந்து தொடர்பு கொண்டு பேசுகிறார்கள் என்று ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கும். அதே சமயத்தில் கிராமத்து மக்களிடம் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியையும், விழிப்புணர்வையும் தெரிந்துகொள்ள முடியும்.
தொடர்களில் உங்களைப் பார்க்க முடியவில்லையே?
தொடர்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் எனக்கு நடிப்பதில் அவ்வளவாக விருப்பமோ, ஆர்வமோ இல்லை என்பதால் வாய்ப்புகளை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் எனக்கு சிறு வயது முதலே விளம்பரப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு இது வரை சரியான வாய்ப்பு அமையவில்லை.
மக்கள் தொலைக்காட்சியைப் பொருத்தவரை தமிழுக்கு முன் உரிமை அதிகமாக இருக்குமே எப்படிச் சமாளீக்கிறீர்கள்?
ஆங்கிலம் கலக்காமல் நல்ல தமிழில் பேசி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. நிகழ்ச்சி வழங்கும் ஒரு மணி நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் ஆங்கிலம் கலந்து பேசுவதை நினைத்தால் சில நேரம் வெட்கமாக இருக்கும். பொதுவாக நிறைய பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள் எப்படி ஆங்கிலம் கலக்காமல் உங்களால் தமிழில் மட்டுமே பேச முடிகிறது என்று. எனது குடும்பம் தமிழ் பாரம்பாரிய மிக்க குடும்பம். என் வீட்டில் உள்ளவர்கள் எல்லாருமே தமிழ் எம்.ஏ. படித்தவர்கள். அதனால் பொழுதுபோக்குக்காக அமர்ந்து பேசும்போது கூட சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றைப் பற்றிப் பேசுவார்கள். அதுதான் எனக்கு தமிழ் மீது பற்று ஏற்பட ஒரு காரணம் என்று நினைக்கிறேன். இப்படி ஒரு மணி நேரம் தமிழிலேயே பேசுவதை எனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாக நினைக்கிறேன்.
உங்களுடைய பொழுதுபோக்கு என்ன?
எனக்கு கைவினைப் பொருட்கள் செய்வதில், ஓவியம் வரைவதில், தஞ்சாவூர் ஓவியங்கள் வரைதல் போன்ற கலைநயம் மிக்க வேலைகள் மீது ஈடுபாடு அதிகம். அதற்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறேன். யோகா முறைப்படி கற்றுக்கொண்டிருக்கிறேன். அதனால் யோகா பயிற்சியும் அளித்து வருகிறேன்.
உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?
ஒரு தயாரிப்பாளராக நிகழ்ச்சிகளைத் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்கிற ஆசை நிறைய இருக்கிறது.
-ஸ்ரீதேவிகுமரேசன்
No comments:
Post a Comment