Friday, July 30, 2010

"பெண் தாதா நான்!''


கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் "மகாலட்சுமி' தொடரில் ஹார்பர் சிங்காரியாக வந்து குள்ளநரித்தனமான வேலைகளை
செய்யும் பெண் தாதாவான பத்மினியை சந்தித்தோம். பக்கத்தில் அமர பயந்து, சற்று தள்ளி அமர்ந்தே பேச்சை ஆரம்பித்தோம்.
எப்படி சின்னத்திரை பக்கம் வந்தீர்கள்?
நான் சிறுவயது முதல் நடித்துக் கொண்டிருக்கிறேன். "மாயக்கண்ணாடி' "தில்' போன்ற படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருக்கிறேன். எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசையினால்தான் நடிப்புத் துறையை தேர்ந்தெடுத்தேன். நான் நடித்த முதல் தொடர் கே.ஆர்.விஜயா அம்மாவோட "மடிசார் மாமி' தொடர்தான். அதை தவிர "சித்தி' தொடரிலும் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறேன்.
"மகாலட்சுமி' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
லட்சுமி மேடம் மெயின் கேரக்டராக நடிக்கிற தொடர்தான் "மகாலட்சுமி'. அதில் ஹார்பர் சிங்காரி என்ற பெயரில் ஒரு பெண் தாதா கேரக்டரில் வருகிறேன். அதாவது லட்சுமியம்மா வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணை கடத்தி வந்து விற்று விடுவது போல கதை. ஆனால் இதுவரை எனக்கும் லட்சுமி அம்மாவுக்கும் காம்பினேஷன் உள்ள காட்சிகள் வரவில்லை. இப்போது என்னுடைய டிராக் மட்டும்தான் போய்கிட்டு இருக்கிறது.
இந்த மாதிரி பெண் தாதாவாக நடிப்பது எப்படி இருக்கிறது?
அந்தக் காலத்தில் இருந்த டி.ஆர். ராஜகுமாரி, சுந்தரிபாய் போன்ற வில்லி கேரக்டர் செய்ய வேண்டும் என்ற ஆசையில்தான் இந்த மாதிரி வில்லத்தனமான கேரக்டரில் நடிக்கிறேன். வில்லி கேரக்டர் என்றால், "பத்மினியை கூப்பிடுங்க' என்று சொல்ல வேண்டும். பாஸிட்டிவ்வான கேரக்டர்ஸ் செய்ய நிறைய பேர் இருக்காங்க. ஆனால் நெகட்டிவ் கேரக்டர் செய்ய ஒரு சிலர்தான் இருக்காங்க.
நெகட்டிவ் கேரக்டர் என்றால் பலர் வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். ஆனால், உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் நெகட்டிவ் கேரக்டர்கள் செய்பவர்கள்தான் சீக்கிரம் ரீச் ஆகிவிடுவார்கள். அதனால்தான் நெகட்டிவ் கேரக்டர் செய்ய வேண்டும் என்று ஆசைபடுகிறேன்.
இவ்வளவு வில்லத்தனமான கேரக்டர் எதிர்பார்க்கும் நீங்கள் நிஜத்தில் எப்படி?
நடிக்கிற கேரக்டர்தான் வில்லத்தனமே தவிர, நிஜத்தில் நான் ரொம்ப சாஃப்ட்டான கேரக்டர்.
வேறு என்ன தொடர்களில் நடிக்கிறீர்கள்?
விஜய் டிவியில் ஏழு மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சித்தர்கள் சம்பந்தப்பட்ட "யாமிருக்க பயமேன்' என்ற ஆன்மீக தொடரிலும் நடிக்கிறேன்.அதில் மகாலட்சுமிக்கு அம்மாவாக நடிக்கிறேன். ஹார்பர் சிங்காரிக்கும் இந்த தொடருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அப்படியே ரொம்ப அமைதியான கேரக்டர் செய்கிறேன்.
பெரிய திரையில் படங்கள் எதுவும் நடித்துக் கொண்டிருக்கிறீர்களா?
ஒரு படம் நடிக்கிறேன். "ஈரம்' படத்தில் நடித்த ஆதி ஹீரோவாக நடிக்கும் "அய்யனார்' படத்தில் நடிக்கிறேன். அடுத்து நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன். அப்படி வந்தால் நடிப்பேன்.
நீங்கள் நடிக்கும் தொடர்களைப் பார்த்ததுண்டா?
நேரம் கிடைக்கும்போது பார்ப்பேன்முக்கியமாக ஏதாவது தவறு செய்திருந்தால் திருத்தி கொள்ளலாம் என்பதற்காகவே பார்ப்பேன். என் கணவரும் பார்த்து விட்டு உதவி செய்வார்.
குடும்பம்?
என் கணவர் சரவணன் "கிள்ளாதே' என்று ஒரு படம் டைரக்ட் பண்ணிக்கிட்டு இருக்காருஅந்தப் படம் அடுத்த மாதம் ரிலிஸ் ஆக உள்ளது. இரண்டரை வயதில் லட்சுமி நாராயணி என்ற குழந்தை இருக்கிறது.
உங்கள் கணவரும் சினிமாத்துறையில் இருப்பதால்,உங்களுக்கு டைரக்ஷன் செய்கிற எண்ணம் உண்டா?

டைரக்ஷன் செய்கிற எண்ணம் இல்லை. ஆனால் புரொடக்ஷன் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு.அதற்கான முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறேன்.

2 comments:

  1. என் வலை தளமும் பாருங்க சகோதரி.http://swthiumkavithaium.blogspot.com/

    ReplyDelete
  2. என் வலை தளமும் பாருங்க சகோதரி.http://swthiumkavithaium.blogspot.com/

    ReplyDelete