Friday, July 30, 2010

'வேடிக்கை பார்க்கப் போனேன்... வேஷம் கட்டி வந்தேன்!'


ஜெயா டிவியில் ​ தற்போது புதிதாக ஆரம்பித்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'வந்தாளே மகராசி' என்ற தொடரின் மூலம் நடிகையாகி எல்லோரையும் கவர்ந்து வருகிறார் ஐஸ்வர்யா.​ இவர் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்தார்.​ விளம்பரம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த அவரை சந்தித்துப் பேசினோம்:
எப்படி நடிக்க வந்தீர்கள்?
என் அண்ணனுக்குக் காம்பியராக ஆக வேண்டும் என்று நிறைய ஆசையிருந்தது.​ ஒரு முறை விஜய் டிவியில் அதற்கான ஆடிஷன் நடந்தது.​ அதில் கலந்துகொள்ள அண்ணன் போனார்.​ அவரோடு நானும் சும்மா வேடிக்கை பார்க்கப் போயிருந்தேன்.​ ஆனால் அவர் தேர்வாகவில்லை.​ எதிர்பாராதவிதமாக நான் தேர்தெடுக்கப்பட்டேன்.​ வேடிக்கை பார்க்க போன இடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.​ அப்படித்தான் நடிப்புப் பக்கம் வந்தேன்.
தொகுப்பாளினியாக இருந்து 'வந்தாளே மகராசி' தொடருக்குத் தாவியது எப்படி?
மூன்று வருடமாக விஜய் டிவியில் வரும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தேன்.​ அதேபோல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு காம்பயரிங் செய்துள்ளேன்.​ ​ அப்போதிலிருந்தே தொடர்களில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன.​ அதில் கொஞ்சமும் விருப்பமில்லாமல் இருந்தேன்.​ ஆனால் இந்தத் தொடருடைய கதை எனக்கு மிகவும் பிடித்தது.​ அதனால் இத்தொடரில் நடிக்கச் சம்மதித்தேன்.
நடிக்கும் அனுபவம் எப்படி?
காம்பயரிங் செய்வதற்கும்,​​ நடிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.​ ​ காம்பயரிங் நம் வீட்டிலோ,​​ நண்பர்களிடமோ பேசுவது போன்று இயல்பாகப் பேசினால் போதும்.​ அதே சமயம் சில நேரங்களில் சரியாக நிகழ்ச்சியை வழங்கவில்லை என்றால் ​ உடனே முகத்துக்கு நேரே திட்டிவிடுவார்கள்.​ அதே சமயம் நன்றாக இருந்தால் உடனே வாழ்த்துவார்கள்.​ ​ ஆனால் நடிப்பு அப்படியில்லை.​ நடித்து முடித்து,​​ நாடகம் ஒளிபரப்பாகி,​​ வெளி இடங்களுக்குச் செல்கையில்,​​ ரசிகர்களைச் சந்திக்கும்போதுதான் ​ நம்ம என்ன செய்திருக்கிறோம் என்று தெரியும்.​ நடிக்கும்போது அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிட வேண்டியிருக்கிறது.​ இது ஒரு வித்தியாசமான,​​ புதுமையான நல்ல அனுபவமாக இருக்கிறது.
வேறென்ன தொடர்களில் நடிக்கிறீர்கள்?
தற்போது இந்த ஒரு தொடரில்தான் நடிக்கிறேன்.​ நான் விஸ்காம் ரெகுலரில் படித்துக் கொண்டிருக்கிறேன்.​ அதனால் நடிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை.​ இதற்கே ரொம்ப போராடித் தான் கல்லூரியில் அனுமதி வாங்க வேண்டியிருக்கிறது.​ அதனால் கல்லூரியை முடித்த பிறகே முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்தலாம் என்றிருக்கிறேன்.​ ​ ​ ஆரம்பத்தில் இருந்தே பெரியதிரையில் நிறைய வாய்ப்புகள் வருகின்றன.​ 'சுப்பிரமணியபுரம்',​ 'சரோஜா' போன்ற படங்களிலும் வாய்ப்புகள் வந்தன.​ படிப்பு காரணமாகவே அந்தப் படங்களில் எல்லாம் நடிக்க முடியாமற் போய்விட்டது.​ இதை தவிர விளம்பரப் படங்களிலும் நடிக்கிறேன்.
வருங்காலத் திட்டம்?
வருங்காலத்தில் திரைக்கு முன் வருவதா அல்லது திரைக்குப் பின் நிற்பதா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. படிப்பை முடித்த பிறகுதான் அதை முடிவு செய்ய வேண்டும். தொடர்ந்து நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் சிறிது காலம் நடித்துவிட்டு பிறகு டைரக்ஷன் பக்கம் போகலாம் என்று எண்ணியிருக்கிறேன்.
குடும்பம்?
நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண். அப்பா பிரபாகர் மளிகை கடை வைத்திருக்கிறார். அம்மா ராணி குடும்பத் தலைவி. கலைஞர் டிவியில் காம்பயரிங் செய்யும் சந்தோஷ் என் அண்ணன்தான். அவர் நடிப்பதற்கு நிறைய டிப்ஸ் கொடுப்பார். நான் பாட்டி, தாத்தா செல்லம். அவர்கள்தான் என்னை அதிகம் ஊக்கப்படுத்துகிறார்கள்.

No comments:

Post a Comment