Tuesday, October 13, 2009

ஆர்‌த்‌தி‌-கணே‌ஷ்‌கர்‌ ஜா‌லி‌ கலா‌ட்‌டா‌...


இந்‌த மாதம் 23ம்‌ தே‌தி‌ நடக்கவிருக்கும் திருமண வேலைகளில் பரபரப்பாக இருக்கும் "மானாட மயிலாட' புகழ் ஆர்த்தி - கணேஷ் இருவரையும் ஒரு விழாவில் மடக்கிப் பிடித்தோம். இதோ அவர்களுடன் ஒரு ஜாலி கலாட்டா...

சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலும் நீங்கள் இருவரும் ஒன்றாக நடித்திருக்கிறீர்கள்? உங்கள் இருவரில் யார் முதன்முதலில் அன்பைத் தெரிவித்தீர்கள்?

ஆர்த்தி:அன்பைத் தெரியப்படுத்தியது என்று எதுவும் இல்லை. இருவரும் சிறுவயதிலிருந்து குடும்ப நண்பர்கள். அவரோட அம்மா இறந்த கொஞ்சநாள்லேயே அவுங்க பாட்டியும் இறந்துட்டாங்க. அவர்களுக்குப் பிறகு அவுங்க வீட்டைக் கவனித்துக் கொள்ள பெண்கள் யாரும் இல்லை. இந்தச் சமயத்தில் எங்கள் வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். ஆனால் அவருக்கு பெண் பார்க்க அவரது வீட்டில் யாரும் இல்லை. அப்பா மட்டும்தான். அவரும் அம்மா இறந்ததில் இருந்து ரொம்ப உடைந்து போய் இருந்தார். அதனால நாங்க ரெண்டு பேரும் மூணு மாதத்திற்கு முன்பு இது பற்றிப் பேசினோம். எங்க அப்பாவிடம் கலந்து சொல்றேன்னு சொன்னார். அவுங்க அப்பாவும் முறைப்படி வந்து எங்க வீட்ல பொண்ணு கேட்டார்.

உங்கள் இருவரையும் இணைத்து நிறையக் கிசுகிசு வந்ததே?
ஆர்த்தி:எங்களைப் பற்றி நிறைய கிசுகிசு எல்லாம் வந்தது. அது எங்களுக்கு ரொம்ப வருத்தமா இருக்கும். எங்க அம்மா ரொம்ப பீல் பண்ணுவாங்க. நல்ல பேமிலி, நல்ல பையன், நல்ல நட்பை இப்படிக் கெடுக்கிறாங்களேன்னு. இதனால் இரண்டு பேரோட பேரும் கெட்டுப் போகுதேன்னு கவலைப்பட்டாங்க. அந்த மாதிரி கிசுகிசு எல்லாம் வரும்போது அவர்களிடம் போய் சண்டை போட வேண்டும் என்று தோன்றும். அது போல கிசுகிசு வந்ததுனாலேயே நாங்கள் இரண்டு பேரும் ஒரு மூன்று மாதம் மீட் பண்ணவே இல்லை. அப்படி நாங்கள் காதலித்தால் இப்போ சொல்ற மாதிரி அப்பவே சொல்லிருக்கப் போறோம். இதுல என்ன வந்திருக்கு. நாங்க என்ன தப்பாவா முடிவெடுப்போம். உண்மையிலேயே காதல் கீதல் என்று ஒன்றும் கிடையாது. நீறைய சேர்ந்து நடித்திருக்கோம். அதனால வந்த வதந்திகள்.

உங்கள் இரண்டு பேரையும் கணவன் - மனைவியாகத்தான் மக்கள் நினைத்தார்கள். அதைப் பற்றி என்ன பீல் பண்ணுவீங்க?

கணேஷ்:எங்கள் இருவருக்கும் திருமணம் முடிவானது தெரிந்ததும் நிறையப் பேர் போன் பண்ணிக் கேட்டாங்க. இப்போதானா உங்கள் திருமணம். பேப்பர்ல செய்தி எல்லாம் கொடுத்து...காமெடியெல்லாம் பண்ணாதீங்க என்று சொன்னார்கள். கணேஷ் உண்மையைச் சொல்லு. முன்பே உனக்கு கல்யாணம் ஆகலன்னு சிலர் கேட்டாங்க. எனக்குத் தூக்கிப் போட்டுட்டு அடப்பாவிகளான்னு.

சின்ன வயதில் இரண்டு பேரும் ஒன்றாகப் படங்கள் நடித்திருக்கிறீர்கள்? வளர்ந்த பிறகு எப்போ எங்கே எப்படிச் சந்தித்தீர்கள்?

ஆர்த்தி:சின்ன வயசுல படங்கள் ஒண்ணா நடிச்சோம். அதன் பிறகு ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஓர் ஆறுவருடம் கழித்து சன் டிவியில சூப்பர்10 நிகழ்ச்சிக்காக மறுபடியும் இரண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து பண்ணினோம். முதல் நாள் சூட்டிங் ஸ்பாட்லதான் மீட் பண்ணினோம்.
கணேஷ்:சூப்பர் 10 நிகழ்ச்சியிலதான் சந்தித்தோம். முதல் சந்திப்பிலேயே அடி பின்னி எடுத்துட்டாங்க.
ஆர்த்தி:ஆறு வருஷம் தொடர்ந்து நடிச்சோம். அந்த நிகழ்ச்சியில எங்க ரெண்டு பேரோட ஜோடி நல்லா இருக்குன்னு கலைஞர் டிவியில கூப்பிட்டாங்க. கலைஞர் டிவியில் பல நிகழ்ச்சிகள் பண்ணினாலும் மானாட மயிலாடதான் எங்களுக்குப் பெரிய பிரேக் கொடுத்தது.

திருமணத்திற்குப் பின்பு தொடர்ந்து நடிப்பீங்களா?

கணேஷ்:வழக்கமாப் பெண்களைத்தானே கேட்பீங்க. இப்போ எங்களையும் கேட்க ஆரம்பிச்சிட்டீங்களா?
ஆர்த்தி:திருமணத் திற்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு திரும்ப வந்து நடிக்கிற மாதிரி பிட் போடறது எல்லாம் கிடையாது. கண்டிப்பா ரெண்டு பேருமே நடிப்போம். சினிமா எங்களுடைய தொழில் மட்டுமல்ல. உயிர்.

No comments:

Post a Comment