Friday, January 7, 2011

எங்‌கள் வீ‌ட்‌டு சீ‌ரி‌யல்

"செல்லமே', "மகள்", "உறவுகள்' என சன்
தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் மூன்று
தொடர்களில் நடித்து வருபவர் சிநேகா
நம்பியார். இவர் தமிழில் மட்டும் இல்லாமல்
கன்னடம், தெலுங்கு சின்னதிரை உலகிலும்
கால்பதித்தவர். மழை ஓய்ந்திருந்த ஒரு மாலை
வேளையில் அவரை சந்தித்தோம். சில்லென காற்று வீச பதில்களும் குளுமையாகவே வந்தன.
"செல்லமே' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
இது போன்று ஒரு தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததே ரொம்ப சந்தோஷமா இருக்கு. குறிப்பா சொல்லணும்னா ராதிகா மேடம்கூட சேர்ந்து நடிப்பது இரட்டிப்பு சந்தோஷமா இருக்கிறது. படப்பிடிப்பில் பார்த்தால் ஒரு குடும்பமாக ஜாலியா இருக்கும். அதில் வருவது போன்று ஒரு பாந்தமான கேரக்டரில் நான் இதுவரை வேறு எந்த தொடரிலும் செய்யவில்லை. கடந்த இரண்டு மாதமா என் டிராக் அவ்வளவாக வரவில்லை. மற்றபடி இந்தத் தொடரில் நடிப்பது ரொம்ப நல்ல அனுபவம்.
வேறு என்ன தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
"செல்லமே' தவிர "மகள்', "உறவுகள்' இந்த இரண்டு தொடரிலும் நடித்து வருகிறேன். "மகள்' தொடரில் மது என்ற கேரக்டர் செய்கிறேன். அதில் நெகட்டீவ்வாக ஆரம்பித்த என் கேரக்டர் இப்பொழுது பாஸிட்டீவ்வாக மாறிவிட்டது. "உறவுகள்' தொடரிலும் ஒரு நல்ல கேரக்டர் செய்கிறேன்.
வில்லத்தனமான கேரக்டர் அல்லது குடும்பப்பாங்கான கேரக்டர்... உங்களுக்கு எது
பிடித்திருக்கிறது?
நெகட்டீவ் கேரக்டர் செய்யும் பொழுது நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. வில்லத்தனமான கேரக்டர் தான் நம் திறமையை வெளிக்கொண்டு வரும். ஒவ்வொரு எபிசோடிலும் அடுத்து இந்த வில்லி கேரக்டர் என்ன செய்யப் போகிறாள் என்று ரசிகர்களிடம் ஆவலும் எதிர்பார்ப்பும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். நல்லவளாக ஈசியா நடித்து விடலாம்.
ஆனால் வில்லியாக இருப்பது அவ்வளவு சுலபமல்ல. அதே சமயம் பாஸிட்டீவ் ரோல் வழக்கமான கேரக்டராக இருந்தாலும் ரசிகர்களின் அனுதாபமும் ஆதரவும் நமக்கு நிறைய கிடைக்கும். அதனால ஒரே மாதிரியான கேரக்டராக இல்லாமல் எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிக்க வேண்டும். ஒரு தொடரில் நெகட்டீவ் என்றால் அடுத்த தொடரில் பாஸிட்டீவாக நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை.
நீங்கள் கன்னட சினிமாத்துறையில் இருந்து
வந்தவரா?
ஆமாம், சொந்த ஊர் பெங்களுரூ. நான் பதினோராம் வகுப்பு படிக்கும் பொழுதே கன்னட இண்டஸ்ட்ரியில் நடிக்க வந்துவிட்டேன். நிறைய கன்னட தொடர்களில் நடித்திருக்கிறேன். அதிலிருந்து தெலுங்கு இண்டஸ்ட்ரியில் வாய்ப்பு கிடைத்தது. அங்கேயும் தொடர்களில் நடித்திருக்கிறேன். அதன் பிறகு தான் தமிழ் இன்டஸ்ட்ரிக்குள்ள வந்தேன். úஸன் மீடியா தான் "அகல்யா' என்ற தொடருக்காக என்னை முதன்முதலில் தமிழில் அறிமுகப்படுத்தினார்கள். இப்போ இங்கேயே செட்டிலாகி சென்னைவாசி ஆகிட்டேன்.
உங்கள் குடும்பம்?
என் அப்பா, அம்மா பெங்களூருவில்தான் இருக்கிறார்கள். அங்கே ஒரு பள்ளிகூடம் நடத்திவருகிறார்கள். ஒரு அண்ணன், ஒரு தங்கை. என் கணவர் குடும்பத்தினர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழில் நடிக்க வந்தவுடனேயே எனக்கு திருமணம் ஆகிவிட்டது. எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் மாமியார், மாமனார், என் கணவர் என எல்லாருமே கூட்டுக் குடும்பமாக இருக்கிறோம். சீரியலில் கூட்டுக் குடும்பமாக காட்டுவார்களே அதுபோலத்தான் இருக்கும் எங்கள் வீட்டிலும்.

No comments:

Post a Comment